Friday, June 10, 2016

ANANDAM ADHU ENNADA - IRU NILAVUGAL



படம்: இரு நிலவுகள்
இசை: ராஜன் நாகேந்திரா
குரல்: எஸ்.பி.பி
பாடல்: வாலி

ஆனந்தம் அது என்னடா
ஹே... ஹே.... தரத் தரத் தர....
அவை காணும் வழி சொல்லடா
பருவங்கள் ஒரு போதையோ
அம்மாடி தமாஷா ஆடடா

ஆனந்தம் அது என்னடா
அவை காணும் வழி சொல்லடா
பருவங்கள் ஒரு போதையோ
அம்மாடி தமாஷா ஆடடா
அம்மாடி தமாஷா ஆடடா

ஆனந்தம் அது என்னடா
அவை காணும் வழி சொல்லடா

காதல் வித்தை நாள் முழுக்க காணடா
மைபோட்ட மலர் மங்கை கண்ணிலே
தனை மறந்தாட நீரும் தேவையா
பருகத்தானே  போதை கள்ளிலே
மயங்காதே வாழ்ந்து பார்க்க வாழடா
பிரபஞ்சமே மாயாபஜாரடா
பிரபஞ்சமே மாயாபஜாரடா

ஒரு கோட்டில் குறியாயிரு
கண்கூட மயங்காதிரு
ஏ.. நேரங்கள்  கனிகின்றதே
அஞ்சவோ கெஞ்சவோ வீரனே
அஞ்சவோ கெஞ்சவோ வீரனே

ஆனந்தம் அது என்னடா
அவை காணும் வழி சொல்லடா

உறுதியான நூறு வயது காளையே
நூறாண்டு அனுபவங்கள் தேவையே
எதிர் உள்ளது முன்னேற்றமே  செல்லடா
மனங்கொண்டது பலித்திடுமே காணடா
மனித ஜென்மம் மகிமையான சான்ஸடா
இது அல்லவோ ஜாக்பாட் கொண்டாடடா.. ஹ
இது அல்லவோ ஜாக்பாட் கொண்டாடடா

துணிவோடு தோள் தட்டடா
தடையேதும் கிடையாதடா
நீ உன்னை அறிந்தாயடா
நமக்கே படைத்தான் பூமியே
நமக்கே படைத்தான் பூமியே

ஆனந்தம் அது என்னடா
அவை காணும் வழி சொல்லடா
பருவங்கள் ஒரு போதையோ
அம்மாடி தமாஷா ஆடடா

No comments:

Post a Comment