Thursday, July 7, 2016

VIZHIYUM VIZHIYUM - SADHURANGAM - HARINI MADHU BALAKRISHNAN


FILM: SADHURANGAM
MUSIC: VIDHYA SAAGAR
LYRICS: ARIVUMATHI
SINGERS: HARINI MADHU BAALAKRISHNAN

விழியும் விழியும் நெருங்கும் பொழுது
வளையல் விரும்பி நொறுங்கும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு
இதழும் இதழும் இழையும் பொழுது
இமையில் நிலவு நுழையும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு
ஆதலினால் காதல் தொட்டு விடு
ஆதலினால் நாணம் விட்டு விடு

விழியும் விழியும் நெருங்கும் பொழுது
வளையல் விரும்பி நொறுங்கும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு

முத்தம் ஒன்று தந்தவுடன் மூடி கொள்ளும் கண்கள்
மொத்தமாக கூந்தல் அள்ளி மூடி கொள்ளும் கைகள்
உடல் இறங்கி நீந்தும் என்னை உயிர் இழுத்து செல்லும்
ஒய்வு தந்த காரணத்தால் உடைகள் நன்றி சொல்லும்
விரலும் விரலும் இறுகும் பொழுது
முதுகின் சுவரில் வழியும் விழுது
விரலும் விரலும் இறுகும் பொழுது
முதுகின் சுவரில் வழியும் விழுது
உறங்கிடாமல் உறங்கிடாமல் கிறங்கி விடு

விழியும் விழியும் நெருங்கும் பொழுது
வளையல் விரும்பி நொறுங்கும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு

புயல் முடிந்து போன பின்னே
கடல் உறங்க செல்லும்
கண் விழித்த அலை திரும்ப
களம் இறங்க சொல்லும்

உயிர் அணுக்கள் கூடி  நின்று ஓசை
இன்றி கிள்ளும்
ஒரு நொடிக்குள் நூறு முறை மெத்தை
இங்கு துள்ளும்
இமையின் முடியால் உடலை உழவா
இளமை வயலில் புயலை நடவா
இமையின் முடியால் உடலை உழவா
இளமை வயலில் புயலை நடவா
இசைத்திடாமல் இசைத்திடாமல் மூச்சு விடு

விழியும் விழியும் நெருங்கும் பொழுது
வளையல் விரும்பி நொறுங்கும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு
இதழும் இதழும் இழையும் பொழுது
இமையில் நிலவு நுழையும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு
ஆதலினால் காதல் தொட்டு விடு
ஆதலினால் நாணம் விட்டு விடு


No comments:

Post a Comment