Friday, June 10, 2016

ORE JEEVAN ONDRE ULLAM - NAANE VARUVEN - SPB CHITHRA






FILM : NAANE VARUVEN
SINGERS: SPB CHITHRA
MUSIC: SHANKAR GANESH

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே
ஓ..ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே
ஒரே பூவில் ஒன்றே தென்றல்
வாராய் கண்ணே
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே

அன்று நதிமீது ஒரு கண்ணன் நடமாடினான்
இன்று நடமாட நீ வேண்டும் கண்ணா
அன்று நதிமீது ஒரு கண்ணன் நடமாடினான்
இன்று நடமாட நீ வேண்டும் கண்ணா
அன்று கடல் மீது ஒரு கண்ணன் துயில் மேவினான்
இன்று துயில் மேவ நீ வேண்டும் கண்ணா
என் மன்னனே
ஒரே கண்ணன் ஒன்றே ராதை வாராய் கண்ணா

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணா
ஓ..ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணா

ஒரு ஒளி வந்து விழியாகி அழைக்கின்றதே
அது வழி காட்டும் விளக்காகும் கண்ணா
ஒரு கனவாகி சுகம் சேர்க்கும் துணை யாரது
இது கனவல்ல நிஜமாகும் கண்ணா
என் கண்களில்
இங்கும் அங்கும் மாயம் செய்யும் நீ யார் கண்ணே

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே
ஓ..ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே

இன்று புது வானில் மழை மேகம் தவழ்கின்றது
அது புதிதல்ல புதிதல்ல கண்ணே
இன்று புது வானில் மழை மேகம் தவழ்கின்றது
அது புதிதல்ல புதிதல்ல கண்ணே
அன்று உன் தோளில் கொடி போல உறவாடினேன்
அது புரிந்தாலே சுகம் கோடி கண்ணே
என் கண்மணி
ஒரே பாடல் ஒன்றே ராகம்
வாராய் கண்ணே
ஓ..ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே









No comments:

Post a Comment