Thursday, May 12, 2016

ENAITHTHEDUM MEGAM SABAI VANDHU SERUM - KANNODU KANN - SPB VJ


படம் : கண்ணோடு கண்
இசை : ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள் : எஸ் பி பி வாணிஜெயராம்
வரிகள் : வைரமுத்து

எனைத்தேடும் மேகம் சபை வந்து சேரும்
செவியில் விழுமோ ஊமையின் ராகம்
எதிர்வந்தபோதும் திரை வந்து சேரும்
ரதியே..
ஆ ஆ ஆ ஆ ஆ
எனைத்தேடும் மேகம் சபை வந்து சேரும்
செவியில் விழுமோ ஊமையின் ராகம்
புது ராகம் ஊறும் சிறைதன்னை மீறும்
புது ராகம் ஊறும் சிறைதன்னை மீறும்
அழகே ஆ ஆ ஆ ஆ
எனைத்தேடும் மேகம் சபை வந்து சேரும்
செவியில் விழுமோ ஊமையின் ராகம்

அணியாத மாலை அழுகின்ற வேளை
கண்ணீரை அடைகாக்கும் ஏழை
ஆ ஆ ஆ ஆ
அணியாத மாலை அழுகின்ற வேளை
கண்ணீரை அடைகாக்கும் ஏழை
இங்கே என்ன வாழும் கண்ணா விழியில் மழை
இங்கே என்ன வாழும் கண்ணா விழியில் மழை
கருகாதே கலங்காதே இது முள்ளில் செய்த காதல் பாதை

எனைத்தேடும் மேகம் சபை வந்து சேரும்
செவியில் விழுமோ ஊமையின் ராகம்
எதிர்வந்தபோதும் திரை வந்து சேரும்
எதிர்வந்தபோதும் திரை வந்து சேரும்
ரதியே..
ஆ ஆ ஆ ஆ ஆ
எனைத்தேடும் மேகம் சபை வந்து சேரும்
செவியில் விழுமோ ஊமையின் ராகம்

நிஜமான நேசம் இதிலென்ன பாவம்
தடை போடும் பணக்கார சாபம் ம்ம் ம்ம்
நிஜமான நேசம் இதிலென்ன பாவம்
தடை போடும் பணக்கார சாபம்
காதல் ஜோதி காற்றில் என்ன அணைந்தா விடும்
காதல் ஜோதி காற்றில் என்ன அணைந்தா விடும்
விழி ஓரம் சுடும் ஈரம் என்னை கைது செய்யும் காதல் சோகம்

எனைத்தேடும் மேகம் சபை வந்து சேரும்
செவியில் விழுமோ ஊமையின் ராகம்
புது ராகம் ஊறும் சிறைதன்னை மீறும்
புது ராகம் ஊறும் சிறைதன்னை மீறும்
அழகே ஆ ஆ ஆ ஆ
எனைத்தேடும் மேகம் சபை வந்து சேரும்
செவியில் விழுமோ ஊமையின் ராகம்







No comments:

Post a Comment