Thursday, June 30, 2016

MANASUKKUL UTKARNDHU - KALYANA AGADHIGAL



படம்: கல்யாண அகதிகள்
குரல்: ராஜ் சீதாராமன், பி.சுசீலா
இசை: வி.எஸ். நரசிம்மன்
பாடல்: வைரமுத்து

மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய் - என்
மௌனத்தை இசையாக மொழிபெயர்த்தாய்
இளகாத என் நெஞ்சில் இடம் பிடித்தாய்
இன்று என் காதல் தேருக்கு வடம் பிடித்தாய்

மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக மொழிபெயர்த்தாய்

காதலின் செய்திகள் கண்களில் உள்ளது
அதை நான் படிக்க மொழி கிடையாது
காதலே நம்மிடம் கையொப்பம் கேட்டது
இனிமேல் உலகில் தடை கிடையாது
நாணம் கொண்டதே என் பூவனம்
பெண்மை ஒன்றுதான் என் சீதனம்
அடடா இது தான் ஆலிங்கனம்

மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய் - என்
மௌனத்தை இசையாக மொழிபெயர்த்தாய்
இளகாத என் நெஞ்சில் இடம் பிடித்தாய்
இன்று என் காதல் தேருக்கு வடம் பிடித்தாய்
மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக மொழிபெயர்த்தாய்


கண்களில் காதலின் முன்னோட்டம் பார்த்தபின்
இதயம் முழுதும் எதிரொலி கேட்டேன்
மாலையில் சோலையில் இளந் தென்றல் வேளையில்
காண்போம் கற்போம் என்றுனைக் கேட்டேன்
கண்மணிப் பூங்காவில் காத்திருந்தேன்
கண்ணே  தடங்கலுக்கு வருத்தம் சொன்னேன்
விழியில் ஒளியும் ஒலியும் கண்டேன்

மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய் - என்
மௌனத்தை இசையாக மொழிபெயர்த்தாய்
இளகாத என் நெஞ்சில் இடம் பிடித்தாய்
இன்று என் காதல் தேருக்கு வடம் பிடித்தாய்

மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக மொழிபெயர்த்தாய்

KAATHIRUKKEN KADHAVA THIRANDHU - MR. BHARAT - SPB SJ



FILM: MR. BHARAT
SINGER: SPB SJ
MUSIC: ILAIYARAAJAA
LYRICS: VAALI

 காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு வாடி
காதல் செய்ய கத்துக் கொடுப்பேன் முன்னுக்கு வாடி

காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு வாடி
காதல் செய்ய கத்துக் கொடுப்பேன் முன்னுக்கு வாடி
நான் வாடை புடிக்கும் மல்லிகப் பூவே
வண்ணப் புறாவே வா
கை தொட்டதும் தொட்டு சம்மதப் பட்டு வா

காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு வாடி
காதல் செய்ய கத்துக் கொடுப்பேன் முன்னுக்கு வாடி

எங்கேயோ ஐஸ் ஆச்சு சிலு சிலுப்பாச்சு
இங்க தான் சூடாச்சு எரியுது மூச்சு
லல்லல்லால லல்லல்லால லல்லல்லால லா..
என்னவோ ஆயாச்சு இனி என்ன பேச்சு
பழம் தான் பழுத்தாச்சு பசி எடுத்தாச்சு
என்ன வேணும் ராசா நீ கேட்டாத் தாரேன்
ஒண்ணு ஒண்ணா நான் தானே எடுத்துக்கப் போறேன்
நீ கன்னத்த கிள்ள என்னத்தச் சொல்ல நான்

காத்திருந்தேன் கதவ திறந்தேன் உள்ளுக்கு வந்தேன்
காதல் செய்ய கத்துத் தரணூம் முன்னுக்கு வந்தேன்
நீ வாடை புடிக்கும் மல்லிகப் பூவோ
வண்ணப் புறாவோ நான்
கை தொட்டதும் தொட்டேன் சம்மதப் பட்டேன் வா

காத்திருந்தேன் கதவ திறந்தேன் உள்ளுக்கு வந்தேன்
காதல் செய்ய கத்துத் தரணும் முன்னுக்கு வந்தேன்

பெட்டியில் பாலோடு புட்டிகளும் இருக்கு
வெண்ணையே தடவாத ரொட்டிகளும் இருக்கு
ம்ம்... ஹ ஹ ஹா ஹ ம்ம் ம்ம்...
ஒண்ணுமே வேணாமே உன்ன விட எனக்கு
உள்ளது எல்லாமே உன்னிடத்தில் இருக்கு
மத்தவங்க பாக்காட்டி கொடுப்பேன் நானே
ஹ..இப்போ இங்க ஆள் எது ரகசியம் தானே
நான் வெள்ளரிப் பிஞ்சு மெல்லவே கொஞ்சு வா

காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு வாடி
ஹஹ்ஹ..காதல் செய்ய கத்துத் தரணும்
முன்னுக்கு வந்தேன்

உள்ள தான் பாரேன்மா ஊட்டி மலைச் சாரல்
உள்ளத்தில் பாயாதோ ஊசி மழைத் தூறல்
அஹஹாஹ அஹஹாஹ அஹஹாஹாஹ
என்னவோ ஏதேதோ இன்பம் பொறந்தாச்சு
சொல்லவே தெரியாம என்ன மறந்தாச்சு
இன்னும் இன்னும் ஆனந்தம் தன்னால் புரியும்
சின்னப் பொண்ணு நான் தானே எனக்கென்னத் தெரியும்
நான் உள்ளத சொல்வேன் சொன்னதச் செய்வேன் வா

காத்திருந்தேன் கதவ திறந்தேன் உள்ளுக்கு வந்தேன்
காதல் செய்ய கத்துத் தரணும் முன்னுக்கு வந்தேன்
நான் வாடை புடிக்கும் மல்லிகப் பூவே
வண்ணப் புறாவே வா
கை தொட்டதும் தொட்டு சம்மதப் பட்டு வா

காத்திருந்தேன் கதவ திறந்தேன்
உள்ளுக்கு வந்தேன் ஹஹ்ஹ..
காதல் செய்ய கத்துக் கொடுப்பேன் முன்னுக்கு வாடி

RAAKAALA VELAIYILA - MAITHILI ENNAI KAADHALI - SPB SJ


FILM: MYTHILI ENNAI KAADHALI
MUSIC: TR
LYRICS: TR
INGERS: SPB SJ

ஹே..மா வூ ரி கா வூ ரி தா வூ ரி ரா வூ ரி
ஹோய் ஹரே ஹொய் ஹரே ஹொய் ஹரே ஹோய்..
ஜிம்பாக்கோ ஜிம்பாளி ஜிம்பல ஜிம்பா
யம்மாக்கோ யம்மாளி யம்பல யம்பா
லிபா லிபா கரா லிபா ஆ.. லிபா லிபா கரா லிபா
ஹும் ஹரே ஹும் ஹரே ஹும் ஹரே ஹும் ஹொய் ஹொய்
ஹும் ஹரே ஹும் ஹரே ஹும் ஹரே ஹும் ஹொய் ஹொய்

ஸ்..ராக்கால வேளையில ராசா நீ வாடயில
ராக்கால வேளையில ராசா நீ வாடயில
இள மேனி சூடாகுது இதம் தேடி போராடுது
இள மேனி சூடாகுது ஹா.இதம் தேடி போராடுது

ராக்கால வேளையிலே என் ராசாத்தி ஆடையிலே
ஸ்..என் மேனி சூடாகுது எதை தேடி போராடுது

ஏய்..ஏ ஏய்..ஏ ஏய்..ஏ ஏய்..ஏ ஹே ஹேய்..
ஆ..அர..ஓ..அர..ம்ம்..அர..ஏ..ஹோ.ஹோ.ஹோ

தேக வில்லை வளைத்தவனே
மோக கணை தொடுத்தவனே
வஞ்சி என்னை வதைப்பவனே
கொஞ்சி என்னை சிதைப்பவனே
உணர்வுகள் தவிக்குது உன்னை இங்கு அழைக்குது அம்மாடியோ
ஆ...
உதடுகள் துடிக்குது உள்ளமோ வெடிக்குது அம்மாடியோவ்

ஸ்..ராக்கால வேளையில
ஆ ஹா...ஹா...
ராசா நீ வாடயில
ஆஹா...ஹா...
என் மேனி சூடாகுது எதை தேடி போறாடுது

ஜிம்பாக்கோ ஜிம்பாளி ஜிம்பல ஜிம்பா
யம்மாக்கோ யம்மாளி யம்பல யம்பா

ஹே…தேவதையின் திருவடியில்
தவம் கிடந்து வரம் கேட்கவோ
மாதுளையின் மலர் மேனியில்
தவழ்ந்து வந்து சுகம் சேர்க்கவோ
பூஜையை தொடர்ந்திட பூச்சரம் உதிர்ந்திட அம்மாடியோ
ஆஹா...ஆ...
ஆவலை தூண்டிட காவலை தாண்டிட அம்மாடியோவ்

ஆ..ஹஹ்ஹஹ..ஹா...ராக்கால வேளையிலே
ஆ ஹா.....
என் ராசாத்தி நீ ஆடையிலே
ஆ ஹா.ஹா....
ஆஹா...ஆ... இள மேனி சூடாகுது
ஆஹா...ஆ...
இதம் தேடி போராடுது
அட ராக்கால வேளையிலே
ஆஹா...ஆ...
என் ராசா நீ வாடயில
ஆ..என் மேனி சூடாகுது
ஹ இதம் தேடி போராடுது

O VASANDHA RAAJA THEN SUMANDHA ROJA - NEENGAL KETTAVAI - SPB SJ


FILM: NEENGAL KETTAVAI
LYRICS: PULAMAI PITHAN
MUSIC: ILAIYARAAJAA
SINGERS: SPB SJ

ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா
என் தேகம் உன் தேசம்
எந்நாளும் சந்தோஷம் என்
தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே

ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா
என் தேகம் உன் தேசம்
எந்நாளும் சந்தோஷம் -என்
தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே

மென் பஞ்சு மேகங்கள்
உன் பிஞ்சுப் பாதங்கள்
மண் தொட்டதால் இன்று
செவ்வானம் போல் ஆச்சு
விண் சொர்க்கமே பொய் பொய்
என் சொர்க்கம் நீயே பெண்ணே
விண் சொர்க்கமே பொய் பொய்
என் சொர்க்கம் நீயே பெண்ணே
என் சொர்க்கம் நீ பெண்ணே
சூடிய பூச்சரம் வானவில் தானோ

ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா
என் தேகம் உன் தேசம்
எந்நாளும் சந்தோஷம் என்
தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே

ஆராதனை நேரம் ஆலாபனை ராகம்
அலைபாயுதே தாகம் அனல் ஆகுதே மோகம்
என் மேகமே வா வா
இதழ் நீரைத் தூவு
என் மேகமே வா வா
இதழ் நீரைத் தூவு
மன்மதக் கோயிலில் பால் அபிஷேகம்

ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா
உன் தேகம் என் தேசம்
எந்நாளும் சந்தோஷம் என்
தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே
ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா...ஓ

NAAN KATTILMELE KANDEN VENNILAA - NEEYAA- SPB PS


FILM: NEEYAA
SINGER: SPB PS
MUSIC: SHANKAR GANESH
LYRICS: KANNADAASAN

நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா
நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா
ஹோ..ஹோ...விழிகளில் தாபம் படமெடுத்தாடும்
விழிகளில் தாபம் படமெடுத்தாடும்
ஹோ... ஓ... ஹோ... ஓ... வேளையில் நான் வர
சீறுது சிணுங்குது ஏன்

நான் கட்டில்மேலே கண்டேன் வெண்ணிலா
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா

காலமெல்லாம் கண்ணா நான் காத்திருந்தேன்
கதை முடிக்க நந்நாளைப் பார்த்திருந்தேன்
காலமெல்லாம் கண்ணா நான் காத்திருந்தேன்
கதை முடிக்க நந்நாளைப் பார்த்திருந்தேன்
அது புரியாததா நான் அறியாததா
அது புரியாததா நான் அறியாததா
உன்னுள்ளம் என்னென்று தெரியாததா

எங்கே உன் தேன் கிண்ணம் இந்தா என் பூ முத்தம்
எங்கே உன் தேன் கிண்ணம் இந்தா என் பூ முத்தம்...தம்.. தம்.. தம்.
நான் கட்டில் மேலே காணும் வெண்ணிலா
உனை கட்டிக் கொண்டு பேசும் பெண்ணிலா

ஓரிடத்தில் நில்லாமல் நான் மிதக்க
வானகத்தில் எங்கேயோ நான் பறக்க
ஓரிடத்தில் நில்லாமல் நான் மிதக்க
வானகத்தில் எங்கேயோ நான் பறக்க
ஒரு உயிர் வாழ்ந்திட இரு உடல் வேண்டுமா
ஒரு உயிர் வாழ்ந்திட இரு உடல் வேண்டுமா
ஒன்றான பின்னாலே இரண்டாகுமா
அம்மாடி உன் ஆசை பொல்லாத பேராசை
அம்மாடி உன் ஆசை பொல்லாத பேராசை

நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா..ஆ...
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா

UNAI ETHANAI MURAI PAARTHALUM SALIPPADHILLAI - NEEYAA - SPB PS


FILM: NEEYAA
SINGERS: SPB PS
MUSIC: SHANKAR GANESH
LYRICS: KANNADAASAN

உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை
உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை
தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை
தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை
நம் இதழ் பாடும் சுகராகம் முடிவதில்லை

உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை

உடலோ அடடா தங்கச் சுரங்கம்
உலகம் மயங்கும் காதல் அரங்கம்
உடலோ அடடா தங்கச் சுரங்கம்
உலகம் மயங்கும் காதல் அரங்கம்
தாவும் கரங்கள் தேடும் சுகங்கள்
தாவும் கரங்கள் தேடும் சுகங்கள்
எதுவரை என்றாலும் இன்னும் இன்னும்
கொஞ்சம் என்பேனே

உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை

கலைகள் பயிலும் மாலைப் பொழுது
விடியும் வரையில் நீயும் தழுவு
கலைகள் பயிலும் மாலைப் பொழுது
விடியும் வரையில் நீயும் தழுவு
ஆடை களைந்து ஆசை கலந்து
ஆடை களைந்து ஆசை கலந்து
அளித்திடும் இன்பங்கள் என்ன என்ன
இன்னும் சொல்வேனோ

உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை

நி த மா ச ரி தா காதல் கனி நீ
கனி நீ பதமா காமம் தணி நீ
நி த மா ச ரி தா காதல் கனி நீ
கனி நீ பதமா காமம் தணி நீ
பாடும் சுரமோ தேடும் சுகமோ
பாடும் சுரமோ தேடும் சுகமோ
எதுவெனச் சொன்னாலும் இன்பம் இன்பம்
என்னைத் தந்தேனே

உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை
தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை
தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை
நம் இதழ் பாடும் சுகராகம் முடிவதில்லை

உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை

KAATULE KAMBANGAATULE - RAAJAKUMAARAN - SPB SJ



FILM: RAAJAKUMAARAN
SINGER: SPB SJ
MUSIC: ILAIYARAAJAA

 காட்டுலே கம்பங்காட்டுலே பாட்டுலே வந்த பாட்டுலே
ஏக்கமாச்சுதே ஹொய்.. தூக்கம் போச்சுதே
காத்து காத்து தான் காத்து வீசுது
மூச்சு காத்துல சூடேத்து
ராக்கு ராக்கம்மா ஹொய்..ஹொய்...போட்டு தாக்கம்மா
நோட்டம் போட்டம்மா ஹொய்..ஹொய்..வாட்டம் போக்கம்மா

காட்டுலே கம்பங்க்காட்டுலே

சித்தாடைக்குள் மத்தாப்பூ பூத்து ஆசை என்னைக்கொல்ல
கொத்துமல்லி வித்தாரம் சொல்லி மாமன் நெஞ்சைக் கிள்ள
அத்தை மகன் முத்தாட வந்தால் போகும் வெக்கம் மெல்ல
குத்தம் இல்லா தக்காளி கன்னம் நூறு முத்தம் அள்ள
அருகில் இருக்கு அரிசி முறுக்கு
ரசிச்சி ரசிச்சி புடிச்சி நொறுக்கு
பால் நிலாவிலே ஏத்தம் போட்டு தான் ஏறு பூட்டலாம்
வா..மானே
ராக்கு ராக்கைய்யா போட்டு தாக்கைய்யா
நோட்டம் போட்டைய்யா ஹொய்..ஹொய்...வாட்டம் போக்கைய்யா
காட்டுலே கம்பங்க்காட்டுலே

தென்றல் வந்து கொண்டாட தானே பூக்கள் உண்டாகுது
முன்னும் பின்னும் முந்தானை ஆடி மோக பண்பாடுது
கண்கள் ரெண்டில் மின்சாரம் பாய தேகம் திண்டாடுது
அச்சம் மிச்சம் இல்லாமல் போனால் மேனி என்னாவது
அஹ்ஹ்...சரக்கு ரயிலே உருக்கும் வெயிலே
திருட்டு சொகத்த எறக்கு மயிலே
வான வீதியில் கோலம் போட்டு தான் வாழ்ந்து காட்டலாம் வா மாமா

ராக்கு ராக்கம்மா ஹொய்..ஹொய்...போட்டு தாக்கம்மா
நோட்டம் போட்டம்மா ஹொய்..ஹொய்..வாட்டம் போக்கம்மா

காட்டுலே கம்பங்காட்டுலே பாட்டுலே வந்த பாட்டுலே
ஏக்கமாச்சுதே ஹொய்.. தூக்கம் போச்சுதே
காத்து காத்து தான் காத்து வீசுது
மூச்சு காத்துல சூடேத்து
ஹே...ராக்கு ராக்கம்மா ஹொய்..ஹொய்...போட்டு தாக்கம்மா
நோட்டம் போட்டையா ஹொய்..ஹொய்..வாட்டம் போக்கைய்யா

Wednesday, June 29, 2016

NETHU RAATHIRI THOOKAM POCHCHUDI - SAGALAKALAA VALLAVAN - SPB SJ


 FILM: SAGALAKALAA VALLAVAN
MUSIC: ILAIYYARAAJAA
SINGERS: SPB SJ 
LYRICS: VAALI

நேத்து ராத்திரி தூக்கம் போச்சுடி
நேத்து ராத்திரி எம்மா
தூக்கம் போச்சுடி யம்மா
ஆவோஜி ஆ அனார்கலி
அச்சா அச்சா பச்சக்கிளி
ஆவோஜி ஆ அனார்கலி
அச்சா அச்சா பச்சக்கிளி

அம்மாடி ஆத்தாடி உன்னால தான்
நேத்து ராத்திரி எம்மா
தூக்கம் போச்சுடி யம்மா

ஆ நேத்து ராத்திரி
எம்மா
தூக்கம் போச்சுடி
ஹ் யம்மா

அச்சாரத்தை போடு கச்சேரிய கேளு
சின்ன உடல் சிலுக்கு சில்லுன்னு தான் இருக்கு
சந்தனத்தில் பண்ணி வச்ச தேரு
அச்சாரத்தை போடு கச்சேரிய கேளு
சின்ன உடல் சிலுக்கு சில்லுன்னு தான் இருக்கு
சந்தனத்தில் பண்ணி வச்ச தேரு
கண்டேனடி காஷ்மீர் ரோஜா
வந்தேனடி காபுல் ராஜா
என்பேரு தான் அப்துல் காஜா
என்கிட்ட தான் அன்பே ஆஜா
அஞ்சு விரல் பட்டவுடன்
அஞ்சுகத்தை தொட்டவுடன்
ஆனந்தம் வாரே வா .

நேத்து ராத்திரி
எம்மா
தூக்கம் போச்சுது
யம்மா
அனார்கலி நான் தானய்யா
அன்பே சலீம் நீதானய்யா .
அம்மாடி ஆத்தாடி உன்னாலதான்
நேத்து ராத்திரி
எம்மா
தூக்கம் போச்சுது
யம்மா

என்னோடு வா தூபாய்
ஏராளம் தான் ரூபா
ஒட்டகங்கள் இருக்கு
பெட்டகங்கள் இருக்கு
உன்ன நானும் வச்சிருப்பேன்
அன்பா
என்னோடு வா தூபாய்
ஏராளம் தான் ரூபா
ஒட்டகங்கள் இருக்கு
பெட்டகங்கள் இருக்கு
உன்ன நானும் வச்சிருப்பேன்
அன்பா

உன் மேல தான் ஆசப் பட்டேன்
உன்னக் கண்டு நாலும் விட்டேன்
குபேரனின் கையைத் தொட்டேன்
குசேலனின் கையை விட்டேன்
அந்தபுரம் வந்தவுடன்
அந்தரங்கம் கண்டவுடன்
ஆசைகள் அப்பப்பா

நேத்து ராத்திரி தூக்கம் போச்சுடி
நேத்து ராத்திரி எம்மா
தூக்கம் போச்சுடி யம்மா
ஆவோஜி ஆ அனார்கலி
அச்சா அச்சா பச்சக்கிளி
ஆவோஜி ஆ அனார்கலி
அச்சா அச்சா பச்சக்கிளி

அம்மாடி ஆத்தாடி உன்னால தான்
நேத்து ராத்திரி எம்மா
தூக்கம் போச்சுடி யம்மா

ஆ நேத்து ராத்திரி
எம்மா
தூக்கம் போச்சுடி
ஹ் யம்மா



ALAIGALIL MIDHAKKUTHU - ANDHA ORU NIMIDAM - SPB SJ



FILM: ANDHA ORU NIMIDAM 
SINGERS: SPB SJ
MUSIC: ILAIYARAAJA

 அலைகளில் மிதக்குது நிலவொன்று குளிக்குது கை கொடு
குளிக்கின்ற நிலவுக்கு முதுகினில் அரிக்குது கை தொடு
தேகம் உருகியதே ஆடை உருவியதே நீரும் சூடு ஏற

வழி ஒண்ணும் தெரியல வயசுக்கு வரவில்ல நானடி
குளிப்பது நீயடி குளிர்வது எனக்கடி ஏனடி
தேகம் மரத்துடிச்சே நீச்சல் மறந்திருச்சே
கூச்சம் ஆகி போச்சே
வழி ஒண்ணும் தெரியல வயசுக்கு வரவில்ல நானடி
குளிப்பது நீயடி குளிர்வது எனக்கடி ஏனடி

முத்தங்கள் முன்னூறு நீ தந்து முன்னேறு
அய்யோ முன்னூறு தாங்காது தந்தாலும் தகராறு
இவள் வசம் புது ரசம் இவள் வசம் புது ரசம்
இதழ் ரசம் இலவசம் நீ குடி
ஓ .. புதுரசம் அழைக்குது
பழரசம் கொதிக்குது பாரடி
நானிங்கு நானில்லை நீ  இன்னும் ஆணில்லை
ஆடை காண வில்லை

அலைகளில் மிதக்குது நிலவொன்று குளிக்குது கை கொடு
குளிக்கின்ற நிலவுக்கு முதுகினில் அரிக்குது கை தொடு
தேகம் மறத்துடிச்சே நீச்சல் மறந்திருச்சே
கூச்சம் ஆகி போச்சே
வழி ஒண்ணும் தெரியல வயசுக்கு வரவில்ல நானடி
குளிப்பது நீயடி குளிர்வது எனக்கடி ஏனடி

ஆணுக்கு ஆவேசம் ஹ ஹ வந்தாலே சந்தோசம்
உன்பாடு உல்லாசம் எம்பாடு படு மோசம்
வெயிலுக்கு நிழல்கொடு வெயிலுக்கு நிழல் கொடு
மயிலுக்கு உடை கொடு மாமனே
அய்யய்யோ இருக்குற வேட்டிய கொடுத்துட்டு
தவிப்பது பாவமே
பஞ்சாங்கம் பாக்காதே என் அங்கம் தாங்காதே
நீரில் ஈரம் இல்லை

வழி ஒண்ணும் தெரியல வயசுக்கு வரவில்ல நானடி
குளிப்பது நீயடி குளிர்வது எனக்கடி ஏனடி
தேகம்
ஹா
உருகியதே
ஹோ
ஆடை
ஹா
உருவியதே..
ஹோ
நீரும் சூடு ஏற

அலைகளில் மிதக்குது நிலவொன்று குளிக்குது கை கொடு
வழி ஒண்ணும் தெரியல வயசுக்கு வரவில்ல நானடி

KAAVIRIYE KAVIKKUYILE KANMANIYE VAA VAA - ADUTHTHA VAARISU - SPB SJ



FILM: ADUTHTHA VAARISU
MUSIC: ILAIYARAAJAA
LYRICS: PANJU ARUNACHALAM
SINGERS: SPB SJ

காவிரியே கவிக்குயிலே கண்மணியே வா வா
மனம் தாவுதடி தவிக்குதடி தளிர்க்கொடியே வா வா
பூங்காற்று தாலாட்ட தாளாத மோகம்
தீராத மோகங்கள் தீராமல் தீரும்

ஓ மை லவ்...யுவர் மை ஸ்வீட் ஹார்ட்
ஓ மை லவ்...யுவர் மை ஸ்வீட் ஹார்ட்

இருவர் ஒருவர் இனிதானே உறவினில் இணைவோமே
பருவம் கனிந்த புதுத்தேனே பழகிக் களிப்போமே
உனக்கும் எனக்கும் பொருத்தம் வளர வளர சுகமே
இனிக்கும் இதழில் அமுதம் பருக பருக சுகமே
ஆனந்தம் உல்லாசம்
வா எந்தன் பக்கத்தில் ஐ லவ் யூ

ஓ மை லவ்...யுவர் மை ஸ்வீட் ஹார்ட்
ஓ மை லவ்...யுவர் மை ஸ்வீட் ஹார்ட்

குளிரும் வாட்டுதடி பெண்ணே விலகி ஓடாதே
கொடியும் படர்ந்துவரும் கண்ணா படரும் கிளை நீயே
சிரித்து சிரித்து மயக்கும் புதுமைப் பதுமையே வா
அழைத்து அணைத்து வளைத்து ரசிக்கும் ரசிகனே வா
ஆனந்தம் உல்லாசம்
வா எந்தன் பக்கத்தில் ஐ லவ் யூ
ஓ மை லவ்...யுவர் மை ஸ்வீட் ஹார்ட்
ஓ மை லவ்...யுவர் மை ஸ்வீட் ஹார்ட்

காவிரியே கவிக்குயிலே கண்மணியே வா வா
மனம் தாவுதடி தவிக்குதடி தளிர்க்கொடியே வா வா
பூங்காற்று தாலாட்ட தாளாத மோகம்
தீராத மோகங்கள் தீராமல் தீரும்

ஓ மை லவ்...யுவர் மை ஸ்வீட் ஹார்ட்
ஓ மை லவ்...யுவர் மை ஸ்வீட் ஹார்ட்

MUTHUMANI MUTHUMANI - ADHARMAM - SPB SJ


FILM: ADHARMAM
MUSIC: ILAIYARAAJAA
SINGERS: SPB SJ
LYRICS: VAALI

 முத்துமணி முத்துமணி
சின்னஞ்சிறு கண்ணுமணி
தாவணி ஆடும் ஓர் லாவணி பாடும்
அருந்ததி பார்க்கும் ஆவணி மாதம்
இது தினமும் தினமும்
புதிதாய் தொடராதோ..ஓ...
முத்துமணி முத்துமணி
சின்னஞ்சிறு கண்ணுமணி

மானும் உண்டு கெண்டை மீனும் உண்டு
ரெண்டும் கொண்ட கண்ணில் வண்டும் உண்டு
விழுந்தேன் உனக்குள் நானே நானே
கனிந்தேன் கலந்தேன் நானே நானே
கண்ணாலே நீ என்னை களவாடிக் கொண்டாயோ
நெஞ்சத்தில் நீ என்றும் நிலையாக நின்றாயோ
இது தினமும் தினமும் புதிதாய் தொடராதோ...ஓ...

முத்துமணி முத்துமணி
சின்னஞ்சிறு கண்ணுமணி
தாவணி ஆடும் ஓர் லாவணி பாடும்
அருந்ததி பார்க்கும் ஆவணி மாதம்
இது தினமும் தினமும்
புதிதாய் தொடராதோ

முத்துமணி முத்துமணி
சின்னஞ்சிறு கண்ணுமணி

ஆசை பட்டு பட்டு தோளை தொட்டு
தோளை தொட்டு வெட்கம் நாளும் விட்டு
இனிமேல் இனிமேல் காலை மாலை
கொடுத்தே அனுப்பு ஓலை ஓலை
தலைவாசல் தாண்டாமல்
தனியாக நின்றேனே
அலையாத உள்ளத்தை
துணையாக தந்தேனே
இது தினமும் தினமும் புதிதாய் தொடராதோ..ஓ...

முத்து மணி முத்துமணி
சின்னஞ்சிறு கண்ணுமணி
தாவணி ஆடும் ஓர் லாவணி பாடும்
அருந்ததி பார்க்கும் ஆவணி மாதம்
இது தினமும் தினமும் புதிதாய் தொடராதோ..ஓ..

முத்துமணி முத்துமணி
சின்னஞ்சிறு கண்ணுமணி

KANMANIYE KAADHAL ENBADHU - AARILIRUNDHU ARUBADHU VARAI - SPB SJ


FILM: AARILIRUNDHU ARUBADHU VARAI
SINGERS: SPB SJ
LYRICS: PANJU ARUNACHALAM
MUSIC: ILAIYARAAJAA

கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா

கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா

மேளம் முழங்கிட தோரணம் ஆடிட
காலமும் வந்ததம்மா நேரமும் வந்ததம்மா
பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில்
பாடிடும் எண்ணங்களே இந்தப் பாவையின் உள்ளத்திலே
பூவிதழ் தேன் குலுங்க சிந்தும் புன்னகை நான் மயங்க
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்
சாய்ந்திருப்பேன் வாழ்ந்திருப்பேன்

கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா

பாலும் கசந்தது பஞ்சணை நொந்தது
காரணம் நீயறிவாய் தேவையை நானறிவேன்
நாளொரு தேகமும் மோகமும் தாபமும்
வாலிபம் தந்த சுகம்
இளம் வயதினில் வந்த சுகம்
தோள்களை நீயணைக்க வண்ணத் தாமரை நான் சிரிக்க
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் தோரணமாய் ஆடிடுவேன்

கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா

EN KANNUKKORU NILAVAA UNN PADACHCHAAN - AARIRO AARAARO - SPB SJ


FILM : AARIRO AARAARO 
SINGER SPB SJ
MUSIC ; K. BAGYARAJ
LYRICS: VAALI

என் கண்ணுக்கொரு நிலவா உன்னை படைச்சான்
உன் நெஞ்சுக்கொரு உறவா என்னை படைச்சான்
உன் கண்ணுக்கொரு நிலவா என்னை படைச்சான்
என் நெஞ்சுக்கொரு உறவா உன்னை படைச்சான்
ஒரு தாயாட்டம் உன்னை நான் தாலாட்டுவேன்
தினம் ஆராரோ ஆரிரோ நான் பாடுவேன்
இப்பவும் எப்பவும் சீராட்டுவேன்
உன் கண்ணுக்கொரு நிலவா என்னை படைச்சான்
என் நெஞ்சுக்கொரு உறவா உன்னை படைச்சான்

உச்சி வெய்யில் வேளை நீ நடக்க
பிச்சிப் பூவ நானும் பாய் விரிக்க
உச்சி முதல் பாதம் நான் சிலிர்க்க
உள்ளத்திலே ஆசை ஊற்றெடுக்க
முக்குளிக்க நானும் ஏங்கறேன்
முத்தெடுக்க நேரம் பார்க்குறேன்
கொஞ்சம் பொறு இரவாகட்டும்
வெக்கமது விலகி ஓடட்டும்
எப்பம்மா எப்பம்மா காத்திருக்கேன்
மொட்டுத்தான் விட்டு தான் பூத்திருக்கேன்

என் கண்ணுக்கொரு நிலவா உன்னை படைச்சான்
என் நெஞ்சுக்கொரு உறவா உன்னை படைச்சான்

பள்ளியறை பாட்டை நீ படிக்க
பக்க மேளம் போல நான் இருக்க
தட்டுறப்ப தாளம் திறந்திருக்க
தட்ட தட்ட மோகம் வளர்ந்திருக்க
கொஞ்சுறப்போ தேகம் நோகுமா
கொஞ்சம் கொஞ்சம் காயம் ஆகுமா
காயத்துக்கு களிம்பு பூசவா
ஆறும்வரை விசிறி வீசவா
அம்மம்மா அம்மம்மா ரொம்ப வேகம்
என்னம்மா பண்ண நான் இன்ப தாகம்

உன் கண்ணுக்கொரு நிலவா என்னை படைச்சான்
உன் நெஞ்சுக்கொரு உறவா என்னை படைச்சான்
ஒரு தாயாட்டம் உன்னை நான் தாலாட்டுவேன்
தினம் ஆராரோ ஆரிராரோ நான் பாடுவேன்
இப்பவும் எப்பவும் சீராட்டுவேன்

என் கண்ணுக்கொரு நிலவா உன்னை படைச்சான்
என் நெஞ்சுக்கொரு உறவா உன்னை படைச்சான்

 

RAM BAM BAM AARAMBAM - MICHEAL MADHANA KAAMA RAAJAN - SPB KSC

FILM : MICHEAL MADHANA KAAMA RAAJAN
SINGERS: SPB KSC
LYRICS : VAALI
MUSIC: ILAIYARAAJAA

 ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்
ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்
ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே உன் மீது
ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே
ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே உன் மீது
ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே
ராகு காலம் ஓடிப் போச்சு ராஜ யோகம் கூடிப் போச்சு

ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம் ஆ
ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம் ங்யா...

நேரம் வந்தாச்சு நானும் நட்டாச்சு காதல் கொடி
சூடும் உண்டாச்சு மூடும் உண்டாச்சு கையப் பிடி
1'O clock, 2'O clock கண் முழிச்சு பின்னாடி
3'O clock, 4'O clock கை பிடிச்சு
5'O clock, 6'O Clock ராத்திரிக்கு அம்மாடி
7'O clock, 8'O clock கிக்கிருக்கு
வேளைதோறும் லீலை வேறு என்ன வேலை
பள்ளிக்கூட பாடமென்ன சொல்ல வேண்டும்

ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்
ய்யாஆ
ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்
ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே உன் மீது
ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே
ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே உன் மீது
ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே
ராகு காலம் ஓடிப் போச்சு ராஜ யோகம் கூடிப் போச்சு
ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்
ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்

தாளம் தட்டாமல் மேளம் என்னாகும் விட்டுக் கொடு
பாவம் கெடாமல் பாட்டுக் குண்டான மெட்டு கொடு
1'O clock, 2'O clock கண் முழிச்சு பின்னாடி
3'O clock, 4'O clock கை பிடிச்சு
5'O clock, 6'O Clock ராத்திரிக்கு அம்மாடி
7'O clock, 8'O clock கிக்கிருக்கு
சக்கை போடு போடு பக்க மேளத்தோடு
தொட்டதிங்கு உன்னை இன்று விட்டதாரு

ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்
ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்
ழு எட்டு நாட்களாச்சு கண்ணே உன் மீது
ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே
ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே உன் மீது
ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே
ராகு காலம் ஓடிப் போச்சு ராஜ யோகம் கூடிப் போச்சு

ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்
ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்
ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்
ரம்பம்பம் ஆரம்பம் ங்யா..பம்பம்பம் பேரின்பம்
ஏ..ஏ..ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்
ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்
ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்
ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்

DIL DIL DIL MANADHIL - MELLA THIRANDHADHU KADHAVU - PS SPB



FILM: MELLA THIRANDHADHU KADHAVU
SINGER : SPB SUSEELA
MUSIC:ILAIYARAAJA
LYRICS: VAALI

தில் தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் தல் காதல்
லவ் லவ் லவ்

தில் தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் தல்காதல்
ஆஹா தில் தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் தல் காதல்
ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
ஆடல் பாடல் கூடல்
ஆ தில் தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் தல் காதல்

வளர்ந்த நாள் முதல் கார்குழலும்
அழைக்குதே உன்னைப் பூச்சூட
மயக்கமேனடி பூங்குயிலே
தவிக்கிறேனடி நான் கூட
விளக்கு வைத்தால் துடித்திருப்பேன்
படுக்கையில் நான் புரண்டிருப்பேன்
கைகள் படாத இடந்தான் இப்போது
ஆசை விடாத சுகந்தான் அப்போது
ஏக்கம் ஏதோ கேட்கும்

ம்...ம் தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் காதல்
ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
ஆ ஆடல் பாடல் கூடல்
ஆ.. தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் காதல்

மழைக்கு ஏங்கிய மாந்தளிரே
உனக்கு நான் சிறு தூறல்தான்
வியர்த்து வாடிய மெய் சிலிர்க்க
உனக்கு நான் மலைச்சாரல்தான்
அடுத்த கட்டம் நடப்பதெப்போ
எனக்கு உன்னைக் கொடுப்பதெப்போ
மாலையிடாமல் வசந்தம் வராது
வேளை வராமல் பெண் உன்னைத் தொடாது
போதும் போதும் ஊடல்

ஆ... தில் தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் தல் காதல்
ஆஹா.. தில் தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் தல் காதல்
ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
ஆடல் பாடல் கூடல்

Tuesday, June 28, 2016

NEE VARUVAAI ENA NAAN IRUNDHEN - SUJATHA



படம்: சுஜாதா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
குரல்: கல்யாணி மேனன்
பாடல்: கண்ணதாசன்

நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நானறியேன்

நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நானறியேன்

கண்கள் உறங்கவில்லை இமைகள் தழுவவில்லை
கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை
அமைதி இழந்த மனம் எதையும் நினைக்கவில்லை
வாராயோ...

நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நானறியேன்

அடி தேவி உந்தன் தோழி ஒரு தூதானாள் இன்று
இரவெங்கே உறவெங்கே உனைக் காண்பேனோ என்றும்

அமுத நதியில் என்னை தினமும் நனையவிட்டு
இதழை  மறைத்துக் கொண்ட இளமை அழகுச் சிட்டு
தனிமை மயக்கம் தனை விரைவில் தணிப்பதற்கு
வாராயோ...

நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நானறியேன்

ஒரு மேடை ஒரு தோகை அது ஆடாதோ கண்ணே
குழல் மேகம் தரும் ராகம் அது நாடாதோ என்னை

சிவந்த முகத்தில் ஒரு நகையை அணிந்து கொண்டு
விரிந்த புருவங்களில் அழகை சுமந்து கொண்டு
எனது மடியில் ஒரு புதிய கவிதை சொல்ல
வாராயோ...

நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நானறியேன்

Friday, June 24, 2016

PATTULA SELA KAZHUTHULA - PANNAI PURATHTHU PAANDAVARGAL - MVD VJ


MOVIE : PANNAI PURATHTHU PAANDAVARGAL
SINGERS: MVD VJ
MUSIC: GANGAI AMARAN

பட்டுல சேல கழுத்துல ரத்தின மால
நான் கட்டிக்கபோறேன்
மாப்பிள்ளைய தொட்டுக்கப்போறேன்
கெட்டி மேளத்த தட்டுற நேரத்துல
தாலி கட்டிக்க வாறேன்

பட்டுல சேல கழுத்துல ரத்தின மால
நான் கட்டிக்கபோறேன்
மாப்பிள்ளைய தொட்டுக்கப்போறேன்
கெட்டி மேளத்த தட்டுற நேரத்துல
தாலி கட்டிக்க வாறேன்

நம்மூரு டூரிங்குலே நல்ல படம் வந்திருக்கு
நாம ரெண்டு பேரும் போவோம் ராத்திரிக்கு
முடிஞ்சு வர்ர நேரத்துலே முட்ட தோச வாங்கித்தாறேன்
வாடியம்மா நீயும் அந்த கொட்டகைக்கு
நா வர மாட்டேன் வந்த நீ விட மாட்டே
நா வர மாட்டேன் வந்த நீ விட மாட்டே
அணச்சு புடிச்சு நடிக்கும் படத்த ரசிச்சு மொறச்சு பாக்கும்போது
ஒனக்கும் அந்த நெனப்பு வந்தா என்னத்த செய்வேன்

பட்டுல சேல கழுத்துல ரத்தின மால
நான் கட்டிக்க தாறேன்
ஒன்ன இப்ப தொட்டுக்கப்போறேன்
இந்த ரத்தின வாயிலே கிட்டத்துல வந்து
முத்தத்த தாயேன்

பொள்ளாச்சி ஊருக்குள்ளே பொருட்காட்சி நடக்குதைய்யா
போய்யிட்டு வந்தா என்ன ரயிலுல
அந்த ஊரு சந்தையிலே அல்வாவும் விக்குமைய்யா
எல்லாமும் வாங்கிக்கொடு கையிலே
துட்டுக்கு நானு கண்ணு எங்கிட்டு போவேன்
துட்டுக்கு நானு கண்ணு எங்கிட்டு போவேன்
இரும்புபோல ஒடம்பு இருக்கு கரும்புபோல மனசு இருக்கு
காலம் நேரம் சேரும்போது வாங்கித்தாறேன்

பட்டுல சேல கழுத்துல ரத்தின மால
நான் கட்டிக்கபோறேன்
மாப்பிள்ளைய தொட்டுக்கப்போறேன்
கெட்டி மேளத்த தட்டுற நேரத்துல
தாலி கட்டிக்க வாறேன்

பட்டுல சேல கழுத்துல ரத்தின மால
நான் கட்டிக்க தாறேன்
ஒன்ன இப்ப தொட்டுக்கப்போறேன்
இந்த ரத்தின வாயிலே கிட்டத்துல வந்து
முத்தத்த தாயேன்

KANNAAL PESUM PENNE ENAI MANNIPPAAYAA - MOZHI - SPB


 FILM : MOZHI 
SINGER: SPB
MUSIC: VIDYA SAGAR
LYRICS: VAIRAMUTHU

கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா
சலவை செய்த நிலவே எனை மன்னிப்பாயா
சிறு தவறைத் தவறி செய்தேன் எனை மன்னிப்பாயா
எனது கோரிக்கை நீ கேளடி கேளடி
உனது கோபங்களும் ஏனடி
உனது சில்லென்ற கண் பாரடி பாரடி
எனது சாபங்களைத் தீரடி
கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
ஒரு கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா

நிலா பேசுவதில்லை அது ஒரு குறை இல்லையே
குறை அழகென்று கொண்டால் வாழ்க்கையிலெங்கும் பிழையில்லையே
பெண்ணே அறிந்து கொண்டேன் இயல்பே அழகு என்பேன்
பூவை வரைந்து அதிலே மீசை வரைய மாட்டேன்
மெளனம் பேசும் போது சப்தம் கேட்க மாட்டேன்
மூன்றாம்பிறையின் முன்னே நிலவைத் தேட மாட்டேன்
வாழ்வோ துவர்க்குதடி வயசோ கசக்குதடி
சைகையிலே எனை மன்னித்து சாபம் தீரடி

Oh I'm sorry I'm sorry I'm sorry Oho I'm sorry I'm sorry I'm sorry
Oh I'm sorry I'm sorry I'm sorry Oho I'm sorry I'm sorry I'm sorry

கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
ஒரு கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா

எங்கே குறுநகை எங்கே குறும்புகள் எங்கே கூறடி ஹோ
கண்ணில் கடல் கொண்ட  கண்ணில் புயல் சின்னம் ஏதோ தெரியுதடி
செல்லக் கொஞ்சல் வேண்டாம் சின்னச் சிணுங்கல் போதும்
பார்த்துப் பழக வேண்டாம் பாதிச் சிரிப்பு போதும்
காரப் பார்வை வேண்டாம்
ஓரப் பார்வை போதும்
வாசல் திறக்க வேண்டாம்
ஜன்னல் மட்டும் போதும்
வாழ்க்கை கடக்குதடி நாட்கள் நரைக்குதடி
இரு கண்ணால் என் வாழ்வை நீ ஈரம் செய்யடி

Oh I'm sorry I'm sorry I'm sorry Oho I'm sorry I'm sorry I'm sorry
Oh I'm sorry I'm sorry Oho I'm sorry I'm sorry I'm sorry

கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா
சலவை செய்த நிலவே எனை மன்னிப்பாயா
சிறு தவறைத் தவறி செய்தேன் எனை மன்னிப்பாயா
எனது கோரிக்கை நீ கேளடி கேளடி
உனது கோபங்களும் ஏனடி
உனது சில்லென்ற கண் பாரடி பாரடி
எனது சாபங்களைத் தீரடி
கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
ஒரு கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா

Thursday, June 23, 2016

VAALIBAM VAAZHGA VAIYAGAM VAAZHGA - DEVI SRI DEVI



படம்:  தேவி ஸ்ரீதேவி
இசை: இளையராஜா
குரல்: எஸ்.பி.பி., எஸ்.ஜானகி
பாடல்: வைரமுத்து

லாலல லாலா... லாலல லாலா

வாலிபம் வாழ்க வையகம் வாழ்க
மரங்கள் மலர்கள் பொழிக
சூரியன் போல பூமியின் மேலே
காதலும் வாழ்க

வாலிபம் வாழ்க வையகம் வாழ்க
மரங்கள் மலர்கள் பொழிக
சூரியன் போல பூமியின் மேலே
காதலும் வாழ்க

ஆ..ஹாஹாஹா ... ஆ..ஹாஹா

காதலின் பந்திகளில் கனவே உணவு
கண்களின் வெளிச்சத்திலே கவிதை எழுது
சந்திர சூரியனும் விழி சந்திக்கக் கூசுமடி
கேலிகள் செய்வதென்ன இது கேள்விப்படாத மொழி
ஆயிரம் ஜென்மம்
கூடிய பந்தம்
தேவியின் நெஞ்சம்
தாமரை மஞ்சம்
நாளொரு பூ மலரும்


வாலிபம் வாழ்க வையகம் வாழ்க
மரங்கள் மலர்கள் பொழிக
சூரியன் போல பூமியின் மேலே
காதலும் வாழ்க

காமனின் பூங்கணையில் இதயம் மயங்கும்
காதலை ஆதரித்தே மலர்கள் வணங்கும்
கீதங்கள் பாடும் குயில் இளம்பூக்களில் ஆடை கட்டும்
வாழ்கின்ற காலம் மட்டும் எந்தன் தோள்களில் கூடு கட்டும்
நீயொரு பாதி
நீ மறு பாதி
பாதியில் பாதி
சேர்வது நீதி
ஓடுது காதல் நதி

வாலிபம் வாழ்க வையகம் வாழ்க
மரங்கள் மலர்கள் பொழிக
சூரியன் போல பூமியின் மேலே
காதலும் வாழ்க

வாலிபம் வாழ்க வையகம் வாழ்க

Wednesday, June 22, 2016

THAAYIR SIRANDHA KOVILUM ILLAI - AGATHIYAR



படம் : அகத்தியர்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
குரல்: டி.கே.கலா
பாடல்: பூவை செங்குட்டுவன்

தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
ஆயிரம் உறவில் பெருமைகளில்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை

தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
ஆயிரம் உறவில் பெருமைகளில்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை

தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை

தன்னலமற்றது தாயின் நெஞ்சம்
தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்
தன்னலமற்றது தாயின் நெஞ்சம்
தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்
மண்ணுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்
மண்ணுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை

பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு
பூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு
பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு
பூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு
கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று
கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று
கருணையில் தாயும் கடவுளும் ஒன்று

தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
ஆயிரம் உறவில் பெருமைகளில்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை
தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை

Movie: Agathiyar - திரைப்படம்: அகத்தியர்
Singers: T.K. Kala - பாடியவர்: டி.கே. கலா
Lyrics: poovai Senguttuvan - இயற்றியவர்: பூவை செங்குட்டுவன்
Music: Kunnakudi Vaidyanathan - இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
Year: - ஆண்டு: 1972

OORORAM KAMMAKKARA VERAARU PAAKA VILLA - THAI MANASU - SPB SJ

MOVIE ; THAI MANASU
SINGERS: SPB SJ
MUSIC : DEVA

ஊரோரம் கம்மாக்கர வேறாரும் பாக்கவில்ல
ஊரோரம் கம்மாக்கர ஒ ஹோ
வேறாரும் பாக்கவில்ல ஹோ
மாந்தோப்பு பக்கத்தில பொண்ணிருக்கா வெக்கத்தில
கூட்டாஞ்சோரு ஆக்கித்தரவா
ஒன்னோட கூட சேந்து பாட்டுச்சொல்லாவா வா வா
ஊரோரம் கம்மாக்கர ஒ ஹோ
வேறாரும் பாக்கவில்ல

வையக்கர ஓரத்துல பையப்பைய என்ன தொட்டு
மையலுக்கு பாய விரிச்ச
மை போட்டு மையலுக்கு பாய விரிச்ச ஹோய்
வையக்கர ஓரத்துல பையப்பைய என்ன தொட்டு
மையலுக்கு பாய விரிச்ச
மை போட்டு மையலுக்கு பாய விரிச்ச
வெயிலுக்கு தாகமின்னு நிழலுக்கு வந்த என்ன
செயிலுக்குள் அடச்சு வச்ச
கண்ணால செயிலுக்குள் அடச்சு வச்ச அம்மாடி
சொக்குப்பொடி போட பாக்குற ஆத்தாடி
எக்குதப்பா ஏதோ கேக்குற மாமோய்

ஊரோரம் கம்மாக்கர  ஹோய்
வேறாரும் பாக்கவில்ல

சாலமல காட்டுகுள்ள சார மழ கூடுதுன்னு
சாக்குச்சொல்லி கையப்புடிச்ச
பொல்லாத நோக்கத்துல என்ன அணைச்ச ஹோய்
சாலமல காட்டுகுள்ள சார மழ கூடுதுன்னு
சாக்குச்சொல்லி கையப்புடிச்ச
பொல்லாத நோக்கத்துல என்ன அணைச்ச
நாத்து நடப் போகையில ஆத்தங்கர ஓரம் நின்னு
பாத்துப்பாத்து மெல்ல சிரிச்ச
சிரிச்சு ஏக்கத்துல கெறங்க வச்ச அம்மாடி
ஓடத்தண்ணி போலப்பாயுற ஆத்தாடி வாடக்காது போல வீசுற
மாமோய்....

ஊரோரம் கம்மாக்கர வேறாரும் பாக்கவில்ல
ஊரோரம் கம்மாக்கர ஒ ஹோ
வேறாரும் பாக்கவில்ல ஹோ
மாந்தோப்பு பக்கத்தில பொண்ணிருக்கா வெக்கத்தில
கூட்டாஞ்சோரு ஆக்கித்தரவா
ஒன்னோட கூட சேந்து பாட்டுச்சொல்லாவா வா வா
ஊரோரம் கம்மாக்கர ஹும்ம் ம்ம்ம்
வேறாரும் பாக்கவில்ல











Monday, June 20, 2016

NAAN MALARODU - IRU VALLAVARGAL

Naan malarodu thaniyaaga yen ingu nindren ( Tujhe Pyar Karte Hain Karte rahenge)
நான் மலரோடு தனியாக…………………..

What a beautiful imagination from Kannadasan:

பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி  மேகங்கள் ஆக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற




Movie Name:Iru vallavargal
Song Name:Naan malarodu
Singer:T.M.Soundarajan,P.Susheela
Music Diector:Veda
Lyricist:Kannadasan
Directed by K. V. Srinivasan
Produced by R. Sundaram
Written by K. Devarajan
Screenplay by K. Devarajan
Starring
Jaishankar
R. S. Manohar
L. Vijayalakshmi
Thangavelu
S. A. Ashokan
Music by Vedha
Cinematography S. S. Laal
Edited by L. Balu
Production
company Modern Theatres
Distributed by Modern Theatres
Release dates 1966

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகராணி உனைக்காண  ஓடோடி வந்தேன்

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நீ வருகின்ற வழி மீது யார்  உன்னைக் கண்டார்
உன் வலைகொஞ்சும் கை மீது  பரிசென்ன தந்தார்
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகராணி உனைக்காண  ஓடோடி வந்தேன்

பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்கள் ஆக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகராணி உனைக்காண  ஓடோடி வந்தேன்

Please See also this…

Though Veda’s songs are inherited from Hindi movies, the melody did not vanish and it only added the fans for such tunes…
Tujhe Pyar Karte Hain Karte
Singers: Mohammed Rafi,&Suman Kalyanpur
Music:Shankar Jaikishan
Lyrics :Hasrat Jaipuri
Movie :April Fool (1964)
Actors:Biswajeet, Saira Banu




Lyrics / Video of Song : Tujhe Pyar Karte Hain Karte

tujhe pyaar karte hain karte rahenge
ke dil banke dil me dhadakte rahenge
tujhe pyaar karte hain karte rahenge
ke dil banke dil me dhadakte rahenge

tera naam le le ke jeete rahenge
tera naam le le ke marte rahenge
tujhe pyaar karte hain karte rahenge
ke dil banke dil me dhadakte rahenge

tujhe bhool jaaun ye mumkin nahin hai
kahin bhi rahoon mera dil to yahin hain
tujhe bhool jaaun ye mumkin nahin hai
kahin bhi rahoon mera dil to yahin hain
ghate chaand lekin mujhe gham na hoga
tera pyaar dil se kabhi kam na hoga
guzarne ko ye din guzarte rahenge
ke dil ban ke di me dhadakte rahenge

tera naam le le ke jeete rahenge
tera naam le le ke marte rahenge
tujhe pyaar karte hain karte rahenge
ke dil banke dil me dhadakte rahenge

haseen phool ki zindgaani bhi kyaa hai
abhi hans raha tha abhi ro raha hai
haseen phool ki zindgaani bhi kyaa hai
abhi hans raha tha abhi ro raha hai
jo guzre khushi me wahi zindagi hai
nahin to ye duniya badi besuri hai
teri dhun me bante sanwarte rahenge
ke dil banke dil me dhadakte rahenge

tera naam le le ke jeete rahenge
tera naam le le ke marte rahenge
tujhe pyaar karte hain karte rahenge
ke dil banke dil me dhadakte rahenge

agar mar gaya rooh aaya karegi
tujhe dekh kar geet gaaya karegi
agar mar gaya rooh aaya karegi
tujhe dekh kar geet gaaya karegi
mujhe dekhkar tum na aansoo bahaana
bas itni guzaarish hai tum muskuraana
tere pyaar me rang bharte rahenge
ke dil banke dil me dhadakte rahenge

tera naam le le ke jeete rahenge
tera naam le le ke marte rahenge
tujhe pyaar karte hain karte rahenge
ke dil banke dil me dhadakte rahenge

tujhe pyaar karte hain karte rahenge
ke dil banke dil me dhadakte rahenge

https://www.facebook.com/groups/1018417744856618/permalink/1253131008051956/

VAAN NILA NILA ALLA UN VAALIBAM NILA - PATTINA PRAVESAM - SPB


MOVIE : PATTINA PRAVESAM
SINGER: SPB
MUSIC: MSV
LYRICS: KANNADAASAN

வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா
தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா
நீயிலாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா

மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா
பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா

தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா
தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா
பொன்னிலா பொட்டிலா புன்னகை மொட்டிலா
அவள் காட்டும் அன்பிலா
இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா
தீதிலா காதலா ஊடலா கூடலா
அவள் மீட்டும் பண்ணிலா
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா

வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா
வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா
ஊரிலா நாட்டிலா ஆனந்தம் வீட்டிலா
அவள் நெஞ்சின் ஏட்டிலா
சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா
சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா
எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டதேன்
அதைச் சொல்வாய் வெண்ணிலா

வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா
தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா
நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா


PONNAARAM POOVAARAM - PAGALIL ORU IRAVU - SPB



MOVIE : PAGALIL ORU IRAVU
MUSIC: ILAIYARAAJAA
SINGER: SPB
LYRICS: KANNADAASAN

பொன்னாரம் பூவாரம்
கண்ணோரம் ஸ்ருங்காரம்
பொன்னாரம் பூவாரம்
கண்ணோரம் ஸ்ருங்காரம்
பொழுதுகள் கோடி புதுமைகள் தேடி
வா வெண்ணிலா ஒரு தேர் கொண்டு வா
செந்தேன் நிலா புதுச்சீர் கொண்டுவா
பொன்னாரம் பூவாரம்
கண்ணோரம் ஸ்ருங்காரம்

மெதுவாகத் தாலாட்டு சொல் தென்றலே சொல் தென்றலே
மேலாடை சதிராட வா தென்றலே வா தென்றலே
அழகு ரதம் அசைகிறது ஊர்வலமாய் வருகிறது
வா பண்பாடு மாறாத தென்பாங்குப் பூவே
காலமெல்லாம் தேனிலவு தான்

பொன்னாரம் பூவாரம்
கண்ணோரம் ஸ்ருங்காரம்
பொழுதுகள் கோடி புதுமைகள் தேடி
வா வெண்ணிலா ஒரு தேர் கொண்டு வா
செந்தேன் நிலா புதுச்சீர் கொண்டுவா

சிந்தாத மணிமாலை உன் புன்னகை உன் புன்னகை
செவ்வான விண்மீன்கள் உன் கண்களே உன் கண்களே
சிறிய இடை கொடியளக்க அழகு நடை மணி ஒலிக்க
வா செந்தூரம் கலையாத தெய்வாம்ச ராணி
காலமெல்லாம் தேனிலவு தான்

பொன்னாரம் பூவாரம்
கண்ணோரம் ஸ்ருங்காரம்
பொன்னாரம் பூவாரம்
கண்ணோரம் ஸ்ருங்காரம்
பொழுதுகள் கோடி புதுமைகள் தேடி
வா வெண்ணிலா ஒரு தேர் கொண்டு வா
செந்தேன் நிலா புதுச்சீர் கொண்டுவா
பொன்னாரம் பூவாரம்
கண்ணோரம் ஸ்ருங்காரம்

KADALODU NADHIKKENNA KOBAM - SPB - ARTHANGAL AAYIRAM



MOVIE: ARTHANGAL AAYIRAM
SINGER: SPB
MUSIC: SG

கடலோடு நதிக்கென்ன கோபம் காதல்
கவிபாட விழிக்கென்ன நாணம்
இளங்காற்று தீண்டாத சோலை
இளங்காற்று தீண்டாத சோலை
மண்ணில் எங்கேயும் பார்த்தாயோ
என் தோட்டப் பூவே

கடலோடு நதிக்கென்ன கோபம் காதல்
கவிபாட விழிக்கென்ன நாணம்

நீலவான மேகம் போலக் காதல் வானில் தவழுகிறேன்
நீரிலாடும் பூவைப் போல ஆசை நெஞ்சம் மயங்குகிறேன்
ஓடை மீனே ஜாடை பேசு
நீலவான மேகம் போலக் காதல் வானில் தவழுகிறேன்
நீரிலாடும் பூவைப் போல ஆசை நெஞ்சம் மயங்குகிறேன்
ஓடை மீனே ஜாடை பேசு
வனமோகினி வனிதாமணி புதுமாங்கனி சுவையே தனி
புது வெள்ளம் போலே வாராய்

கடலோடு நதிக்கென்ன கோபம் காதல்
கவிபாட விழிக்கென்ன நாணம்
இளங்காற்று தீண்டாத சோலை
மண்ணில் எங்கேயும் பார்த்தாயோ
என் தோட்டப் பூவே
கடலோடு நதிக்கென்ன கோபம் காதல்
கவிபாட விழிக்கென்ன நாணம்

குலுங்கக் குலுங்க இடையும் கெஞ்ச ஆடு
சலங்கை முழங்க நடையில் தாளம் போடு
ஹா....
குலுங்கக் குலுங்க இடையும் கெஞ்ச ஆடு
சலங்கை முழங்க நடையில் தாளம் போடு
தழுவிட வா அலையெனவே
தழுவிட வா அலையெனவே
அமுத மழையில் நனைந்து இனிமை காணவே
கடலோடு நதிக்கென்ன கோபம் காதல்
கவிபாட விழிக்கென்ன நாணம்

மோக வீணை என்று உன்னை நானும் மீட்டிப் பாடிடவா
பாரிஜாத மாலை போல மார்பில் உன்னைச் சூடிடவா
தோகை நீயே மேடை நானே
மதன் வீசிடும் கணை பாயுது
மலர் மேனியும் கொதிப்பாகுது
குளிர் ஓடை நீயே வா வா

கடலோடு நதிக்கென்ன கோபம் காதல்
கவிபாட விழிக்கென்ன நாணம்
இளங்காற்று தீண்டாத சோலை
இளங்காற்று தீண்டாத சோலை
மண்ணில் எங்கேயும் பார்த்தாயோ
என் தோட்டப் பூவே
கடலோடு நதிக்கென்ன கோபம் காதல்
கவிபாட விழிக்கென்ன நாணம்

Tuesday, June 14, 2016

OODAL SIRU MINNAL OLI NILAVE - SPARISAM - SPB



MOVIE : SPARISAM
MUSIC: RAVI
SINGER: SPB

ஊடல் சிறு மின்னல் ஒளி நிலவே வாடலாமா
ஊடல் சிறு மின்னல் ஒளி நிலவே வாடலாமா
காதல் விளையாட்டில் காதல் விளையாட்டில்
கண்ணீர் மாலை சூடலாமா

ஊடல் சிறு மின்னல் ஒளி நிலவே வாடலாமா
ஊடல்.... சிறு மின்னல் ஒளி நிலவே வாடலாமா
ஊடல் சிறு மின்னல் ஒளி நிலவே வாடலாமா ஆஆஆஆ
ஊடல் சிறு மின்னல் ஒளி நிலவே வாடலாமா

காதல் விளையாட்டில் காதல் விளையாட்டில்
கண்ணீர் மாலை சூடலாமா
காதல் விளையாட்டில்
கண்ணீர் மாலை சூடலாமா

ஊடல்... சிறு... மின்னல் ஒளி நிலவே வாடலாமா
காதல் விளையாட்டில் கண்ணீர் மாலை சூடலாமா
ஊடல் சிறு மின்னல் ஒளி நிலவே வாடலாமா
காதல் விளையாட்டில்
காதல் விளையாட்டில்
கண்ணீர் மாலை சூடலாமா

ஊடல் சிறு மின்னல் ஒளி நிலவே வாடலாமா

https://www.facebook.com/groups/1018417744856618/permalink/1254366271261763/

MALAI NERAM DHEVAN POTTA KOLAM - ANNI EN DHEIVAM - SPB . B.S. SASIREKHA


MOVIE : ANNI EN DHEIVAM
MUSIC: GUNA SINGH
SINGERS: SPB B.S.SASIREKHA

மாலை நேரம் தேவன் போட்ட கோலம் என்னம்மா
மாறன் வந்து நெஞ்சில் போட்ட தாளம் என்னம்மா
அதுதானே இன்ப ராகம் இனி என்னாளும் இன்பமாகும்
நடந்ததை நினைக்கையில் மனசுக்குள் இனிக்கிது சும்மா
அடிக்கடி அதை எண்ணி தவிக்குது மனம் இது காரணமென்னம்மா
இதுதானே பருவ காலம் இது ரதி தேவன் கொடுத்த தாகம்

முல்லை பூமலர் உன் நெஞ்சம்
என்றும் அதுதான் என் மஞ்சம்
எந்தன் நெஞ்சிலும் ஓர் எண்ணம்
அங்கே மின்னும் உன் வண்ணம்
கண்ணா நானும் உன்னை சேரும்
நன்னாள் வேண்டும் என் மன்னா
கங்கை வெள்ளம் பொங்கும் நேரம்
இன்பம் வேண்டும் என் கண்ணா
இன்பம் வேண்டும் என் கண்ணா

மாலை நேரம் தேவன் போட்ட கோலம் என்னம்மா
மாறன் வந்து நெஞ்சில் போட்ட தாளம் என்னம்மா
அதுதானே இன்ப ராகம் இனி என்னாளும் இன்பமாகும்

முத்துக்கள் தெளிக்கிற வண்ணச்சிரிப்பு
மோகத்தை கொடுக்குது உந்தன் அழைப்பு
தொட்டதும் வந்தது வெட்கம் எனக்கு
சொர்கத்தை காட்டுது உந்தன் அணைப்பு
ஏதோ ஒரு தாகம் தினம் வந்தாடுது
எங்கோ என்னை கைதந்து கொண்டோடுது
அது தானே தேவன் லீலை இனி என்னாளும் இன்ப மாலை

மாலை நேரம் தேவன் போட்ட கோலம் என்னம்மா
மாறன் வந்து நெஞ்சில் போட்ட தாளம் என்னம்மா
அதுதானே இன்ப ராகம் இனி என்னாளும் இன்பமாகும்

MAALAI VELAI RATHI MAARAN POOJAI - SAAMANDHIPPOO - SPB JENCI



MOVIE : SAAMANDHIPPOO
SINGERS: SPB JENCI
MUSIC: MVD

மாலை வேளை ரதி மாறன் பூஜை
அடி மானே இதோ இதோ தேவை நானா நானா
மாலை வேளை ரதி மாறன் பூஜை
அடி மானே இதோ இதோ தேவை நானா நானா
மணி ஓசை இதழ் தரும் நாதம்தானா

மாலை வேளை ரதி மாறன் பூஜை
அடி மானே இதோ இதோ தேவை நானா நானா

தேனோடை இதில் ஏன் ஆடை
வெறும் நூலாடை இனி நான் ஆடை
நூலாடை இது மேலாடை
வரும் பூமேடை அதில் நீ ஆடை

தேனோடை இதில் ஏன் ஆடை
வெரும் நூலாடை இனி நான் ஆடை
நூலாடை இது மேலாடை
வரும் பூமேடை அதில் நீ ஆடை
தழுவிட வரவோ லலலலல்லல்லா
குளிர் அதில் விடுமோ
இருவர் இன்று ஒருவர் என்று நாம் ஆவோமே

மாலை வேளை ரதி மாறன் பூஜை
அடி மானே இதோ இதோ தேவை நானா நானா

தாங்காது என நான் தள்ள
என்னை நீ அள்ள சுகம் தான் என்ன
போதாது என நான் சொல்ல அடி
நீ துள்ள வரும் நாள் என்ன

தாங்காது..ஹோய்... என நான் தள்ள
என்னை நீ அள்ள சுகம் தான் என்ன
போதாது என நான் சொல்ல அடி
நீ துள்ள வரும் நாள் என்ன
விரல்களின் நகங்கள்....தரரரா..
எழுதின இடங்கள்
அழகின் கோலம் முழுதும் காணட்டும் இப்போது

மாலை வேளை ரதி மாறன் பூஜை
அடி மானே இதோ இதோ தேவை நானா நானா

Sunday, June 12, 2016

KAANGEYAM KALAIGALE - INRU NEE NALAI NAAN





படம்:  இன்று நீ நாளை நான்
இசை: இளையராஜா
குரல்: எஸ்.பி.பி.
பாடல்: கங்கை அமரன்


லல்லலா  லாலல்லா
லாலல்லா லல்ல லல்ல லா.
ஓ .. அது.. அப்படி நட ராசா
அது அது  அது..

காங்கேயம் காளைகளே ஓடுங்கடா
கவர்ன்மெண்டின்  சாலையிலே
காலு வலி தெரியாம நானும்
பாட்டு பாடிகிட்டு வாரேன்
மருதண்ணனுக்கு கல்யாணம் பண்ண
பொண்ணத்  தேடிகிட்டு போறேன்
உனக்கு என்ன வேணும் கேளு தாரேன்

காங்கேயம் காளைகளே ஓடுங்கடா
கவர்ன்மெண்டின்  சாலையிலே
காலு வலி தெரியாம நானும்
பாட்டு பாடிகிட்டு வாரேன்


ஏன்டா பழனியப்பா.. எரும மாடு மாதிரி
வளர்ந்திருக்கிறியே  உனக்கெப்ப  கண்ணாலம் ?

எனக்கா பாட்டி,,

விக்கும் வெலவாசியில
ஏதுமில்ல ஓசியிலே
விக்கும் வெலவாசியில.. ஆமா
ஏதுமில்ல ஓசியிலே
வேல மட்டும் நல்லாச்  செய்வேன்
வேண்டிய மட்டும் நல்லாத்  திம்பேன்..
சம்பளத்துக்கேத்தபடி சம்சாரத்த  தேடிக்கணும்
சம்பளமில்ல.. கிம்பளமில்ல
பொஞ்சாதியும்  தேவையில்ல..

காங்கேயம் காளைகளே ஓடுங்கடா
கவர்ன்மெண்டின்  சாலையிலே
காலு வலி தெரியாம நானும்..
பாட்டு பாடி...
அண்ணே அண்ணே ... அண்ணே அண்ணே
என்னண்ணே... கேட்டு மூடிட்டீங்க

டேய்  கேட்டுத் தான்டா  மூடினேன்..கேனப் பயலே
கேக்காம மூடினாத் தான்டா தப்பு..
பேசாம வண்டிய ஓரமா நிறுத்திபுட்டு
ரயிலு  வருது ..அத வேடிக்க பார்த்துட்டு போ ..

ஆமாமா அதுல ஏதாவது
பொண்ணு வருதான்னு  பார்க்கறேன்..


மூக்குமுழி நல்லாருக்கும்
முத்து முத்தா பல்லிருக்கும்
மூக்குமுழி நல்லாருக்கும்
முத்து முத்தா பல்லிருக்கும்
பேச்சும் கூட அல்வாத் துண்டா
அன்பாருந்தா நல்லாருக்கும்
குத்தமேதும்  இல்லாம
நித்தம் குறை சொல்லாம
கண்ணுக்கழகா பொண்ணு கெடச்சா
நிச்சயமும் பண்ணிடுவேன்..

காங்கேயம் காளைகளே ஓடுங்கடா
கவர்ன்மெண்டின்  சாலையிலே
தனன தனன தன்ன தானா தன்ன
தனன தனன தன்ன...
அண்ணே அண்ணே ... அண்ணே அண்ணே
மோ..மோ...மூ..மோ

டேய் பழனியப்பா.. வண்டிய நிறுத்துடா..வண்டிய நிறுத்து

எங்க  இந்தப் பக்கம்?

சந்தைக்கு போறேன்னே..

சந்தைக்குப் போயி?

எங்க அண்ணனுக்கு பொண்ணு பார்க்கப்  போறேன்..

ஏன்டா கிறுக்குப்  பயலே
சந்தையில மாடு கன்னு தான் வாங்குவாக..
மதனியுமா வாங்குவாக?
உங்க அண்ணனுக்கு எவன்டா
பொண்ணு கொடுப்பான்?
அவன் வேல வெட்டி இல்லாம
கட்சி கட்சின்னு சுத்திகிட்டிருக்கான்..
டேய்.. ஆச்சியப் புடிக்கிறேன்..ஆச்சியப் புடிக்கிறேன்னு
காரைக்குடி பக்கம் போயி சொல்லிடப் போறான்டா..
போட்டு அடிச்சுப் புடுவாக..

அட நீங்க ஒன்னுன்னே ..
எங்க அண்ணனுக்கு என்ன கொறச்சல்?


சொத்துபத்து எக்கச்சக்கம்
நஞ்ச புஞ்ச  நாலு பக்கம்
சொத்துபத்து எக்கச்சக்கம்
நஞ்ச புஞ்ச  நாலு பக்கம்
ஏலமலக் காடுகள் உண்டு
வீடுகள் உண்டு எல்லாமுண்டு
தேர்தலிலே அண்ணன் நின்னா
ஜெயிக்கறது  எங்க கட்சி
அண்ணன் ஜெயிச்சா மந்திரியடா
ஆட்சி எங்க கையிலடா

காங்கேயம் காளைகளே ஓடுங்கடா
கவர்ன்மெண்டின்  சாலையிலே
காலு வலி தெரியாம நானும்
பாட்டு பாடிகிட்டு வாரேன்
மருதண்ணனுக்கு கல்யாணம் பண்ண
பொண்ணத்  தேடிகிட்டு போறேன்
உனக்கு என்ன வேணும் கேளு தாரேன்.. ஆமா
பொண்ணத்  தேடிகிட்டு போறேன்
உனக்கு என்ன வேணும் கேளு தாரேன்...


Friday, June 10, 2016

ANANDAM ADHU ENNADA - IRU NILAVUGAL



படம்: இரு நிலவுகள்
இசை: ராஜன் நாகேந்திரா
குரல்: எஸ்.பி.பி
பாடல்: வாலி

ஆனந்தம் அது என்னடா
ஹே... ஹே.... தரத் தரத் தர....
அவை காணும் வழி சொல்லடா
பருவங்கள் ஒரு போதையோ
அம்மாடி தமாஷா ஆடடா

ஆனந்தம் அது என்னடா
அவை காணும் வழி சொல்லடா
பருவங்கள் ஒரு போதையோ
அம்மாடி தமாஷா ஆடடா
அம்மாடி தமாஷா ஆடடா

ஆனந்தம் அது என்னடா
அவை காணும் வழி சொல்லடா

காதல் வித்தை நாள் முழுக்க காணடா
மைபோட்ட மலர் மங்கை கண்ணிலே
தனை மறந்தாட நீரும் தேவையா
பருகத்தானே  போதை கள்ளிலே
மயங்காதே வாழ்ந்து பார்க்க வாழடா
பிரபஞ்சமே மாயாபஜாரடா
பிரபஞ்சமே மாயாபஜாரடா

ஒரு கோட்டில் குறியாயிரு
கண்கூட மயங்காதிரு
ஏ.. நேரங்கள்  கனிகின்றதே
அஞ்சவோ கெஞ்சவோ வீரனே
அஞ்சவோ கெஞ்சவோ வீரனே

ஆனந்தம் அது என்னடா
அவை காணும் வழி சொல்லடா

உறுதியான நூறு வயது காளையே
நூறாண்டு அனுபவங்கள் தேவையே
எதிர் உள்ளது முன்னேற்றமே  செல்லடா
மனங்கொண்டது பலித்திடுமே காணடா
மனித ஜென்மம் மகிமையான சான்ஸடா
இது அல்லவோ ஜாக்பாட் கொண்டாடடா.. ஹ
இது அல்லவோ ஜாக்பாட் கொண்டாடடா

துணிவோடு தோள் தட்டடா
தடையேதும் கிடையாதடா
நீ உன்னை அறிந்தாயடா
நமக்கே படைத்தான் பூமியே
நமக்கே படைத்தான் பூமியே

ஆனந்தம் அது என்னடா
அவை காணும் வழி சொல்லடா
பருவங்கள் ஒரு போதையோ
அம்மாடி தமாஷா ஆடடா

ORE JEEVAN ONDRE ULLAM - NEEYAA - SPB VJ



FILM : NEEYAA
SINGERS: SPB VJ
MUSIC: SHANKAR GANESH

 ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணா
ஓ..ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணா
ஒரே பூவில் ஒன்றே தென்றல்
வாராய் கண்ணா
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே
ஒரே பூவில் ஒன்றே தென்றல்
வாராய் கண்ணே



அன்று நதிமீது ஒரு கண்ணன் நடமாடினான்
இன்று நடமாட நீ வேண்டும் கண்ணா

அன்று நதி மீது ஒரு கண்ணன் நடமாடினான்
இன்று நடமாட நீ வேண்டும் கண்ணா
அன்று கடல் மீது ஒரு கண்ணன் துயில் மேவினான்
இன்று துயில் மேவ நீ வேண்டும் கண்ணா
என் மன்னனே
ஒரே கண்ணன் ஒன்றே ராதை வாராய் கண்ணா

இங்கே விண்மீன்கள் கண்ணாகி பார்க்கின்றன
நாம் வெறும் கோயில் ஆகாமல் காக்க
இங்கே விண்மீன்கள் கண்ணாகி பார்க்கின்றன
நாம் வெறும் கோயில் ஆகாமல் காக்க
உந்தன் கண்மீன்கள் என் மீது விளையாடட்டும்
அந்த விண்மீன்கள் சுவையாக பார்க்க
தேர் கொண்டுவா
கண்ணன் வந்து கீதம் சொன்னால் நானாடுவேன்



ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே

அந்த மணிச்சங்கின் ஒலி கேட்டு நானாடுவேன்
இந்த மழை மேகம் உன் மீது ஆடும்

அந்த மணிச்சங்கின் ஒலி கேட்டு நானாடுவேன்
இந்த மழை மேகம் உன் மீது ஆடும்
வண்ணப்படத்தோடும் முகத்தோடும் நீ கூடலாம்
இந்த பழத்தோட்டம் உன்னோடு கூடும்
புது வெள்ளமே
ஒரே சொர்க்கம்  எந்தன் பக்கம் வேறில்லையே

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணா
ஓ..ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணா
ஒரே பூவில் ஒன்றே தென்றல்
வாராய் கண்ணா
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே
ஒரே பூவில் ஒன்றே தென்றல்
வாராய் கண்ணே

ORE JEEVAN ONDRE ULLAM - NAANE VARUVEN - SPB CHITHRA






FILM : NAANE VARUVEN
SINGERS: SPB CHITHRA
MUSIC: SHANKAR GANESH

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே
ஓ..ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே
ஒரே பூவில் ஒன்றே தென்றல்
வாராய் கண்ணே
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே

அன்று நதிமீது ஒரு கண்ணன் நடமாடினான்
இன்று நடமாட நீ வேண்டும் கண்ணா
அன்று நதிமீது ஒரு கண்ணன் நடமாடினான்
இன்று நடமாட நீ வேண்டும் கண்ணா
அன்று கடல் மீது ஒரு கண்ணன் துயில் மேவினான்
இன்று துயில் மேவ நீ வேண்டும் கண்ணா
என் மன்னனே
ஒரே கண்ணன் ஒன்றே ராதை வாராய் கண்ணா

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணா
ஓ..ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணா

ஒரு ஒளி வந்து விழியாகி அழைக்கின்றதே
அது வழி காட்டும் விளக்காகும் கண்ணா
ஒரு கனவாகி சுகம் சேர்க்கும் துணை யாரது
இது கனவல்ல நிஜமாகும் கண்ணா
என் கண்களில்
இங்கும் அங்கும் மாயம் செய்யும் நீ யார் கண்ணே

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே
ஓ..ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே

இன்று புது வானில் மழை மேகம் தவழ்கின்றது
அது புதிதல்ல புதிதல்ல கண்ணே
இன்று புது வானில் மழை மேகம் தவழ்கின்றது
அது புதிதல்ல புதிதல்ல கண்ணே
அன்று உன் தோளில் கொடி போல உறவாடினேன்
அது புரிந்தாலே சுகம் கோடி கண்ணே
என் கண்மணி
ஒரே பாடல் ஒன்றே ராகம்
வாராய் கண்ணே
ஓ..ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே









Tuesday, June 7, 2016

MARUDHA MANJAKIZHANGE - NENJIL AADUM POO ONDRU - SPB VJ


FILM : NENJIL AADUM POO ONDRU 
SINGERS: SPB VJ 
MUSIC: IR

மருத மஞ்சக் கிழங்கே
எம் மேலதான் வாசம்
உம் மேலதான் நேசம்
மச்சான் ஒன்ன நெஞ்சோடதான்
வச்சாள் இந்த பச்சக்கிளி
மருத மஞ்சக் கிழங்கே
எம் மேலதான் வாசம்
உம் மேலதான் நேசம்
மச்சான் ஒன்ன நெஞ்சோடதான்
வச்சாள் இந்த பச்சக்கிளி
மருத மஞ்சக் கிழங்கே

கிளிக்கொரு இணையுண்டு சத்தம் கொடுக்க
அதுக்கொரு இதழுண்டு முத்தம் கொடுக்க
கிளிக்கொரு இணையுண்டு சத்தம் கொடுக்க
அதுக்கொரு இதழுண்டு முத்தம் கொடுக்க
மூடாதே முந்தானையை போட்டு ஹோய்
முத்தாடும் வித்தைகளை காட்டு
முடியாதய்யா இப்ப படியாதய்யா
ஒரு பூ மால நீ போட
காலம் நேரம் பாரு

மருத மஞ்சக் கிழங்கே
உம் மேலதான் வாசம்
எம் மேலதான் நேசம்
மச்சான் என்ன நெஞ்சோடதான்
வச்சாள் இந்த பச்சக்கிளி
மருத மஞ்சக் கிழங்கே

தழுவுற ஆசைதான் முன்னால் நடக்க
தடுக்குற நாணம்தான் பின்னால் இழுக்க
தழுவுற ஆசைதான் முன்னால் நடக்க
தடுக்குற நாணம்தான் பின்னால் இழுக்க
தானாக தள்ளாடுது தேகம்
தாளத்த விட்டோடுமா ராகம்
விலகாதடி விட்டுப் பிரியாதடி
இது நேற்றல்ல இன்றல்ல
நாளும் வாழும் சொந்தம்

மருத மஞ்சக் கிழங்கே
எம் மேலதான் வாசம்
உம் மேலதான் நேசம்
மச்சான் ஒன்ன நெஞ்சோடதான்
வச்சாள் இந்த பச்சக்கிளி

மருத மஞ்சக் கிழங்கே
உம் மேலதான் வாசம்
எம் மேலதான் நேசம்
மச்சான் என்ன நெஞ்சோடதான்
வச்சாள் இந்த பச்சக்கிளி
மருத மஞ்சக் கிழங்கே


ADI NAAN VAANGI VANDHENDI - SANDHIPPU - SPB SJ



MOVIE : SANDHIPPU
SINGERS : SPB SJ
MUSIC: MSV
LYRICS: VAALI

அடி நான் வாங்கி வந்தேன்டி நாலு முழப்பூவு
அதை பின்னாடி வைப்பேன்டி வாசனைய பாரு
மணக்க மணக்க மயக்க மயக்க
இழுத்து அணைச்சா இனிக்க இனிக்க
அடி உம்பாடு எம்பாடு கொண்டாட்டம் கும்மாளமே

அடி நான் வாங்கி வந்தேன்டி நாலு முழப்பூவு
அதை பின்னாடி வைப்பேன்டி வாசனைய பாரு
மணக்க மணக்க மயக்க மயக்க
இழுத்து அணைச்சா இனிக்க இனிக்க
அடி உம்பாடு எம்பாடு கொண்டாட்டம் கும்மாளமே

அட மச்சான் என்னை முந்தானை பாய் விரிக்க சொல்லாதே
அட மாமா இந்த மத்தியான வேளையிலே துள்ளாதே
அட மச்சான் என்னை முந்தானை பாய் விரிக்க சொல்லாதே
அட மாமா இந்த மத்தியான வேளையிலே துள்ளாதே
அந்த பொல்லாத்தனம் இப்போ கூடாதய்யா
அந்த யோகாசனம் இப்போ ஆகாதய்யா
இதில் ஒனக்கொரு மயக்கமும் எனக்கொரு கிறக்கமும் ஏன்

அட பூ வாங்கி வந்தாலே புரிஞ்சுதய்யா ஆசை
அதை பின்னாடி வச்சாலே ஏறுதய்யா போதை
மணக்க மணக்க மயக்க மயக்க
இழுத்து அணைச்சா இனிக்க இனிக்க
அட உம்பாடு எம்பாடு கொண்டாட்டம் கும்மாளமே

அடி பொண்ணே டக்கர் பண்ணாதே டாவடிக்க வந்தாலே
அடி கண்ணே தப்பா எண்ணாதே வாய்சிவக்க தந்தாலே
அடி பொண்ணே டக்கர் பண்ணாதே டாவடிக்க வந்தாலே
அடி கண்ணே தப்பா எண்ணாதே வாய்சிவக்க தந்தாலே
ஒரே போரானது அந்த காலேஜ் தான்
ரொம்ப ஜோரானது இந்த டீன்ஏஜ் தான்
இன்ப சரித்திரம் படித்திட பரிட்சையை முடித்திட வா

அடி நான் வாங்கி வந்தேன்டி நாலு முழப்பூவு
அதை பின்னாடி வைப்பேன்டி வாசனைய பாரு

அட ராஜா உங்க செங்கோலின் ஆணையிங்கு செல்லாதே
யுவராணி உந்தன் சிங்காரப் பூவிழியால் கொல்லாதே
காதல் விளையாட்டிலே கிருஷ்ணபிரபு அல்லவா
ராஜலீலை செய்ய ராதா நீ அல்லவா
இடம் கொடுத்ததும் அடுத்ததை நடத்திட துடிப்பது ஏன்

அடி நான் வாங்கி வந்தேன்டி நாலு முழப்பூவு
அதை பின்னாடி வைப்பேன்டி வாசனைய பாரு
மணக்க மணக்க மயக்க மயக்க
இழுத்து அணைச்சா இனிக்க இனிக்க
அடி உம்பாடு எம்பாடு கொண்டாட்டம் கும்மாளமே

Saturday, June 4, 2016

KADHALIN PON VEEDHIYIL - POOKKARI



படம்: பூக்காரி
இசை: எம்.எஸ்.வி.
குரல்: டி.எம்.எஸ்., எஸ்.ஜானகி
பாடல்: பஞ்சு அருணாசலம்


காதலின் பொன் வீதியில்
காதலன் பண்பாடினான்
பண்ணோடு அருகே வந்தேன் நான்
கண்ணோடு உறவுகொண்டேன்

காதலின் பொன் வீதியில்
நானோரு பண்பாடினேன்
பண்ணோடு ஒருத்தி வந்தாள்
என் கண்ணோடு ஒருத்தி வந்தாள்

திருப்பாற்கடலில் பொன் மேடையிட்டு
நான் காத்திருப்பேன் உனக்காக
இனி தனிமையில்லை பகல் இரவுமில்லை
நாம் வாழ்ந்திருப்போம் இனிதாக

இரு பொன் மலரில் ஒன்று என் மலராம்
தேன் கொள்ள வந்தேன் மனம்போல
என் மனதினிலே உன் நினைவுகளே
அதை அள்ளி வந்தேன் உனக்காக
காதலின் பொன் வீதியில்...

விழி ஓரங்களில் சில நேரங்களில்
வரும் பாவங்களும் கவியாகும்
அந்தக் கவிதைகளில் உள்ள பொருளறிந்து
அதை சுவைப்பதுதான் கலையா...கும்

அந்தக் கலைகளிலும் பல புதுமை உண்டு
அதைப் பழகுவதே பேரின்பம்
இன்ப வாசலிலே ஒரு காவல் இல்லை
இனி காலம் எல்லாம் உன் சொந்தம் !

காதலின் பொன் வீ...தியில் காதலன் பண்பா...டினான் ..



Tiruchendurai Ramamurthy Sankar  writes :

காதலின் பொன்வீதியில் ( பூக்காரி)
பூக்காரி (1973) , மு.க.முத்துவின் மாக்னம் ஹோப்லஸ் படங்களில் ஒன்று. பிள்ளையோ பிள்ளையில் (1972) அறிமுகமான மு.க.முத்து , எம்.ஜி.ஆர் விக்குடன் தமிழ் சினிமாவிற்கு சொல்லொணாத் துன்பங்கள் கொடுக்கத் துவங்கியிருந்தார். ஒரு புறம் கலைஞர் கண்ணொளித் திட்டம் வழங்கிக்கொண்டிருக்கும்போது மறுபுறம் இந்தக் கொடுமை நிகழ்ந்துகொண்டிருந்தது. எமர்ஜென்சியினால் இந்தியாவிற்கு ஏற்பட்ட ஒரே நன்மை மு.க.முத்துவின் திரைக்காவியங்கள் வருவது நின்றது. பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன், பூக்காரி, அணையாவிளக்கு, இங்கேயும் மனிதர்கள் என்று அடித்த புயல் நின்றது. மறுமுறை அவர் இராம.நாராயணனின் , வீரன் வேலுத்தம்பி, SA ராஜ்குமார் இடையில் படத்தில் " சுருளு மீசைக்காரனடி" என்று பந்தா தம்பி ராம்கியைப் புகழ்ந்து பாடும்போது தமிழ்சினிமா அவரை இனிதே மறந்திருந்தது.

வெண்ணிற ஆடை நிர்மலா ஒரு புரியாத புதிர். ஜெயலலிதா, மூர்த்தி, ஶ்ரீகாந்த்துடன் அறிமுகமாகி, மன்னிப்பு போன்ற படங்களில் சுமாராக நடித்தும் , பெண் சரத்பாபு போல்( பல படங்களில் நடித்தும் ) யாதொரு தடத்தையும் விட்டுச்செல்லாதவர். 70 களில் பிரபலமான பிரமீளா, ஜெயசித்ரா, மஞ்சுளா போன்றவர்களைவிட நல்ல தோற்றத்தையும், நடிப்பையும் , நடனத்தையும், கொண்டிருந்தும், அவர் கண்ணில் தென்படாத ஒன்று ......கான்ஃபிடென்ஸ். இதயக்கனியில் ப்ரப்பிரம்மமாக நிற்கும் ராதா சலூஜாவின் கண்களில் தென்படும் கான்ஃபிடென்ஸ் கூட " தொட்ட இடம் எல்லாம்" பாட்டில் நிர்மலாவிடம் இருக்காது. அவர் எம்.எல்.சி பதவி பெறாததற்கு இது காரணமில்லை எனினும்.
அமிர்தம், கிருஷ்ணன்-பஞ்சு போன்ற கழக விசுவாசிகள் கைவண்ணத்தில் உருவான பூக்காரி....மஞ்சுளா பூக்காரி! இந்தப் படத்திற்கு " கைவண்டி இழுக்கும் அப்பாவையும், சினிமாப் பைத்திய தங்கையும் காப்பாற்றும் இளைஞன்" என்று பெயர் வைத்திருந்தாலும். வித்தியாசம் இருந்திருக்காது. பின்னாளில் டார்லிங் டார்லிங் டார்லிங் பாட்டில் ஶ்ரீதேவியுடன் வந்த கன்னட அம்பரீஷ், வில்லன்! அதேபோல் ஜெயசித்ரா பின்னாளில் சினிமா பைத்தியம் படத்திலும் நடித்தது ஒரு பைத்தியக்கார சிறப்பு.
.......................................................
குமுதம் லைட்ஸ் ஆனில் எம்.எஸ்.வி பற்றி சொல்லும்போது " எம்ஜியாருக்கும் வேண்டியவர், சிவாஜிக்கும் வேண்டியவர், கலைஞருக்கும் வேண்டியவர் என்றால் கோடம்பாக்கத்தில் எம்.எஸ்.விதான்" என்று எழுதியிருப்பார் ரா.கி.ர. அதே 1973 ல் பூக்காரியும், உலகம் சுற்றும் வாலிபனும், பொன்னூஞ்சலும் !
முத்துப்பல் சிரிப்பென்னவோ ( TMS-PS) , முப்பது பைசா மூணு முழம் ( LRE) மற்ற பாடல்கள்.
இந்தப்பாடல் TMS-SJ வின் டூயட்டில் நீல நிறம் ( என் அண்ணன்) மிகச்சிறந்த இரண்டாவது பாடல். ஆனால் இந்தப்பாடல் , கிலோமீட்டர் கணக்கில் முதல் பாடல். பஞ்சு அருணாசலத்தின் வரிகள். கண்ணை மூடிக்கொண்டு கேட்கவேண்டிய பாடல்களிலும் தலையாயது இதுவே. அபாரமான வயலின், ஹம்மிங்!
" விழி ஓரங்களில் சில நேரங்களில் வரும் பாவங்களும்" என்று அந்தக்காட்சியில் நடிகர்கள் இருவரிடமும் இல்லாத ஒன்றைப்பற்றி எழுத ஒரு மனோதிடம் வேண்டும்.
TMS குரலின் ஒரு சேர வெளிப்படும் ஒரு கம்பீரமும் காதலின் மென்மையும் , ஜானகியின் குரலில் வெளிப்படும் நாணமும் இந்தப்பாடலை மறக்கமுடியாத பாடல் ஆக்கியுள்ளது.
கண்ணை மூடிக்கொண்டு கேட்கவும்!

https://www.facebook.com/groups/1018417744856618/permalink/1246478088717248/

Wednesday, June 1, 2016

AVAL ORU PACHAIKUZHANDHAI - NEE ORU MAHARANI



படம் : நீ ஒரு மகராணி
இசை: சங்கர் கணேஷ்
குரல் : எஸ்.பி.பி., சுசீலா
பாடல் : வாலி


அவள் ஒரு பச்சைக்குழந்தை பாடும் பறவை
பருவம் பதினாறு
அவன் ஒரு ராஜகுமாரன் அழகிய மாறன்
வாழிய பல்லாண்டு
காதல் தெய்வங்கள் கோவில் தீபங்கள்
மேள தாளங்கள் வாழ்த்துதே
காதல் தெய்வங்கள் கோவில் தீபங்கள்
மேள தாளங்கள் வாழ்த்துதே

வாலைப் பருவம் கேட்டது கேள்வி
விடை தர இங்கே வந்தனள் தேவி
இளமையின் ரகசியம் எதுவென அறிந்தது நெஞ்சம்
போகப் போக புரிவது என்ன
போதையில் ஏதோ வருவது என்ன
எனக்கென்ன அதிசயம் இதுவென விளக்கிடு கொஞ்சம்
இன்பத்தில் நீயும் நானும் ஊமை இல்லையோ
மிச்சங்கள் என்னென்ன நாளை என்று கூறவில்லையோ

(அவன்)

மீனிருக்கும் கண்ணில் நான் இருக்க வேண்டும்
கண்ணே கண்ணே என்னை ஏற்றுக் கொள்வாயோ
நினைவிருக்கும் நெஞ்சில் நானிருக்க வேண்டும்
நெஞ்சே நெஞ்சே என்னை ஏந்திக் கொள்வாயோ
அச்சத்தை ஆசை வந்து வெல்லக்கூடாதோ
அம்மம்மா நாணத்தில் ஆடையிட்டு மூடக்கூடாதோ

(அவள்)



Tiruchendurai Ramamurthy Sankar writes:

சங்கர்-கணேஷ்

தேவர் - கவிஞர் இணைந்து வழங்கிய ஜோடி. வேதா அளவிற்கு தூற்றப்படாவிட்டாலும் சற்றே அலட்சியமாகக் கருதப்பட்ட இரட்டையர்கள். எம்.எஸ்.வி -இளையராஜா காலங்களுக்கு நடுவில் சிக்கினாலும் தமிழ்சினிமாவில் சங்கர்-கணேஷின் பங்கு 72-83 வரை முக்கியமானது. நண்பர் சரவணன் சொல்வதுபோல் இளையராஜா படம் பந்தாவாக சாந்தி, ஆனந்தில் வெளியாகும்போது இவர்களின் படங்கள் ஓரமாக காமதேனு, சித்ரா, ஓடியன், பாரகன் தியெட்டரில் சிக்கிவிட்டது விதி.

நீ ஒரு மகராணி (1976) காதலியாக நடிக்கவந்து மனைவியாக மாற வேண்டிய கி.மு காலத்துக் கதை. சுஜாதா, மாமனாராக தேங்காய் 100 ரூபாய் வாங்கிக்கொண்டு 1000ரூபாய்க்கு நடித்திருப்பார்கள். பட்டணத்தில் பூதம் படத்தில் டிரிம்மாக வந்து மனதைக் கொள்ளை கொண்ட அண்ணன் ஜெய் , பட்டணத்தைத் தொலத்திருப்பார். 11 மணி குர்லா லோக்கலில் வரும் குஜ்ஜு ஸ்டாக் ப்ரோக்கர்போல் சில காட்சிகளில் சஃபாரி என்ற கொடூரமான உடை வேறு. டைரக்டர் சொர்ணமும், திமுக ஆதரவு படங்களில் அமிர்தமும் ஜெய்யைக் கவிழ்த்தார்கள்.

மூன்று பாடல்கள். யேசுதாஸ்-சுசீலாவின் ," நீ ஒரு மகராணி". சுசீலாவின் " பல்லாண்டு காலம்" ( கணேஷின் ஹம்மிங்குடன்) RDB யின் ஆந்தி பட "தும் ஆகயே "பாட்டை மனதில் நினைத்து வேண்டிக்கொண்டு கம்போஸ் செய்திருப்பார்கள். ( பாடல் காட்சியில் கிதார் வைத்துக்கொண்டு கணேஷ் வருவார்)

ஆனால் அந்த மூன்றாவது பாடல் , திரையில் பல்க்கான ஜெய் , சில்க்கான ஶ்ரீப்ரியாவுடன் ! SPB-PS இன் அடுத்த மாக்னம் ஓபஸ். எம்.எஸ்.வி சாயலில் அவசரமாக ஓடும் டியூன். கொஞ்சும் எஸ்.பி.பி. கூட வரும் வயலின் போல் சுசீலா.

இரண்டு சரணங்களும் வேறு அமைப்பில். டியூன் ரோலர் கோஸ்டரில். இதயவீணை படத்தில் வரும் பொன் அந்தி மாலைப் பொழுது ( அதுவும் சங்கர்-கணேஷ்! ) போல சரணத்தின் 6 வரிகளுக்கும் 3 ட்யூன். ஹாரிஸ் ஜெயராஜ் இதை வைத்து ஒரு படமே செய்திருப்பார்.

சங்கர்-கணேஷ் என்றால் ஆடு வரும்போது டொடொங்-டொங், டொடொங்-டொங், மட்டுமல்ல; இது போன்ற அமர்க்களங்களும் உண்டு....கீபோர்ட் வாசிக்கும் என் மகனுக்கு வாசிக்க மிகவும் பிடித்த பாடல்.

https://www.facebook.com/groups/1018417744856618/permalink/1244145172283873/