Sunday, April 12, 2020

MAAMAN ORU NAAL - ROSAPOO RAVIKKAI KAARI



படம்: ரோசாப்பூ ரவிக்கைக்காரி
பாடல்: கங்கை அமரன்
இசை: இளையராஜா
குரல்: SPB, SP சைலஜா


மாமன் ஒரு நாள் மல்லியப்பூ கொடுத்தான்
என் மாமன் ஒரு நாள் மல்லியப்பூ கொடுத்தான்
அடி ஆத்தி இது எதுக்கு
நான் யோசனை பண்ணி பாத்தேனம்மா
அவன் வாங்கிக்க சொல்லி தந்தானம்மா

மாமன் ஒரு நாள் மல்லியப்பூ கொடுத்தான்
என் மாமன் ஒரு நாள் மல்லியப்பூ கொடுத்தான்
அடி ஆத்தி இது எதுக்கு
நான் யோசனை பண்ணி பாத்தேனம்மா
அவன் வாங்கிக்க சொல்லி தந்தானம்மா

என்னத்தை சொன்னான் ஏது சொன்னான்
சின்னபுள்ளன்னான் பச்சை புள்ளன்னான்
வாசத்திலே மதி மறந்து
வாங்கிகிட்டு நான் வச்சிக்கிட்டேன் நான்
மல்லியப்பூ வசம் என் மாமன் மேல வீசும் (மாமன் )


மாங்கா தோப்போரம்  நான் மறுநா(ள்) போனேனா
தேங்கா பூவாட்டம் நான் சிரிச்சிக் கிட்டிருந்தேனா
அடி ஆத்தாடி  என்னோரமா என் மாமன் வந்தான் அங்கே

ஏய் என் மாமன் வந்தான் அங்கே  ஒரு மாங்கா தந்தான் திங்க
என்னத்தை சொன்னான் ஏது சொன்னான்
சின்னபுள்ளன்னான் பச்சை புள்ளன்னான்
ஆசையிலே என்ன மறந்து
வாங்கிட்டு நான்  தின்னுபுட்டேன் நான்

மாம (ன்) தந்த மாங்கா நல்ல மல்கோவாதாங்க (மாமன்)


கம்மா கரையோரம் நான் குளிச்சிக் கிட்டிருந்தேனா
சேலை துணி எல்லாம் நான் தொவைச்சிக் கிட்டிருந்தேனா
அடி அம்மாடி என்னோரமா
என் மாமன் தானே  வந்தான்
புது சேலை தானே தந்தான்

என்னத்தை சொன்னான் ஏது சொன்னான்
சின்னபுள்ளன்னான் பச்சை புள்ளன்னான்
சேலையிலே என்ன மறந்து
வாங்கிக்கிட்டு நான் கட்டிக்கிட்டேன் நான்

மாமந்தந்த சேலை அந்த மல்லியப்பூ போல (மாமன்)

ஒரு நா(ள் ) தனியா தான் நான் வீட்டில இருந்தேனா
மெதுவா வந்தானாம் நான் வரவா என்றானா
அடி ஆத்தாடி என்னோரமா
புது பாய போட்டான் அங்கே
புது விதமா பாத்தான் இங்கே

என்னத்தை சொன்னான் ஏது சொன்னான்
சின்னபுள்ள நான் பச்சை புள்ளை நான்
ஒன்னுமறியா கன்னி பொண்ணு நான்
மதி மயங்கி படுத்துக்கிட்டேன் 

No comments:

Post a Comment