Thursday, May 5, 2016

RAAMAN AANDALUM RAAVANAN - MULLUM MALARUM - SPB


படம்: முள்ளும் மலரும்
பாடியவர்: எஸ் பி பி
வரிகள்: கண்ணதாசன்
இசை : இளையராஜா

லேலேலே லேலெலெல்லே
அம்மனே கும்பிட்டா நமக்கெல்லாம் நல்லதே நடக்குமே
கெட்டத அம்மனும் கொல்வாளே
லேலே லே லேலெலெல்லே

ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலே இல்லே ஹோய்
நாந்தாண்டா எம்மனசுக்கு ராஜா வாங்குங்கடா வெள்ளியில் கூஜா
நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன் கேட்கிற வரத்தே கேட்டுக்கடா
ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலே இல்லே ஹோய்

யானைய கொண்டாங்க குதிரைய கொண்டாங்க நானும் ஊர்கோலம் போக
யானைய கொண்டாங்க குதிரைய கொண்டாங்க நானும் ஊர்கோலம் போக
வாழ தென்ன மாவில எல்லாம் தொங்கணும் தோரணமாக
ஏண்டா டேய் ராணிய கூப்பிடு அவளோட சேடியும் கூப்பிடு
ஹெய் மதுர ராஜ்ஜியம் என்னுது அதுல உனக்கொரு பாதிய கொடுக்கறண்டா

ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலே இல்லே
ஹே ஹே

லேலே லே லேலெலெல்லே
சந்தனம் பூசுங்க சாமிய நேரில காணுங்க  என்னவேணும் அத கேளுங்க
லேலே லே லேலெலெல்லே

பொன்னா பூ பூத்து வைரம் காயாக காய்க்கும் என்னோட தோட்டம்
பொன்னா பூ பூத்து வைரம் காயாக காய்க்கும் என்னோட தோட்டம்
மாசம் மூணு போகம் விளையும் லாபம் மேலும் கூடும்
கையிருக்கு ஒழச்சு காட்டுறேன் மனசிருக்கு பொழச்சு  பாக்றேன்
யேஹ் போனா போகுது வேல உனக்கொரு வேலய கொடுகறண்டா

ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலே இல்லே..
ஹே ஹே

லேலே லே லேலெலெல்லே
பொன்னுலே  பல்லக்கு முல்லப்பூ மாலையும் சாமிக்கே
பூட்டிட்டு  சொல்லி சொல்லி பாடுங்க
லேலே லே லேலெலெல்லே

ஊரும் கொண்டாட உலகம் கொண்டாட ஊர்கோலம் போகும் ஷாமி
ஊரும் கொண்டாட உலகம் கொண்டாட ஊர்கோலம் போகும் சாமி
நாடும் வீடும் நல்லா வாழ நீதானே வழி காமி
சாதி சனம் ஒண்ணாக சேர்ந்தது சாமியத்தான் எல்லாரும் கேட்குது
நீ கேட்டா கேட்டத கொடுகற சாமிய பார்த்து கேளுங்கடா

ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலே இல்லே ஹோய்
நாந்தாண்டா எம்மனசுக்கு ராஜா
வாங்குங்கடா வெள்ளியில் கூஜா
நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன் கேட்கிற வரத்தே கேட்டுக்கடா
ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலே இல்லே ஹோய்

No comments:

Post a Comment