Friday, August 28, 2020

AAGAAYA SURIYANAI - SAMURAI



படம்: சாமுராய் 
பாடல்: வைரமுத்து 
இசை: ஹாரிஸ் ஜெயராஜ் 
குரல்: ஹரிஷ் ராகவேந்திரா, ஹரிணி 

ஆகாயச் சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றிச் சுட்டியில் ஒட்டியவள்
ஆகாயச் சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றிச் சுட்டியில் ஒட்டியவள்
இவள் தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்

கொடி நான் உன் தேகம் முற்றும் சுற்றிக் கொண்ட 
கொடி நான் என் எண்ணம் எதுவோ???

கிளி தான் உனை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் 
கிளி தான் உனை கொஞ்சும் எண்ணமோ???

ஆகாயச் சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றிச் சுட்டியில் ஒட்டியவள்
நீதானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்
அடியே என் தேகம் முற்றும் சுற்றிக் கொண்ட 
கொடியே உன் எண்ணம் என்னவோ???
சகியே எனை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் 
கிளியே எனை கொல்லும் எண்ணமோ???

(இசை)
காதல் பந்தியில் நாமே உணவு தான் 
உண்ணும் பொருளே உன்னை 
உண்ணும் விந்தை இங்கே தான்
காதல் பார்வையில் பூமி வேறு தான் 
மார்கழி வேர்க்கும் சித்திரை குளிரும் 
மாறுதல் இங்கே தான்
உன் குளிருக்கு இதமாய் 
என்னை அடிக்கடி கொளுத்து
என் வெயிலுக்கு சுகம்தான் 
உன் வியர்வையில் நனைத்து
காதல் மறந்தவன் காமம் கடந்தவன் 
துறவை துறந்ததும் சொர்க்கம் வந்தது

ஆகாயச் சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றிச் சுட்டியில் ஒட்டியவள்
நீதானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்

என்னை கண்டதும் ஏன் நீ ஒளிகிறாய்
டோரா போரா மலை சென்றாலும் 
துரத்தி வருவேனே
உன்னை நீங்கினால் எங்கே செல்வது உன்
உள்ளங்கையில் ரேகைக்குள்ளே 
ஒளிந்து கொள்வேனே
அடி காதல் வந்தும் ஏன் கண்ணாமூச்சி
நீ கண்டு கண்டு பிடித்தால் பின் காமன் ஆட்சி
கத்தி பறித்து நீ பூவை கிழிக்கிறாய் 
பாரம் குறைந்ததில் ஏதோ நிம்மதி

ஆகாயச் சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
இவள் தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்

அடியே என் தேகம் முற்றும் சுற்றிக் கொண்ட 
கொடியே உன் எண்ணம் என்னவோ???
சகியே எனை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும்
கிளியே எனை கொல்லும் எண்ணமோ???