Tuesday, April 26, 2016

MUGAM SENTHAMARAI - VEDIKKAI MANIDHARGAL



படம்: வேடிக்கை மனிதர்கள்
இசை: சங்கர் கணேஷ்
குரல்: எஸ்.ஜானகி
பாடல்: முத்துலிங்கம்


முகம் செந்தாமரை என்றானே
இதழ் ரோஜாவெனச்  சொன்னானே
முகம் தாமரை மலரா
இதழ் ரோஜா நிறமா
அடியே நீயே சொல்லு


மானாட்டம் விழியென்றான்
மயிலாட்டம் ஒயிலென்றான்
மானா மயிலா நானா அறியேனே
மான் கூட்டம் என்னாட்டம் பேசுமோ
பெண்ணாட்டம் மயிலாடுமோ
முல்லைக்கொடியே முத்துக்கிளியே
இந்த சந்தேகம் தீருங்களேன்



இனி ஒரு முறை
அவன் வரும்வரை
மனம் தவிப்பதை
உடல் கொதிப்பதை
யாரிடம் போய் நான் சொல்வது
அவன் மீண்டும் வருவானா
மலர்மேனி தொடுவானா
அவன் கூட மனம் ஓட
அவன் பார்வை விழி தேட
உறங்காமல் பொழுதோடுது


அவன் என்னைத்  தாலாட்ட
 நான் கொஞ்சிப்  பாராட்ட
புதுநாள் திருநாள் சுபநாள் வர வேண்டும்
அவன் மார்பில் பொன்னூஞ்சல் ஆடுவேன்
ஆனந்த நீராடுவேன்
இன்ப நினைவும் இந்த சுகமும்
இனி என்றென்றும் நிலையாகுமே


No comments:

Post a Comment