Wednesday, April 22, 2020

KODUTHADHELLAM KODUTHAAN - PADAGOTTI


படம்: படகோட்டி
இசை: M.S. விசுவநாதன்
குரல்: T.M. சௌந்தரராஜன்
பாடல்: வாலி
வெளியான வருடம்: 1964

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காக கொடுத்தான் ?...
ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காக கொடுத்தான்

மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா ?
மாலைநிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா ?...
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை !...

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காக கொடுத்தான் ?...
ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காக கொடுத்தான்

படைத்தவன்மேல் பழியுமில்லை
பசித்தவன் மேல் பாவமில்லை...
கிடைத்தவர்கள் பிரித்துக் கொண்டார்
உழைத்தவர்கள் தெருவில் நின்றார்...
பலர் வாட வாட
சிலர் வாழ வாழ
ஒருபோதும் தெய்வம் பொறுத்ததில்லை !....

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காக கொடுத்தான் ?...
ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காக கொடுத்தான்

இல்லையென்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லையென்பார்...
மடிநிறைய பொருளிருக்கும்
மனம்நிறைய இருளிருக்கும் !...
எதுவந்த போதும் பொதுவென்று வைத்து
வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம் !!...

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காக கொடுத்தான் ?...
ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காக கொடுத்தான் !!!!!.....

No comments:

Post a Comment