Thursday, July 7, 2016

MANNAN KOORAI SELAI MANJAM PAARKUM MAALAI - SIRICHCHAALAI - CHITHRA


FILM: SIRAICHCHAALAI
SINGER: CHITHRA
MUSIC: ILAIYARAAJAA
LYRICS: ARIVUMATHI

 மன்னன் கூரைச் சேலை
மஞ்சம் பார்க்கும் மாலை
கனவுகள் தான் கை கூடாதோ
சிறைக் கதவுகள் தான் தாழ் திறவாதோ
கண்ணன் வந்து நேரில் என்னைச் சேரும் நாளில்
என்னுயிரில் மின்னல் தானோ
இனி பூ மழையும் கொஞ்சும் தேனோ
இள மாப்பிள்ளைக்கு புதுப் பொண்ணும் நான் தானா
நல் முத்தே வா வா ஓஹோ
மன்னன் கூரைச் சேலை
மஞ்சம் பார்க்கும் மாலை
கனவுகள் தான் கை கூடாதோ
சிறைக் கதவுகள் தான் தாழ் திறவாதோ

சிந்தூர பொட்டிட்டேன் ஒளி
பொன் வளை  கையிலணிந்தேன்
ரெண்டுக்கும் மெத்தை மேல் சிந்த ஆசை
சாமத்தில் பூஜைக்கு உயிர்திரியில்  விளக்கு கொளுத்தி
நான் வைப்பேன் எனம் மன்னன் பேரைச் சொல்லி
பிள்ளைச் செல்வம் நூறென்று
சொல்லி ஊரும் மெச்சும் தான்
நித்தம் பள்ளி பாடங்களும்
கலைகள் பலவும் தருவேன் நான்
நாளும் பொழுதும் உள்ளம் இளைத்தேன்
என்னைத் தேடி வா
முல்லைக் கொடியும் முள்ளை அள்ளித் தூவும்
முன்பே நீ வள்ளல் போல் கண்ணா வா

மன்னன் கூரைச் சேலை
மஞ்சம் பார்க்கும் மாலை
கனவுகள் தான் கை கூடாதோ
சிறைக் கதவுகள் தான் தாழ் திறவாதோ

பட்டாடை மேல் எல்லாம் என் மன்னவன் வாசனை உண்டு
நாள் தோறும் நான் வைப்பேன் பொன் விளக்கேற்றி
பூ தூங்கும் மஞ்சத்தில் முகம் வேர்க்கையில்  தாவணி வீசி
இனி நாள் தோறும் தாலாட்டும் தாயும் நான் தான்
தீயில் தீரும் மோகங்கள் நீரில் தீரா தாகங்கள்
கப்பல் கற்பனை வேகம் போய் இன்றே அவருடன் வந்திடுமா
உன் வழி பார்க்கும் கன்னியின் இரு விழி
ஓய்வும் கொள்ளட்டும்
முத்தம் பதித்தவன் நெஞ்சில் நானே
மெத்தை இடும் நாள் தான் தாகங்கள் பூச்சூடும்

மன்னன் கூரைச் சேலை
மஞ்சம் பார்க்கும் மாலை
கனவுகள் தான் கை கூடாதோ
சிறைக் கதவுகள் தான் தாழ் திறவாதோ
கண்ணன் வந்து நேரில் என்னைச் சேரும் நாளில்
என்னுயிரில் மின்னல் தானோ
இனி பூ மழையும் கொஞ்சும் தேனோ
இள மாப்பிள்ளைக்கு புதுப் பொண்ணும் நான் தானா
நல் முத்தே வா வா ஓஹோ
மன்னன் கூரைச் சேலை
மஞ்சம் பார்க்கும் மாலை
கனவுகள் தான் கை கூடாதோ
சிறைக் கதவுகள் தான் தாழ் திறவாதோ

No comments:

Post a Comment