Tuesday, May 10, 2016

YENO ENAI AZAIKKALAANAAI - THOODHU PO SELLAKKILIYE - SPB CHITHRA


படம் : தூது போ செல்லக்கிளியே
இசை : தேவா
பாடியவர்கள் : எஸ் பி பி சித்ரா


ஏனோ எனை அழைக்கலானாய் அழகு மடமானே
மடமானே
ஏதோ ரகசியத்த காதில் உரைக்க வந்த தேனே
அடி தேனே
வெள்ளி கொலுசு கட்டி
தந்தன தந்தன தந்தன தந்தன
துள்ளி நடக்கும் குட்டி
தந்தன தந்தன தந்தன தந்தன
வெள்ளி கொலுசு கட்டி துள்ளி நடக்கும் குட்டி
விடிகால பனிபோல வந்த எந்தன் தங்ககட்டி

ஏனோ உனை அழைக்கலானேன் அழகு மடமானே
மடமானே
காதல் ரகசியத்த காதில் உரைப்பதற்கு தானே
அடி தேனே

சொக்கு பொடிய எடுத்து மொகத்தில்  தெளிச்சு
எள மனசை கெடுத்தாயே
செக்கு ஒலக்க போல வளைச்சு வளைச்சு
என்னை நீ தேடிப் பிடிச்சாயே
அஹான்....
சின்னப்பொண்ணு கண்ணுக்குள்ள வெட்கம் வழிய
சிமிட்டுது சிமிட்டுது மேல் முழிய
சந்தனப்பூ கன்னம் ரெண்டும் செவப்பெடுக்க
சம்மதத்தை தந்திடுச்சு கட்டிப்புடிக்க
அடி தாவி நடக்கும் தாழம் குடையே

ஏனோ உனை அழைக்கலானேன் அழகு மடமானே
மடமானே
காதல் ரகசியத்த காதில் உரைப்பதற்கு தானே
அடி தேனே

மஞ்ச குளிச்ச முகமே மலர்ந்த சுகமே
மணம் கமழும் மலர் சரமே
கொஞ்சிக் குலவும் குயிலே குலுங்கும் மயிலே
குளுந்து வந்த மாலைப் பொன் வெயிலே
ஹோ கரும்புக்குள் இனிப்ப வளர்த்து வெச்சேன்
எரும்புக்கு அத நா எடுத்து வெச்சேன்
அரும்புக்குள் மணத்த அடக்கி வெச்சேன்
அத நா உனக்குன்னு குடுத்து வச்சேன்
நீ வாரி அணைச்சா வாசம் கொடுப்பேன்

ஏனோ உனை அழைக்கலானேன் அழகு மடமானே
மடமானே
காதல் ரகசியத்த காதில் உரைப்பதற்கு தானே
அடி தேனே
வெள்ளி கொலுசு கட்டி
தந்தன தந்தன தந்தன தந்தன
துள்ளி நடக்கும் குட்டி
தந்தன தந்தன தந்தன தந்தன
வெள்ளி கொலுசு கட்டி துள்ளி நடக்கும் குட்டி
விடிகால பனிபோல வந்த எந்தன் தங்ககட்டி

ஏனோ உனை அழைக்கலானேன் அழகு மடமானே
மடமானே
ஏதோ ரகசியத்த காதில் உரைக்க வந்த தேனே
அடி தேனே






No comments:

Post a Comment