Tuesday, March 22, 2016

KANYAAKUMAARI KALAIMADHANA RAANI - VAALIBAN - SPB SJ






 திரைப்படம் - வாலிபன்
இசை : இளையராஜா
பாடியவர்கள் எஸ் பி பி ஜானகி

கன்யாகுமாரி கலைமதன ராணி..ஏய்
கஸ்தூரி மானே வரலாமா நானே
பாதாளம் அது மேலாக ஆகாசம் அது கீழாக
ஆகிப்போனதே இடம் மாறிப்போனதே ஹெ ஹே ஹே
கோபாலன்பாலா காமனவன் தோழா
என் ஆவல் தீர உன் விரகம் வார
மயக்கத்தில் மதுரசம் ஊற்று மதனாபிஷேகம் காட்டு
தாகமானதே அதில் நாணம் போனதே
ஜிங்குசக்கு ஜிங்குசக்கு ஜா  ஹே
ஜிங்குசக்கு ஜிங்குசக்கு ஜா

வானகம் வையகம் ஒன்று சேரும் தருணமிது
ஆண்மையும் பெண்மையும் ஒன்றுகூடும் பருவமிது
காற்றோடு வானில் ஏறுவோம் கல்யாண ராகம் பாடுவோம்
வான்மீது வாழ்ந்து பார்க்கலாம் விண்மீனை மாலையாக்கலாம்
அம்மம்மா போவோமா கலையெல்லாம் அரங்கேரும்
மேகங்கள் விதானம் போடும்
காதல் மேனகை உடல் தங்க மாளிகை
ஜிங்குசக்கு ஜிங்குசக்கு ஜா 
ஜிங்குசக்கு ஜிங்குசக்கு சா

கன்யாகுமாரி கலைமதன ராணி..ஏய்
கஸ்தூரி மானே வரலாமா நானே
மயக்கத்தில் மதுரசம் ஊற்று மதனாபிஷேகம் காட்டு
தாகமானதே அதில் நாணம் போனதே
ஜிங்குசக்கு ஜிங்குசக்கு ஜா  ஹே
ஜிங்குசக்கு ஜிங்குசக்கு ஜா

கேட்டதை நீ கொடு மையல் தீயில் உருகுகிறேன்
தோளிலே தோள்கொடு காதல் தேனை பருகுகிறேன்
எங்கெங்கே என்ன கோலமோ எல்லாமும் காணும் நேரமோ
மேகங்கள் மஞ்சமாகுமோ மின்னல்கள் தீபம் ஏற்றுமோ
நீ பாதி நான் பாதி நீ எங்கே நானும் அங்கே
நாளெல்லாம் மன்மத ராகம்
ராஜலீலைகள் ரசமான சோலைகள்
ஜிங்குசக்கு ஜிங்குசக்கு ஜா 
ஜிங்குசக்கு ஜிங்குசக்கு சா

ஹே கோபாலன்பாலா காமனவன் தோழா
என் ஆவல் தீர உன் விரகம் வார
பாதாளம் அது மேலாக ம்ம்ம்ம்ம் ஆகாசம் அது கீழாக
ஆகிப்போனதே இடம் மாறிப்போனதே ஆ
தாகமானதே அதில் நாணம் போனதே
ஜிங்குசக்கு ஜிங்குசக்கு ஜா  ஹே
ஜிங்குசக்கு ஜிங்குசக்கு ஜா






No comments:

Post a Comment