Friday, April 29, 2016

NAAN ORU KOVIL NEE ORU DEIVAM - NELLIKKANI



படம்: நெல்லிக்கனி
இசை: சங்கர் கணேஷ்
குரல்: எஸ்.பி.பி., மலேசியா வாசுதேவன்
பாடல்: புலமைப்பித்தன் 

நான் ஒரு கோயில் நீ ஒரு தெய்வம் 
உன்னைத் தேடி நான் வந்தேன் 
உன்னில் என்னை நான் கண்டேன் 
உன்னால் இங்கு வாழ்கின்றேன் 

அன்னை என்ன தந்தை என்ன 
உன்னைக் கண்ட பின்னாலே 
உயர்வென்ன தாழ்வுமென்ன
உந்தன் அன்பின் முன்னாலே
கடல் நீரும் வற்றிப்போகும் 
நமதன்பு வற்றாது 
ஒரு கோடி ஜன்மம்
எங்கள் நட்புக்குப் போறாது

சொர்க்கம் நேரில் வந்தால் கூட 
உன்னைவிட்டுப் போவேனோ 
உனக்கென்று என்னைத் தந்தேன் 
எனக்கென்று வாழ்வேனோ 
விஷமென்று நீ தந்தாலும் 
அமுதாக மாறாதோ
விழி மூடி தூங்கும் போதும்
உன் வண்ணம் தோன்றாதோ


கங்கை வேடன் தன்னை இராமன்
தோழன் என்று கொண்டானே
கர்ணன் கொண்ட தோழமைக்காக
ஆவி தன்னைத் தந்தானே
கவி வேந்தன் கம்பன் வந்து
நமைப் பாட மாட்டானோ
கதையல்ல உண்மையென்று
வரலாறு காட்டானோ

2 comments:

  1. அழகான,ஆழமான உண்மையான
    நட்புக்கு ஒரு பாடல்

    ReplyDelete
  2. SPB பாடும் வரிகளையும்
    மலேஷியா வாசுதேவன் பாடும் வரிகளையும்
    அவரவர் பெயர் போட்டு காண்பித்தால்
    பாடகர்களுக்கு வசதியாக இருக்கும். நன்றி.

    ReplyDelete