Friday, May 20, 2016

SIRIPPEN SIRIPPEN - CHINNANJIRU ULAGAM


படம்: சின்னஞ்சிறு உலகம்
குரல்: சீர்காழி கோவிந்தராஜன், எல்.ஆர். ஈஸ்வரி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடல்: வாலி 

சிரிப்பேன் சிரிப்பேன் சிரித்துக்கொண்டிருப்பேன்
மூச்சும் பேச்சும் உள்ளவரை
நினைப்பேன் நினைப்பேன் நினைத்துக்கொண்டிருப்பேன்
நெஞ்சில் நினைவு நீங்கும் வரை
சிரிப்பேன் சிரிப்பேன் சிரித்துக்கொண்டிருப்பேன்
மூச்சும் பேச்சும் உள்ளவரை - உன்னை
நினைப்பேன் நினைப்பேன் நினைத்துக்கொண்டிருப்பேன்
நெஞ்சில் நினைவு நீங்கும் வரை
அடி ஆயாயாயாய அக்கூ
இருப்பேன் இருப்பேன் இருந்துக்கிட்டிருப்பேன்
ஒங்கிட்ட சிரிப்பு உள்ளவரை
ரசிப்பேன் ரசிப்பேன் ரசிச்சிக்கிட்டிருப்பேன்
கடோசி மூச்சு நிக்கும் வரை
இருப்பேன் இருப்பேன் இருந்துக்கிட்டிருப்பேன்
ஒங்கிட்ட சிரிப்பு உள்ளவரை
ரசிப்பேன் ரசிப்பேன் ரசிச்சிக்கிட்டிருப்பேன்
கடோசி மூச்சு நிக்கும் வரை - என்
கடோசி மூச்சு நிக்கும் வரை
ஒரு பல்லவி என்பது நீயாக - அனு
பல்லவி என்பது நானாக - மனம்
சரணம் சரணம் என்றாக - இசை
பாடிடுவோம் நாம் ஒன்றாக
மலைக் காட்டுக்குள் ஊரணி நானாக - அதில்
கவலை ஏத்தம் நீயாக - நல்ல
நல்ல மானம் வெட்கம் வரப்பாக - நாம்
வாழ்ந்து காட்டணும் பொறுப்பாக

சிரிப்பேன் சிரிப்பேன் சிரித்துக்கொண்டிருப்பேன்
மூச்சும் பேச்சும் உள்ளவரை - உன்னை
நினைப்பேன் நினைப்பேன் நினைத்துக்கொண்டிருப்பேன்
நெஞ்சில் நினைவு நீங்கும் வரை

உன் கண்களில் பூத்தது அல்லிப்பூ - இரு
கன்னத்தில் சேர்ந்தது ரோஜாப்பு உன்
உள்ளத்தில் இருப்பது பூரிப்பு - இரு
உதட்டில் இருப்பது புன்சிரிப்பு
இது சினிமாக் காரங்க அளப்பு அதைப்
படிச்சிட்டுத் தான் இந்த வர்ணிப்பு
சினிமாக் காரங்க அளப்பு அதைப்
படிச்சிட்டுத் தான் இந்த வர்ணிப்பு - சொந்த
மூளைக்கு வேண்டும் ஒளப்பு - அது
என்னைக்கும் நெரந்தரப் பொளப்பு

சிரிப்பேன் சிரிப்பேன் சிரித்துக்கொண்டிருப்பேன்
மூச்சும் பேச்சும் உள்ளவரை - உன்னை
நினைப்பேன் நினைப்பேன் நினைத்துக்கொண்டிருப்பேன்
நெஞ்சில் நினைவு நீங்கும் வரை
இருப்பேன் இருப்பேன் இருந்துக்கிட்டிருப்பேன்
ஒங்கிட்ட சிரிப்பு உள்ளவரை
ரசிப்பேன் ரசிப்பேன் ரசிச்சிக்கிட்டிருப்பேன்
கடோசி மூச்சு நிக்கும் வரை - என்
கடோசி மூச்சு நிக்கும் வரை

No comments:

Post a Comment