Tuesday, April 19, 2016

KAMBAN ENGU PONAAN - JAATHI MALLI


படம் : ஜாதி மல்லி 
இசை : மரகதமணி 
குரல் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் , சித்ரா
பாடல் : வைரமுத்து

கம்பன் எங்கு போனான் ஷெல்லி என்ன ஆனான்
நம்மைப்  பாடாமல்
லைலா செத்துப் போனாள் மஜ்னு செத்துப் போனான்
நம்மைப் பாராமல்
கண்ணீரே இல்லாத காதல் சூத்திரம்
கண்டோமே கண்டோமே நாங்கள் மாத்திரம்
இது ஒரு புது முறை இதில் என்ன வரைமுறை
வருகிற தலைமுறை வணங்கட்டும் இருவரை

கம்பன் எங்கு போனான்..

இது கையில் கட்டிய தாலி
பலர் கழுத்தில் உள்ளது போலி
இந்த குறுகிய வட்டம் இனி சரி வருமா
உங்கள் கோட்டுக்குள் மழை பெய்யுமா
அணை விட்டுத்  தாவிய வெள்ளம்
இது கட்டுக் காவலை வெல்லும்
உங்கள் விதிகளும் சதிகளும் நிரந்தரமா
இது விலங்கிட்ட சுதந்திரமா
எங்கள் பெயரை  யாரும் கேட்டால் புர்ர்ர் என்போம்
எங்களுக்குள்ளே என்ன உறவென்றால் புர்ர்ர் என்போம்
விலங்குகள் தடை இல்லை விதிகளும் தடை இல்லை
மரபுகள் தடை இல்லை மனிதரும் தடை இல்லை

கம்பன் எங்கு போனான்..

இது யுத்தம் இளமையின் யுத்தம்
இனி துச்சம் உறவுகள் துச்சம்
உங்கள் கட்டு திட்டம் சட்ட திட்டம் தள்ளி வையுங்கள்
இல்லை கடலுக்குள் தள்ளி விடுங்கள்
அட புத்தம் புதியது சந்தம்
இது முத்தம் எழுதிய பந்தம்
இனி இளையவர் எங்களுக்கு குரல் கொடுங்கள்
அட பழையவர் வழி விடுங்கள்
காதலை தடுத்தவர் கதை என்ன ஆனது புர்ர்ர் தானே
கை கொண்ட விலங்கும் நாங்கள் நினைத்தால் புர்ர்ர் தானே
நினைப்பது நடக்கணும் இது எங்கள் இலக்கணம்
இனி வரும் தலைமுறை இதை மட்டும் படிக்கணும்

கம்பன் எங்கு போனான்..

No comments:

Post a Comment