Wednesday, March 23, 2016

SOLLATHTHAAN NINAITHTHEN - VILANGU - SPB

http://www.mediafire.com/download/zk9cnnctpikp66k/sollathAn_SPB.mp3 

திரைப்படம் : விலங்கு
இசை : எம் எஸ் வி
பாடியவர்கள் : எஸ் பி பி
வரிகள் :  


சொல்லத்தான் நினைத்தேன் என் காதலை
சொல்லவே வந்தால் ஏன் சோதனை
எண்ணித்தான் துடித்தேன் என் காதலி
மனதில் இருந்தும் மறைத்தேன் நீ ஆதரி

தானம் கேட்கச் செல்லும் அரசன் போலவே
தயக்கம் கொண்டேனே
உன் வாசலின் எல்லை வந்தால் ஊமை ஆனேனே
தானம் கேட்கச் செல்லும் அரசன் போலவே
தயக்கம் கொண்டேனே
உன் வாசலின் எல்லை வந்தால் ஊமை ஆனேனே
எழுதுகின்றேன் நித்தம் கவிதை யாவும் ரத்தம்
அழகே சொல்லி விட போகின்றேன்
எனது பெயர் என்ன நான் மறந்தேன் 

சொல்லத்தான் நினைத்தேன் என் காதலை
சொல்லவே வந்தால் ஏன் சோதனை
எண்ணித்தான் துடித்தேன் என் காதலி
மனதில் இருந்தும் மறைத்தேன் நீ ஆதரி

தூது போக  ஒரு மேகம் தேடினேன் அதையும் காணோமே
கண்ணே எந்தன் கண்ணீரிலே ஈரம் காணோமே
தூது போக  ஒரு மேகம் தேடினேன் அதையும் காணோமே
கண்ணே எந்தன் கண்ணீரிலே ஈரம் காணோமே
முள்ளின் மேலே மஞ்சம் கண்கள் எங்கே துஞ்சும்
அழகே காதல் ஒரு கீர்த்தனம் பல்லவி நானடி நீ சரணம் 

சொல்லத்தான் நினைத்தேன் என் காதலை
சொல்லவே வந்தால் ஏன் சோதனை
எண்ணித்தான் துடித்தேன் என் காதலி
மனதில் இருந்தும் மறைத்தேன் நீ ஆதரி 
லா லா லா ல லா ல லா
ஆ ஹா ஹா ஹெய் ஹெய் ஹெய்
ஆ ஆ அஹ்ஹ் ஹா ஹூம்ம் ஹும்ம் ஹும்ம்

No comments:

Post a Comment