Friday, September 30, 2016

YAARODU YAARO NEE ENDHA OORO - SALANGAIYIL ORU SANGEEDHAM - SPB

ஆ...ஆ நிச நிச நிச நி த நி
த நி ச த ச நி
தகஜம் தகஜம் ச நி ச ச நி ச
தகஜம் தகஜம் க ம ப ச ச ச

யாரோடு யாரோ நீ எந்த ஊரோ இளையவளே
யாரோடு யாரோ நீ எந்த ஊரோ இனியவளே
உன் மௌனம் கூட ராகங்கள்தானா
தேவி என் தேவி சொல்வாயோ
யாரோடு யாரோ நீ எந்த ஊரோ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

மலை மீட்டும் வீணை நீர்வீழ்ச்சிதானே
நான் மீட்டும் வீணை உன் மேனி மானே
உனக்காகத்தானே ஆலாபனை
என் பாடல் உந்தன் ஆராதனை
மலர்கள் பிறந்தபோது அதில்
பிறந்து வளர்ந்த மாது
பருவம் அடைந்த கனவு
இவள் சலங்கை அணிந்த நிலவு
இதய வீட்டின் தீபம்....இவளன்றோ

யாரோடு யாரோ நீ எந்த ஊரோ இளையவளே
யாரோடு யாரோ நீ எந்த ஊரோ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ச த ச நி ச

மயிலாடக்கண்டு மழை வந்ததென்ன
ரயில் பாதை எல்லாம் ரதம் வந்ததென்ன
பூக்காடு எல்லாம் உந்தன் நிழல்
மூங்கில்கள் எல்லாம் புல்லாங்குழல்
உறங்கி கிடந்த ராஹம் இன்று
உன்னை நினைந்து பாடும்
கலைந்துபோன மேகம் இன்று
வானில் வந்து கூடும்
பழகும் இதயம் உன்னைப் பிறியுமோ

யாரோடு யாரோ நீ எந்த ஊரோ இனியவளே
உன் மௌனம் கூட ராகங்கள்தானா
தேவி என் தேவி சொல்வாயோ
யாரோடு யாரோ நீ எந்த ஊரோ

No comments:

Post a Comment