Thursday, December 29, 2016

PAZHAMUDHIR CHOLAI ENAKKAGA THAAN - VARUSHAM 16



படம்: வருஷம் 16
இசை: இளையராஜா
குரல்: KJ ஜேசுதாஸ்
பாடல்: வாலி


பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்
நாந்தான் அதன் ராகம் தாளமும்
கேட்பேன் தினம் காலை மாலையும்
கோலம் அதன் ஜாலம் 
இங்கு ஓராயிரம்
(பழமுதிர்..)

தூரத்தில் போகின்ற மேகங்களே
தூறல்கள் போடுங்கள் பூமியிலே
வேர்க்கொண்ட பூஞ்சோலை நீர்க்கொண்டு ஆட
ஏரியில் மீன்கொத்தும் நாரைகளே
இறகுகள் எனக்கில்லை தாருங்களேன்
ஊர் விட்டு ஊர் சென்று காவியம் பாட
பறவைகள் போல் நாம் பறந்திட வேண்டும்
பனிமலை மேல் நாம் மிதந்திட வேண்டும்
ஏதோ ஒரு போதை மனம் கொண்டாடுதே
(பழமுதிர்..)

பந்தங்கள் யாவும் தொடர்கதை போல்
நாளும் வளர்ந்திடும் நினைவுகளால்
நூலிழை போல் இங்கு நெருங்கிய இதயங்கள்
பாலுடன் நெய்யெனக் கலந்திடும் நாள்
தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
சிந்தை இனித்திட உறவுகள் மேவி
பிள்ளைகள் பேணி வளர்த்தது இங்கே
மண்ணில் இதைவிட சொர்க்கமெங்கே
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை
இலக்கியம் போல் எங்கள் குடும்பமும் விளங்க
இடைவிடாது மனம் ஒரு மகிழ்ச்சியில் திளைத்திட
(பழமுதிர்..)

KANNALE KADHAL KAVIDHAI - ATHMA



படம்: ஆத்மா
இசை: இளையராஜா
குரல்: ஜேசுதாஸ், எஸ்.ஜானகி
பாடல்: வாலி

கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக
கண்ணாளன் ஆசை மனதைத் தந்தானே அதற்காக
கல்லூரி வந்து போகும் வானவில் நீதான்
அழகே நீ எங்கே என் பார்வை அங்கே
(கண்ணாலே)
கடற்கரைதனில் நீயும் நானும் உலவும்பொழுது
பறவையைப் போல் கானம் பாடி பறக்கும் மனது
இங்கு பாய்வது புதுவெள்ளமே
இணை சேர்ந்தது இரு உள்ளமே
குளிர்வாடை தான் செந்தளிரிலே
இந்த வாலிபம் தன் துணையிலே
இளமேனி உன் வசமோ
(கண்ணாலே)
உனக்கென மணிவாசல் போலே மனதைத் திறந்தேன்
மனதிற்குள் ஒரு ஊஞ்சல் ஆடி உலகை மறந்தேன்
வளையோசைகள் உன் வரவைக் கண்டு
இசை கூட்டிடும் என் தலைவன் என்று
நெடுங்காலங்கள் நம் உறவைக் கண்டு
நமை வாழ்த்திட நல் இதயம் உண்டு
இன்ப ஊர்வலம் இதுவோ
(கண்ணாலே)

Monday, December 26, 2016

THANGA MAGAL THULLI VANDHAAL - THIRUPPAM


http://www.saavn.com/s/song/tamil/Thiruppam/Thangamagal-Allithanthal/HAc0fRtWTUU

படம்: திருப்பம்
குரல்: எஸ்.பி.பி., எஸ்.ஜானகி
இசை: எம்.எஸ்.வி.
பாடல்: புலமைப்பித்தன்

தங்க மகள் துள்ளி வந்தாள்
முத்து நகை அள்ளித் தந்தாள்
வெற்றி என்னைத் தேடி வரும் நன்னாளிது
எண்ணப்படி வாழ்வு தரும் பொன்னாளிது
புத்தாண்டு வாழ்த்துகள்
எல்லோரும் பாடுங்கள்
தங்க மகள் துள்ளி வந்தாள்
முத்து நகை அள்ளித் தந்தாள்


மெய்வண்ணம் கைவண்ணம் தேடும்
உடல் மேலுக்கும் கீழுக்கும் ஆடும்
என் நெஞ்சும் உன் நெஞ்சும் கூடும்
சுகம் என்னென்று பெண்ணின்று பாடும்
சித்தரித்த பெண்ணழகு
செண்டு கட்டும் முன்னழகு
சிக்கவைக்கும் கண்ணழகும்
பொல்லாதது..


வெற்றி உன்னைத் தேடி வரும் நன்னாளிது
எண்ணப்படி வாழ்வு தரும் பொன்னாளிது
புத்தாண்டு வாழ்த்துகள்
எல்லோரும் பாடுங்கள்
தங்க மகள் துள்ளி வந்தாள்
முத்து நகை அள்ளித் தந்தாள்


கார்கூந்தல் மாணிக்கப்பந்தல்
இது கண்ணல்ல எண்ணத்தின் வாசல்
உன் தேகம் என் காதல் நாவல்
பக்கம் ஒவ்வொன்றும் வாசிக்க ஆவல்
அச்சடித்த புத்தகத்தை
அட்டைப்பட சித்திரத்தை
இச்சைப்படி தொட்டுப்படி
இன்றாவது....


வெற்றி என்னைத் தேடி வரும் நன்னாளிது
எண்ணப்படி வாழ்வு தரும் பொன்னாளிது
புத்தாண்டு வாழ்த்துகள்
எல்லோரும் பாடுங்கள்
புத்தாண்டு வாழ்த்துகள்
எல்லோரும் பாடுங்கள்



Sunday, December 18, 2016

THANGA KUDATHUKKU POTTUM ITTEN - MARIAMMAN THIRUVIZHA



படம்: மாரியம்மன் திருவிழா
இசை: இளையராஜா
குரல்: பி.சுசீலா
பாடல்: கண்ணதாசன்

தங்கக் குடத்துக்கு பொட்டும் இட்டேன்
தாமரைப் பூவுக்கு மையும் இட்டேன்
விழி மொட்டுக்குள்ளே எழுந்த முத்துக்களோ
அன்னத்தின் பிள்ளை நீயடி கண்ணே
ஆனந்த வீணையே தாலேலோ
எந்தன் அற்புத ராகமே தாலேலோ (தங்கக்)

சந்தனம் சேற்றினில் வீழ்ந்தாலும்
சந்தனம் வாசம் போவதில்லை
சொல்பவர் சொல்லட்டும் ஆயிரமே
தோகையின் வாழ்வில் ஓர் மனமே

நான் வேங்கட நாயகி அலமேலு
என்னிடம் தவறேது - கண்ணே
ஆனந்த வீணையே தாலேலோ
எந்தன் அற்புத ராகமே தாலேலோ (தங்கக்)


தந்தைக்குத் தான் இந்த முந்தானை
தந்தை கொடுத்தான் செந்தேனை
தாயறிந்தே வரும் பிள்ளையடா
தாரம் தரம் கெட்டதில்லையடா

நன்றாய் அறிந்தவள் மாரியம்மா
அவளின்றி காரியமா -  கண்ணே

ஆனந்த வீணையே தாலேலோ

எந்தன் அற்புத ராகமே தாலேலோ (தங்கக்)


தேவகி கொண்டது சிறை வாசம்
கண்ணன் பிறந்ததும் தீர்ந்தடா
சீதை புரிந்தது வனவாசம்
திருமகன் வந்ததும் மறைந்ததடா
நெருப்பினையே அவள் சாட்சி வைத்தாள்
நானே நெருப்பல்லவோ - கண்ணே
ஆனந்த வீணையே தாலேலோ
எந்தன் அற்புத ராகமே தாலேலோ (தங்கக்)

Wednesday, December 7, 2016

NILAVU VANDHU VAANATHAIYE THIRUDI KONDADHU - THIRUDI - SPB PS

 
FILM : THIRUDI
SINGERS: SPB PS
MUSIC: MSV
 
நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது
நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது
நீலக்கண்ணன் உன்னழகை திருடிக் கொண்டது
நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது

மனது கொஞ்சம் உறங்கும் போது கனவு வந்தது
மனது கொஞ்சம் உறங்கும் போது கனவு வந்தது
அது மலர்ந்த போது உன்னை பற்றி நினைவு வந்தது
அது மலர்ந்த போது உன்னை பற்றி நினைவு வந்தது
மனது கொஞ்சம் உறங்கும் போது கனவு வந்தது
அது மலர்ந்த போது உன்னை பற்றி நினைவு வந்தது
நினைவு வந்தது

மின்னாமல் வந்த மேகம் கடலைத் திருடிக் கொண்டது
மேகம் தந்த மழையினையோ பூமி திருடி கொண்டது
மின்னாமல் வந்த மேகம் கடலைத் திருடிக் கொண்டது
மேகம் தந்த மழையினையோ பூமி திருடி கொண்டது
பெண்ணாக பிறந்த பேர்கள் உள்ளம் திருடிக் கொள்வது
பெண்ணாக பிறந்த பேர்கள் உள்ளம் திருடிக் கொள்வது
இந்நாளில் மட்டும் அல்ல எந்நாளும் உள்ளது

நிலவு வந்து வந்ததே திருடிக் கொண்டது
திருடிக் கொண்டது

காக்கை போல் இருந்த ஒன்று குயிலைப் போல வந்தது
கண்ணாளன் தலையில் ஏறிக் கூடு கட்டி கொண்டது
பொல்லாத உவமை உன்னை காக்கை என்று சொல்வது
என் பொன்னான பச்சைக் கிளி என்னைத் தேடி வந்தது

நிலவு வந்து வந்ததே திருடிக் கொண்டது
திருடிக் கொண்டது

இந்நேரம் சொன்ன கதை எனக்கு மட்டும் தெரிந்தது
இப்போது நடப்பதுதான் உனக்கும் கூட புரிந்தது
கண்ணாலே சொல்வது தான் காதலிலே புதியது
கடலாளம் சிறியதம்மா பெண் மனது பெரியது

நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது
நீலக்கண்ணன் உன்னழகை திருடிக் கொண்டது
நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது

PONNAI NAAN PAARTHTHADHILLAI - KANNAAMOOCHCHI - SPB - KANNADAASAN



திரைப்படம்: கண்ணாமூச்சி
இசை: வி.குமார்.

பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத்தான் பார்த்ததுண்டு
பூவை நான் கண்டதில்லை
பூவையைக் கண்டதுண்டு

பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத்தான் பார்த்ததுண்டு
பூவை நான் கண்டதில்லை
பூவையைக் கண்டதுண்டு
இந்த பூமியின் இன்ப தேவதை அன்பு ராகம் நீயேதான்
எந்தன் கோவிலில் மஞ்சள் ஓவியம் காதல் தீபம் நீயேதான்

பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத்தான் பார்த்ததுண்டு
பூவை நான் கண்டதில்லை
பூவையைக் கண்டதுண்டு

தாலாட்டும் மேகங்கள் நானல்லவா நடமாடும் மாமயில் நீயல்லவா தாலாட்டும் மேகங்கள் நானல்லவா நடமாடும் மாமயில் நீயல்லவா
எனது கை வீணை ராகங்களே என் உயிரே உன் வார்த்தைகளே
பாடுவது என் மனது ஆடுவது உன் மனது

பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத்தான் பார்த்ததுண்டு
பூவை நான் கண்டதில்லை
பூவையைக் கண்டதுண்டு

மணக்கோலம் நீ காணும் நன்நாள் எது
மாப்பிள்ளை ஊர்கோல பொன்நாள் எது
மணக்கோலம் நீ காணும் நன்நாள் எது
மாப்பிள்ளை ஊர்கோல பொன்நாள் எது
குங்குமச்சாந்து கோலம் இட்டு நீ வரும் காலம் நேரம் எது
வாழியவே ஓவியங்கள் ஏழை நெஞ்சின் காவியங்கள்

பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத்தான் பார்த்ததுண்டு
பூவை நான் கண்டதில்லை
பூவையைக் கண்டதுண்டு


பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத்தான் பார்த்ததுண்டு
பூவை நான் கண்டதில்லை
பூவையைக் கண்டதுண்டு