Wednesday, May 11, 2016

ILAVATTA NILAVUKKU IDHAM THARUM MALARUKKU - UNAKKAAGA ORU ROJAA - SPB SPS


படம்: உனக்காக ஒரு ரோஜா
பாடியவர்கள் : எஸ் பி பி ஷைலஜா
இசை : டி ஆர்
வரிகள் டி ஆர்

இளவட்ட நிலவுக்கு இதம் தரும் மலருக்குக்கு
எங்கே தூக்கம் வரும் எங்கே தூக்கம் வரும்
விரல் பட்ட இதத்துக்கு வித வித சுகத்துக்கு
நெஞ்சில் ஏக்கம் வரும் நெஞ்சில் ஏக்கம் வரும்

இளவட்ட நிலவுக்கு இதம் தரும் மலருக்கு
எங்கே தூக்கம் வரும் எங்கே தூக்கம் வரும்
விரல் பட்ட இதத்துக்கு வித வித சுகத்துக்கு
நெஞ்சில் ஏக்கம் வரும் ஹோய்...நெஞ்சில் ஏக்கம் வரும்

தென்றலாய் என்னை அழைக்கிறாய் என் உள்ளம் சில்லாக
தேரென என்னை இழுக்கிறாய் என் உடலோ சூடாக
தென்றலாய் என்னை அழைக்கிறாய் என் உள்ளம் சில்லாக
தேரென என்னை இழுக்கிறாய் என் உடலோ சூடாக
மல்லிகை வில்லென நாணத்தில் வளைந்திட நானும் அம்பாகவோ
மன்னவன் வேலென தேகத்தில் பாய்ந்திட நானும் போராடவோ
இந்த போரில் நான் வெல்லவோ இன்ப தேனை நான் அள்ளவோ
நான் பார்த்தால் விபரீதமே நீ தொட்டால் அபராதமே

இளவட்ட நிலவுக்கு இதம் தரும் மலருக்கு
எங்கே தூக்கம் வரும் எங்கே தூக்கம் வரும்

பொன்னாடையில் பூத்த தாமரை உன் ஓடை நாந்தானே
மணமேடையில் வீற்ற ராமனே உன் சீதை நான்தானே
பொன்னாடையில் பூத்த தாமரை உன் ஓடை நாந்தானே
மணமேடையில் வீற்ற ராமனே உன் சீதை நான்தானே
சுகம் பெரும் ஆசையில் ஸ்வரம் தரும் வீணையில் கையை அரங்கேற்றவோ
அவசர விரல்களின் அபஸ்வர கானத்தை இன்னும் நான் கேட்கவோ
சதிராடும் பொன்னாரமே ஜதி சொல்லும் இதழ் ஊறுமே
சதி செய்யும் என் வெட்கமே அடங்காது நாளை வரைக்குமே

இளவட்ட நிலவுக்கு இதம் தரும் மலருக்கு
எங்கே தூக்கம் வரும் எங்கே தூக்கம் வரும்
விரல் பட்ட இதத்துக்கு வித வித சுகத்துக்கு
நெஞ்சில் ஏக்கம் வரும் ஹோய்...நெஞ்சில் ஏக்கம் வரும்



https://youtu.be/olrPoF994Wo?t=4m21s






No comments:

Post a Comment