Friday, September 30, 2016

SOLAM VIDHAIKAIYILE SOLLIPUTTU - 16 VAYADHINILE - IR

சோளம் வெதைக்கையிலே சொல்லிபுட்டு போன புள்ளே
சோளம் வெதைக்கையிலே சொல்லிபுட்டு போன புள்ளே
சோளம் வெளஞ்சு காத்து கெடக்கு சோடிக்கிளி இங்கே இருக்கு
சொன்ன சொல்லு என்ன ஆச்சு தங்கமே கட்டழகி
எனக்கு நல்லதொரு பதில சொல்லு குங்கும பொட்டழகி
சொன்ன சொல்லு என்ன ஆச்சு தங்கமே கட்டழகி
எனக்கு நல்லதொரு பதில சொல்லு குங்கும பொட்டழகி..ஹோய்

ஹே ஹே ஹே ஹே
தந்தனனனன்னா தானே தனா தந்தனா தனனா
தந்தனனனன்னா தானே தனா தந்தனா தனனா
தந்தனா தந்த தந்தனா

மானே என் மல்லிகையே மருத மரிக்கொழுந்தே
தேனே திணைக்கருதே திருநாளு தேரழகே
உன்ன நெனைக்கயிலே என்ன மறந்தேனடி
பொன்னே பொன்மயிலே எண்ணம் தவிக்குதடி

சோளம் வெதைக்கையிலே சொல்லிபுட்டு போன புள்ளே
சோளம் வெதைக்கையிலே சொல்லிபுட்டு போன புள்ளே
சோளம் வெளஞ்சு காத்து கெடக்கு சோடிக்கிளி இங்கே இருக்கு
சொன்ன சொல்லு என்ன ஆச்சு தங்கமே கட்டழகி
எனக்கு நல்லதொரு பதில சொல்லு குங்குமப்  பொட்டழகி
சொன்ன சொல்லு என்ன ஆச்சு தங்கமே கட்டழகி
எனக்கு நல்லதொரு பதில சொல்லு குங்கும பொட்டழகி..ஹோய்

மாரியம்மன் கோயிலிலே மாறாம கைப்  பிடிக்க
நாளும் ஒண்ணு பாத்து வந்தேன் நல்ல நேரம் கேட்டு வந்தேன்
அம்மன் மனசிருந்தா அருள் வந்து சேருமடி
கண்ணே கருங்குயிலே நல்ல காலம் பொறந்ததடி

No comments:

Post a Comment