Monday, April 25, 2016

PANIVIZHUM MALAR VANAM - NINAIVELLAAM NITHYA - SPB


திரைப்படம் : நினைவெல்லாம் நித்யா
பாடியவர் : எஸ் பி பி
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து


பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்... ஏஹே
பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம் ஏஹே
பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்

சேலை மூடும் இளஞ்சோலை மாலை சூடும் மலர் மாலை
சேலை மூடும் இளஞ்சோலை மாலை சூடும் மலர் மாலை
இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிடும் ஏஹே
இளமையின் கனவுகள் விழியோரம் துளிர்விடும்
கைகள் இடைதனில் நெளிகையில் இடைவெளி குறைகையில்
எரியும் விளக்குச் சிரித்துக் கண்கள் மூடும்

பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்... ஏஹே
பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம் ஹ ஹா ஹா
இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்

காமன் கோவில் சிறைவாசம்
காலை எழுந்தால் ஹஹஹ பரிகாசம்
காமன் கோவில் சிறைவாசம் காலை எழுந்தால் பரிகாசம்
தழுவிடும் பொழுதிலே இடம் மாறும் இதயமே ஏஹே
வியர்வையின் மழையிலே பயிராகும் பருவமே
ஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி இரு விழி
மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி

பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்... ஏஹே
பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம் ஏஹே
பனி விழும் மலர் வனம்
பனி விழும் மலர் வனம்
பனி விழும் மலர் வனம்

No comments:

Post a Comment