Tuesday, June 14, 2016

MALAI NERAM DHEVAN POTTA KOLAM - ANNI EN DHEIVAM - SPB . B.S. SASIREKHA


MOVIE : ANNI EN DHEIVAM
MUSIC: GUNA SINGH
SINGERS: SPB B.S.SASIREKHA

மாலை நேரம் தேவன் போட்ட கோலம் என்னம்மா
மாறன் வந்து நெஞ்சில் போட்ட தாளம் என்னம்மா
அதுதானே இன்ப ராகம் இனி என்னாளும் இன்பமாகும்
நடந்ததை நினைக்கையில் மனசுக்குள் இனிக்கிது சும்மா
அடிக்கடி அதை எண்ணி தவிக்குது மனம் இது காரணமென்னம்மா
இதுதானே பருவ காலம் இது ரதி தேவன் கொடுத்த தாகம்

முல்லை பூமலர் உன் நெஞ்சம்
என்றும் அதுதான் என் மஞ்சம்
எந்தன் நெஞ்சிலும் ஓர் எண்ணம்
அங்கே மின்னும் உன் வண்ணம்
கண்ணா நானும் உன்னை சேரும்
நன்னாள் வேண்டும் என் மன்னா
கங்கை வெள்ளம் பொங்கும் நேரம்
இன்பம் வேண்டும் என் கண்ணா
இன்பம் வேண்டும் என் கண்ணா

மாலை நேரம் தேவன் போட்ட கோலம் என்னம்மா
மாறன் வந்து நெஞ்சில் போட்ட தாளம் என்னம்மா
அதுதானே இன்ப ராகம் இனி என்னாளும் இன்பமாகும்

முத்துக்கள் தெளிக்கிற வண்ணச்சிரிப்பு
மோகத்தை கொடுக்குது உந்தன் அழைப்பு
தொட்டதும் வந்தது வெட்கம் எனக்கு
சொர்கத்தை காட்டுது உந்தன் அணைப்பு
ஏதோ ஒரு தாகம் தினம் வந்தாடுது
எங்கோ என்னை கைதந்து கொண்டோடுது
அது தானே தேவன் லீலை இனி என்னாளும் இன்ப மாலை

மாலை நேரம் தேவன் போட்ட கோலம் என்னம்மா
மாறன் வந்து நெஞ்சில் போட்ட தாளம் என்னம்மா
அதுதானே இன்ப ராகம் இனி என்னாளும் இன்பமாகும்

No comments:

Post a Comment