Thursday, March 24, 2016

AADURADHU ENDHA AMMANO - JANANI - SPB SJ

திரைப்படம் : ஜனனி
இசை : எம் எஸ் வி
பாடியவர்கள் : எஸ் பி பி எஸ் ஜானகி
வரிகள் :

ஆடுறது எந்த அம்மனோ
ஆட்டுவிக்க வந்த வம்பனோ
ஹா...ஆடுறது எந்த அம்மனோ
ஆட்டுவிக்க வந்த வம்பனோ
மாரியம்மனோ மதுரை வீரனோ
கருப்பஞ்சாமியோ கன்னிப்பெண் ஆவியோ
மான்விழி தேன்மொழி பாவையின் மேனியை விட்டு இறங்கு
ஹா...ஆடுறது எந்த அம்மனோ
ஆட்டுவிக்க வந்த வம்பனோ
மாரியம்மனோ மதுரை வீரனோ
கருப்பஞ்சாமியோ கன்னிப்பெண் ஆவியோ
மான்விழி தேன்மொழி பாவையின் மேனியை விட்டு இறங்கு

பாடுறது யாரு கொம்பனா
பாரதியின் கொள்ளுப்பேரனா
பாடுறது யாரு கொம்பனா
பாரதியின் கொள்ளுப்பேரனா
ஆவி இல்லேடா சாமி இல்லேடா
அம்மன் இல்லேடா ஆத்தா இல்லேடா
வாலிபர் உள்ளத்தை வாலிபால் ஆடிடும் வஞ்சிக்கொடி நான்

பாடுறது யாரு கொம்பனா
பாரதியின் கொள்ளுப்பேரனா
பாடுறது யாரு கொம்பனா
பாரதியின் கொள்ளுப்பேரனா

ஏய்.... ஆத்தா வராம ஆவி புடிக்காம ஆட்டம் போடுறது ஏம்மா
பாப்பா உன்னோட பாச்சா பலிக்காது பாவ்லா காட்டாதே சும்மா
ஹே ஹொ ஹொய் ஹொய்
ஆத்தா வராம ஆவி புடிக்காம ஆட்டம் போடுறது ஏம்மா
பாப்பா உன்னோட பாச்சா பலிக்காது பாவ்லா காட்டாதே சும்மா
அடி கட்டிலுக்கு தூக்கம் வருமா
கள்ளு பாட்டிலுக்கு போதை வருமா
உன்ன கண்டவங்க கண்மயங்கி ஆடுறபோது இங்க ஆட்டம் ஒனக்கு ஏம்மா

ஆத்தா வயத்திலே ஆடிப்பழகினேன் அதுவே ஆரம்ப மேடை
ஹார்ட்டுபீட்டுக்கு பாடிப் பழகினேன் நானொரு சங்கீத மேதை
ஹா ஹ ஹ ஹ ஹா ஹே ஹே ஹெ ஹே
ஆத்தா வயத்திலே ஆடிப்பழகினேன் அதுவே ஆரம்ப மேடை
ஹார்ட்டுபீட்டுக்கு பாடிப் பழகினேன் நானொரு சங்கீத மேதை
நான் பொறந்ததும் ஆட்டம் வந்தது
வாய் தொறந்ததும் பாட்டு வந்தது
இந்த ம ப த ப க ம ப ம த க தி மி  தி மி த க
கேக்குற கொம்பன் யாருடா

பாடுறது யாரு கொம்பனா
பாரதியின் கொள்ளுப்பேரனா
பாடுறது யாரு கொம்பனா
பாரதியின் கொள்ளுப்பேரனா

ஹெ ஹெ ஹெ ஹெ ஹே
கூத்தா அடிக்கிற கோட்டான் மூஞ்சியே
தாத்தா நானடி ஒனக்கு
காத்தா கருப்பா யாருன்னு சொல்லாட்டி
காத்து இருக்கடி சவுக்கு
அடி யாருக்குடி காது குத்துறே
நீ எங்களுக்கா பூவு சுத்துறே
இந்த வேப்பிலைய கையில் எடு
வேண்டியத சொல்லிவிடு
பாவம் இவள விட்டுடு

வாடா வஸ்த்தாது வயசோ பாத்தாது
வாய்ப்பந்தல் போட வேண்டாம்.. ஹோ ஹோய்
ஏண்டா பிஸ்கோத்து பயலே எங்கூட டிஸ்கோ ஆட வரியாடா
நான் முழுசா நனஞ்சுபுட்டேன் இப்ப எதுக்கும் துணிஞ்சுபுட்டேன்
இனி அச்சமில்ல நாணமில்ல வெக்கமில்ல நானுனக்கு
யாருன்னு காட்டுறேண்டா

பாடுறது யாரு கொம்பனா..அஹா
பாரதியின் கொள்ளுப்பேரனா..ஆஹா
ஆவி இல்லேடா சாமி இல்லேடா ஹா
அம்மன் இல்லேடா ..ஓ...
ஆத்தா இல்லேடா ....ஓ
வாலிபர் உள்ளத்தை வாலிபால் ஆடிடும் வஞ்சிக்கொடி நான்










1 comment:

  1. https://www.youtube.com/watch?v=f36LJZaTFUc

    aaduradhu endha ammano

    ReplyDelete