Thursday, March 24, 2016

IDHAZH NAADAGAM ARANGERUMO - VAAI SOLLIL VEERANADI - SPB VJ



திரைப்படம் : வாய் சொல்லில் வீரனடி
இசை : விஜெய் ஆனந்த்
பாடியவர்கள் : எஸ் பி பி வாணி ஜெயராம்
வரிகள் :

இதழ் நாடகம் அரங்கேறுமோ
விழி நீலாம்பரி பாடுமோ
இதழ் நாடகம் அரங்கேறுமோ
விழி நீலாம்பரி பாடுமோ
புது மாதுளை தரும் தேன் சுவை
தினம் பூபாளம் பாடுமோ
இதழ் நாடகம் அரங்கேறுமோ
விழி நீலாம்பரி பாடுமோ

உன்மேனிதான் பொன்வீணையோ
நான் மீட்ட வரவோ
நீ மீட்டவே என்மேனியை
உன் கையில் தரவோ
நீ பொங்கி வரும் கங்கை நதி
என் மஞ்சம் வரும் சிந்து நதி
நீ மெல்ல வந்து என்னைத்தொட
என் சேலை கொஞ்சம் வெட்கம் விட
இதழ் வெளுக்கும் உடல் சிலிர்க்கும்
அந்த மயக்கம் நமை தினம் அழைக்கும்

இதழ் நாடகம் அரங்கேறுமோ
விழி நீலாம்பரி பாடுமோ
புது மாதுளை தரும் தேன் சுவை
தினம் பூபாளம் பாடுமோ

பொன்மாலையில் பூச்சூடுவேன்
உன் தோளில் விழுவேன்
தாய்போலவே நாள்தோறுமே
தாலாட்ட வருவேன்
நீ சொல்லித்தரும் பள்ளியில் நான்
அதிகாலை வரை மாணவிதான்
நான் உன் மடியில் பிள்ளையடி
நீ அள்ளிதரும் வள்ளலடி
உயிர் உடலில் உள்ள வரைக்கும்
இந்த நெருக்கம் என்றும் தொடர்ந்திருக்கும்

இதழ் நாடகம் அரங்கேறுமோ
விழி நீலாம்பரி பாடுமோ
இதழ் நாடகம் அரங்கேறுமோ
விழி நீலாம்பரி பாடுமோ
புது மாதுளை தரும் தேன் சுவை
தினம் பூபாளம் பாடுமோ
இதழ் நாடகம் அரங்கேறுமோ
விழி நீலாம்பரி பாடுமோ

ல ல லா லா லா லா லா ல லா






No comments:

Post a Comment