Wednesday, September 28, 2016

KANGAL ENGEY NENJAMUM ANGEY - KARNAN - SUSEELAA




FILM : KARNAM
MUSIC: VISWANAATHAN RAAMAMOORTHY
LYRICS: KANNADAASAN
SINGER: P . SUSEELAA


கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே கண்டபோதே சென்றன அங்கே

கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே
கால்கள் இங்கே மேனியும் இங்கே
காவலின்றி வந்தன இங்கே ஆஆ ஆ

கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே

மணி கொண்ட கரமொன்று அனல் கொண்டு வெடிக்கும்
அனல் கொண்டு வெடிக்கும்
மணி கொண்ட கரமொன்று அனல் கொண்டு வெடிக்கும்
அனல் கொண்டு வெடிக்கும்
மலர் போன்ற  இதழின்று பனி  கண்டு துடிக்கும்
துணை கொள்ள அவனின்றித் தனியாக நடிக்கும்
துயிலாத பெண்மைக்கு ஏனிந்த மயக்கம் ஆஅ.ஆ ஆ

கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே

இனமென்ன குலமென்ன குணமென்ன அறியேன்
குணமென்ன அறியேன்
ஈடொன்றும் கேளாமல் எனையங்கு கொடுத்தேன்
கொடை கொண்ட மதயானை உயிர் கொண்டு நடந்தான்
குறை கொண்ட உடலோடு நானிங்கு மெலிந்தேன் ஆஅ.ஆ ஆ

கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே
கண்கள் எங்கே..

No comments:

Post a Comment