Monday, April 25, 2016

ROJAAVAI THAALAATTUM THENDRAL - NINAIVELLAAM NITHYA - SPB SJ



திரைப்படம் : நினைவெல்லாம் நித்யா
பாடியவர் : எஸ் பி பி... எஸ் ஜானகி
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து


ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்
உன் கூந்தல் என் ஊஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள் ஹாஹா
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்

இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை
இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை
மெளனமே சம்மதம் என்று ஹ்ம்ம்ம்
தீண்டுதே மன்மத வண்டு ஹா
மெளனமே சம்மதம் என்று ஹ்ம்ம்ம்
தீண்டுதே மன்மத வண்டு
பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்
உன் கூந்தல் என் ஊஞ்சல்

வசந்தங்கள் வாழ்த்தும்பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்
வசந்தங்கள் வாழ்த்தும்பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்
பூவிலே மெத்தைகள் தைப்பேன்... ஹா
கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்...ஹா
பூவிலே மெத்தைகள் தைப்பேன்
கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்
நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் ஹா ஹா ..ஹா

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்
உன் கூந்தல் என் ஊஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள்
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்

No comments:

Post a Comment