Tuesday, May 16, 2017

ORU KUNGUMA CHENKAMALAM - ARADHANAI



படம்: ஆராதனை
இசை: இளையராஜா
குரல்: SPB ஜானகி
பாடல்: வைரமுத்து

ஒரு குங்குமச்  செங்கமலம்
இளமங்கையின் தங்கமுகம்
ஒரு குங்குமச்  செங்கமலம்
இளமங்கையின் தங்கமுகம்
பசி தூண்டும் அமுதம்
தர வேண்டும் கமலம்
உன் கூந்தல் பூவனம்
ஒரு குங்குமச்  செங்கமலம்
இளமங்கையின் தங்கமுகம்
ஒரு குங்குமச்  செங்கமலம்


திருவாய் மலர்வாய் கருவாய் என் பாவாய்
வருவாய் விரைவாய் நான் சூடும் பூவாய்
சாம்பல் ருசிக்க தனியாவாய்
காயைப்  புசிக்கும் கனியாவாய்
பூவைக்கு நாங்கள்  பூ வைக்க வேண்டும்
பூலோகம் யாவும் பூக் கொய்ய வேண்டும்
மின்னலிலே ஒரு கயிறு எடு
மேகங்களால்  ஒரு  தூளியிடு
கதிரோ தளிரோ இள மகளது திருமுகம்


முதுமை ஒரு நாள் நமை வந்து தீண்டும்
மூன்றாம் காலில் நாம் நிற்க வேண்டும்
முடியைப்  பார்த்தால் முழு வெள்ளை
மடியில் தவழும் மகன் பிள்ளை
நீயேந்தி கொஞ்ச நான் கொஞ்சம் கெஞ்ச
பூப்போன்ற பிஞ்சு என் நெஞ்சில் துஞ்ச
பாயதனில்  நீ சாய்ந்திருக்க
பசியடங்கி நான் ஓய்ந்திருக்க
இருக்கும் வரைக்கும் எனை தினசரி அனுசரி

குங்குமச்  செங்கமலம்
இளமங்கையின் தங்கமுகம்
பசி தூண்டும் அமுதம்
தர வேண்டும் கமலம்
உன் கூந்தல் பூவனம்
ஒரு குங்குமச்  செங்கமலம்
இளமங்கையின் தங்கமுகம்
ஒரு குங்குமச்  செங்கமலம்

Monday, May 15, 2017

NILAVUKKU EN MEL ENNADI KOBAM - POLICEKARAN MAGAL



படம்: போலீஸ்காரன் மகள்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
குரல்: பி.பி. ஸ்ரீனிவாஸ்
பாடல்: கண்ணதாசன்

நிலவுக்கு என்மேல்
என்னடி கோபம்?
நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என்மேல்
என்னடி கோபம்?
முள்ளாய் மாறியது

கனிமொழிக்கென்மேல்
என்னடி கோபம்?
கனலாய் காய்கிறது
உந்தன் கண்களுக்கென்மேல்
என்னடி கோபம்?
கணையாய் பாய்கிறது

குலுங்கும் முந்தானை
சிரிக்கும் அத்தானை
விரட்டுவதேனடியோ
உந்தன் கொடியிடை இன்று
படை கொண்டு வந்து
கொல்வதும் ஏனடியோ
திருமண நாளில்
மணவறை மீது
இருப்பவன் நான் தானே
என்னை ஒருமுறை பார்த்து
ஓரக்கண்ணாலே
சிரிப்பவள் நீதானே

சித்திரை நிலவே
அத்தையின் மகளே
சென்றதை மறந்துவிடு
உந்தன் பக்தியில் திளைக்கும்
அத்தான் எனக்கு
பாதையை திறந்து விடு

நிலவுக்கு என்மேல்
என்னடி கோபம்?
நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என்மேல்
என்னடி கோபம்?
முள்ளாய் மாறியது


Thursday, May 11, 2017

ANBU NADAMADUM - AVAN THAAN MANITHAN






படம்: அவன் தான் மனிதன்
இசை: எம்.எஸ்.வி.
குரல்: டிஎம்ஸ், சுசீலா
பாடல்: கண்ணதாசன்

அன்பு நடமாடும் கலைக்  கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னித்  தமிழ் மன்றமே (அன்பு)

மாதவி கொடிப் பூவின் இதழோரமே
மயக்கும் மதுச் சாரமே
மஞ்சள் வெயில் போலும் மலர் வண்ண முகமே
மன்னர் குலத் தங்கமே
பச்சை மலைத் தோட்ட மணியாரமே
பாடும் புது ராகமே (அன்பு)

வெள்ளலைக் கடலாடும் பொன்னோடமே
விளக்கின் ஒளி வெள்ளமே
செல்லும் இடம்தோறும் புகழ் சேர்க்கும் மனமே
தென்னர் குல மன்னனே
இன்று கவி பாடும் என் செல்வமே
என்றும் என் தெய்வமே (அன்பு)

மாநிலம் எல்லாமும் நம் இல்லமே
மக்கள் நம் சொந்தமே
காணும் நிலம் எங்கும் கவி பாடும் மனமே
உலகம் நமதாகுமே
அன்று கவி வேந்தன் சொல் வண்ணமே
யாவும் உறவாகுமே (அன்பு)



ஒரு முறை சிவாஜி கணேசனின் படம் ஒன்றிற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பதாக இருந்தது. ஒரு டூயட் பாடல் மலேசியா, சிங்கப்பூர் போய் எடுக்கத் திட்டமிட்டிருந்தார்களாம். மலேசியாவில் குறிப்பாக மே மாதத்தில் படமாக்க வேண்டும் என்பது இயக்குனரின் திட்டமாக இருந்தது.
காரணம் மலேசியாவின் பிரபல மலர் கண்காட்சி அப்போதுதான் தொடங்கும். அதற்கான அவசரத்தில் படப்பிடிப்புக் குழுவினர் இருந்தனர்.
பாடலுக்கான மெட்டு, படப்பிடிப்பு குழுவினருக்கான பாஸ்போர்ட், விசா எல்லாம் தயாராக இருந்தன.

சிவாஜி, மஞ்சுளா கால்iட்டுகளும் ப்ரீ. பாடல் மட்டும் தயாராகவில்லை. பலமுறை கேட்ட போதும் கண்ணதாசன் எழுதி கொடுக்கவில்லை ‘அப்புறம் தருகிறேன்’ என்பதே அவரது பதிலாக இருந்திருக்கிறது. நாட்கள் ஓடிக்கொண்டிருந்தாலும் கவிஞர் கண்ணதாசனுக்கு நல்ல பாடல் வரிகளாக எழுத இயலவில்லையாம்.

எம். எஸ். வி. திரும்பத் திரும்ப கவிஞரிடம் மே மாதம் ஷ¥ட்டிங் இருக்கிறது, பாடலை விரைவில் கொடுங்கள் என்றார்.

மலேசியா செல்வதற்கு இரண்டு நாட்கள் மட்டுமே பாக்கி என்ற நிலையில் கண்ணதாசனிடம் பேசிய எம். எஸ். வீ. மே மாதம் படப்பிடிப்பு நடத்த வேண்டும், பாடல் எழுதி தருகிறாயா? இல்லை வேறு யாரிடமாவது எழுதி வாங்கி கொள்ளட்டுமா? என்று கேட்டிருக்கிறார்.

பொறுமை இழந்த கடுப்பான கண்ணதாசன் ‘என்னையா.... சும்மா மே... மே... ன்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க’ என்ற படியே ஐந்து நிமிடத்தில் பாட்டை எழுதி கொடுத்தாராம்.

அந்தப் பாடல்தான் ‘அன்பு நடமாடும் கலைக்கூடமே’ என்று தொடங்கும் பாடல். இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் ‘மே’ என்று முடியும். இந்தப் பாடலில் ‘மே’ என்ற எழுத்து 56 தடவைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கவிஞரே கூறியுள்ளார்.

https://www.youtube.com/watch?v=4zcLQKH0M_E

Friday, May 5, 2017

AADAI KATTI VANDHA NILAVO - AMUTHAVALLI

Madhivanan Rama Chandran writes:

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - Part 2

Pattukkottai Kalyana Sundaram (PKS) struggled a lot to get a chance in Cinema. NSK told him to leave chennai and go to his native place. PKS rejected his advise and immediately wrote this song

புழல் ஏரி நீர் இருக்க,
போக வர கார் இருக்க,
பொன்னுசாமி சோறு இருக்க,
போவேனோசென்னையை விட்டு தங்கமே தங்கம்

PKS wrote some fantastic love songs. One of them is ஆடை கட்டி வந்த நிலவோ . It was said that PKS and his elder brother went to see the bride. His brother was not married at that time so PKS was thinking that they went to see the bride for his elder brother. However after coming to home, his brother told him they went to see bride for PKS. Then PKS wrote this song.

ஆடைகட்டி வந்த நிலவோ - கண்ணில்
மேடைகட்டி ஆடும் எழிலோ - இவள்
ஆடைகட்டி வந்த நிலவோ - குளிர்
ஓடையிலே மிதக்கும் மலர்
ஜாடையில் சிரிக்கும் இவள்
காடுவிட்டு வந்த மயிலோ - நெஞ்சில்
கூடுகட்டி வாழும் குயிலோ?


The above was used in அமுதவல்லி movie
Other notable song is

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே-நீ
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே (என்)
கண்விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே-உன்னைக்
காவல்காக்கும் தோழியரோ வெண்ணிலாவே (கண்)
கன்னத்தில் காயமென்ன வெண்ணிலாவே-உன்
காதலன்தான் கிள்ளியதோ வெண்ணிலாவே

which he wrote in the movie எல்லோரும் இந்நாட்டு மன்னர்

PKS summarised the life cycle of humans/other living beings in two lines
ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே - அவன்
ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே
This was written for the movie தங்கப்பதுமை
Some of the songs are very influential. People use few lines from his songs like proverb. Some of them are

ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
திருடராய் பார்த்துத் திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது

The two other important songs he wrote for MGR are
சின்னப்பயலே சின்னப்பயலே
சேதி கேளடா
from அரசிளங்குமரி movie and wrote very meaningful lyrics
ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
அதுதாண்டா வளர்ச்சி (ஆளும்)
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே-நீ
தரும் மகிழ்ச்சி

In this song, he encouraged children to be strong in mind

வேப்பமர உச்சியில் நின்னு
பேயொன்னு ஆடுதுன்னு
விளையாடப் போதும்போது
சொல்லி வைப்பாங்க-உன்
வீரத்தைக் கொழுந்திலேயே
கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட
நம்பி விடாதே-நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து
வெம்பி விடாதே-நீ
வெம்பி விடாதே!-

In திருடாதே movie, he wrote

திருடாதே! பாப்பா திருடாதே!
வறுமை நிலைக்குப் பயந்துவிடாதே
திறமை இருக்கு மறந்துவிடாதே

He insisted to learn and remember what you learn

ஏட்டில் படித்ததோடு
இருந்து விடாதே!-நீ
ஏன்படித்தோம் என்பதையும்
மறந்துவிடாதே

In another song, he talked about some greedy people who always go with money and do not know what to do with it
ஆடி ஓடிப் பொருளைத் தேடி…
அவனும் திங்காமே பதுக்கி வைப்பான்…
அதிலே இதிலே பணத்தைச் சேத்து
வெளியிடப் பயந்து மறச்சு வைப்பான்;
அண்ணன் தம்பி பொண்டாட்டி புள்ளை
ஆருக்கும் சொல்லாமப் பொதச்சு வைப்பான்;
ஆகக் கடைசியில் குழியைத் தோண்டி
அவனையும் ஒருத்தன் பொதச்சு வைப்பான் _ ஆமா
பொதச்சு வைப்பான்

As I said earlier, PKS was versatile he not only wrote on socialism and communism but also wrote few devotional songs like தில்லை அம்பல நடராஜா from சௌபாக்கியவாதி movie

Pattinathaar says "காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா"
PKS says "காயமே இது மெய்யடா அதில் கண்ணும் கருத்தும் வையடா"

His other notable film was Sridhar's Kalyana Parisu in which all songs became super hit and people always remember this song
காதலிலே தோல்வியுற்றால் கன்னி ஒருத்தி கலங்குகிறாள் அவனை நெஞ்சில் நிறுத்தி
Unfortunately PKS died too young when he was only 29.

Kannadasan wrote following after his death

தன்னுயிரைத் தருவதனால்
தங்கமகன் பிழைப்பானோ?
என்னுயிரைத் தருகின்றேன்
எங்கேஎன் மாகவிஞன்?
நீதியிலாச் சாவுன்னை
நெருங்கிவிட்ட தென்றாலும்
வாழும் தமிழ்நாடும்
வளர்தமிழும் கலைஞர்களும்
வாழுகின்ற காலம் வரை
வாழ்ந்துவரும் நின்பெயரே!

Some interesting information about PKS

1 He studied only till 2nd/3rd grade but still able to write songs in pure Tamil like graduates
2 He was a martial artist as well and knew Silambam
3 Due to poverty, he did more than 15 jobs in short period of time
4 He was taller than most of the poets (6+ feets). Other tallest poet was Kannadasan

Pattukkottai Kalyana Sundaram was notable for the following

1 He is one of the very few poets who was the most reputed personality not only in his living time but till date as well
2 He is ranked with Bharathiyar and Bharathidasan for following their idealism
3 He was versatile touching various categories like devotion,love,philosophy,sad,labour development,advise to children,self-respect,etc although he wrote only 191 songs in cinema
4 Most of his cinema songs were already written by him as an independent songs and later reused with little changes to suit to the script of the film
5 Significant number of songs have தொகையறா which is something unique not seen in general
6 He was most fearless personality
7 He mostly wrote songs first and ask music directors to set tune for them

ENDORSEMENTS
There is no one to replace Pattukottai Kalyanasundaram - Ilaiyaraja Speech
https://www.youtube.com/watch?v=MnCS5mJrWkQ
Variamuthu's talk about PKS
https://www.youtube.com/watch?v=sGxHHFC-xtA
Communist Jeeva - "பட்டுக்கோட்டையே , நீ புதிதாய் பிறந்த பாரதியடா "
சிங்கப்பூர் மக்கள் கவிஞர் மன்றம் ஆண்டுதோறும் மே தினத்தை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கலை இலக்கிய விழாவாகக் கொண்டாடி வருகிறது
Some notable songs
தில்லை அம்பல நடராஜா - சௌபாக்கியவாதி (1957)
https://www.youtube.com/watch?v=qUORRGYe1y4
காயமேயிது மெய்யடா! இதில் கண்ணும் கருத்தையும் வையடா - கற்புக்கரசி (1957)
https://www.youtube.com/watch?v=6SWBgkJSVxM
ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே - தங்கப் பதுமை (1959)
https://www.youtube.com/watch?v=F2cIi1Q1CPg
ஆசையினாலே மனம் - கல்யாணப் பரிசு (1959)
https://www.youtube.com/watch?v=vXTCb8IfrGY
காதலிலே தோல்வியுற்றால் கன்னி ஒருத்தி கலங்குகிறாள் அவனை நெஞ்சில் நிறுத்தி - கல்யாணப் பரிசு (1959)
https://www.youtube.com/watch?v=C2JzvHD62Zw
ஆடை கட்டி வந்த நிலவோ - அமுதவல்லி (1959)
https://www.youtube.com/watch?v=G8QcPKPYc2Y
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே - எல்லோரும் இந்நாட்டு மன்னர் (1960)
https://www.youtube.com/watch?v=p8R4seVSSgA
நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும் நிலைமை என்னவென்று தெரியுமா? - இரும்புத்திரை (1960)
https://www.youtube.com/watch?v=q48ihhHK5kg
கையிலே வாங்கினேன் பையிலே போடலே காசு போன இடம் தெரியலே - இரும்புத்திரை (1960)
https://www.youtube.com/watch?v=q48ihhHK5kg
திருடாதே பாப்பா திருடாதே - திருடாதே (1961)
https://www.youtube.com/watch?v=UzN8Fs2AYc4
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா - அரசிளங்குமரி (1961)
https://www.youtube.com/watch?v=LTCihMCfSCU


Discussion at: