Wednesday, May 11, 2016

INDHA NILAVUKKU VAYADHENNA - AVALA IVAL - SPB SWARNA


திரைப்படம் : அவளா இவள்
இசை : எஸ் . பாலசந்தர்
பாடியவர்கள் : எஸ் பி பி ஸ்வர்ணா


ரா ரா ரரர ரா ஹே
லா ல  லா லா ல லா
லா ல லா லா ரு ரு ரூ லலல்ல ஹே ஹே
ம்ம் ம்ம் ம்ம்

இந்த நிலவுக்கு வயதென்ன பதினாறா
இது கால் கொண்டு நடக்கின்ற பாலாறா
உந்தன் கண்ணுக்கு நான் என்ன வெண்ணிலவா
என்னை கட்டிக்கொள்ள இது என்ன நள்ளிரவா

பூந்துயில் ஒரு பாதி பூங்குழல் ஒரு பாதி
மூடிய திருமேனி முக்கனி கொண்டாடும்
மூவகை கனிதேடி மன்னவன் வரும்போது
நால்வகை குணம் வந்து நெஞ்சில் நின்றாடும்

இந்த நிலவுக்கு வயதென்ன பதினாறா
இது கால் கொண்டு நடக்கின்ற பாலாறா
உந்தன் கண்ணுக்கு நான் என்ன வெண்ணிலவா
என்னை கட்டிக்கொள்ள இது என்ன நள்ளிரவா

பூமழை தூவிய பஞ்சணை மேவிய
பைங்கிளி போல் உன்னை அள்ள வேண்டும்
மாலைமயங்கிய வேளை தொடங்கிட
மந்திரம் யாவையும் சொல்ல வேண்டும்
இன்னும் இன்னும் சொல்ல சொல்ல
என்னவோ எண்ணம் வந்து
சொல்லு சொல்லு என்று என்னை கெஞ்ச வேண்டும்
அந்த சுகம் என்னவென்று போகப்போக கண்டு கொண்டு
அள்ளி அள்ளி தந்த பின்பு என்ன வேண்டும்
நீ கடலாட்டம் நான் ஒரு படகாட்டம்
நீந்திடும்  மனம் உண்டு நித்தமும் வெள்ளோட்டம்
நித்தமும் இதுபோலே முத்திரை பதித்தாலே
சித்திரக்கொடியாளின் நித்திரை என்னாகும்

இந்த நிலவுக்கு வயதென்ன பதினாறா
இது கால் கொண்டு நடக்கின்ற பாலாறா
உந்தன் கண்ணுக்கு நான் என்ன வெண்ணிலவா
என்னை கட்டிக்கொள்ள இது என்ன நள்ளிரவா
அஹாஹா ஹும்ம் ம்ம் ம்ம்


No comments:

Post a Comment