Wednesday, May 11, 2016

THAAMARAIKKODI THARAIYIL VANDHADHEPPADI - AANANDHAKKUMMI - SPB


திரைப்படம்: ஆனந்தக்கும்மி
பாடியவர் : எஸ் பி பி
இசை: இளையராஜா

தாமரைக்கொடி தரையில் வந்ததெப்படி
மல்லிகைக்கொடி உந்தன் மனதில் என்னடி

தாமரைக்கொடி தரையில் வந்ததெப்படி
மல்லிகைக்கொடி உந்தன் மனதில் என்னடி

தாமரைக்கொடி தரையில் வந்ததெப்படி
மல்லிகைக்கொடி உந்தன் மனதில் என்னடி
உனை நாடி வாடினேன் சுவரேறி ஓடினேன்
பலன் இல்லை என்பதால் இன்று பாதை மாறினேன்

தாமரைக்கொடி தரையில் வந்ததெப்படி
மல்லிகைக்கொடி உந்தன் மனதில் என்னடி

காலை வேளை ஒரு கனவு வந்ததடி உருகினேன்
பாட நூலில் தினம் செல்வி துணை என்று எழுதினேன்
வீட்டுப் பூனை நான் வேங்கை போலவே மாறினேன்
நேரம் வந்ததடி நானும் எல்லைகளை மீறினேன்
வேலை செய்வதில் நான் காதல் மன்னனே...ஹஹா
லீலை செய்வதில் நான் பாதி கண்ணனே
அல்லி ராணி அள்ள வா நீ அர்ஜுனன் நானே

தாமரைக்கொடி தரையில் வந்ததெப்படி
மல்லிகைக்கொடி உந்தன் மனதில் என்னடி
உனை நாடி வாடினேன் சுவரேறி ஓடினேன்
பலன் இல்லை என்பதால் இன்று பாதை மாறினேன்

தாமரைக்கொடி தரையில் வந்ததெப்படி
மல்லிகைக்கொடி உந்தன் மனதில் என்னடி

மூக்கின் மீது நிறம் மாறிப்போனதடி கோபமோ
என்னை மீறி ஒரு தந்தி வந்து விடக் கூடுமோ
பந்தம் உள்ளதில் சொந்தம் கொள்வது பாவமோ
ஆசை கோபமாய் வேஷம் போடுது நியாயமோ
லோகம் எங்குமே பனி தூவும் புல்வெளி
பாடி வந்து நீ விளையாடு பைங்கிளி
ஊடல் கொள்ள நேரம் இல்லை வரம் கொடு தோழி

ஹூ...தாமரைக்கொடி தரையில் வந்ததெப்படி
மல்லிகைக்கொடி உந்தன் மனதில் என்னடி
உனை நாடி வாடினேன் சுவரேறி ஓடினேன்
பலன் இல்லை என்பதால் இன்று பாதை மாறினேன்

தாமரைக்கொடி தரையில் வந்ததெப்படி
மல்லிகைக்கொடி உந்தன் மனதில் என்னடி

ருருரூருருர் ரரர தபாப ஷபபபபா
தர தரார ராப ரிப ஷப ...தரதார ரா

No comments:

Post a Comment