Wednesday, April 8, 2020

ANBU MALARGALIN - KANNUKU MAI EZHUDHU




படம்: கண்ணுக்கு மையெழுது
பாடல்: கா.காளிமுத்து
இசை: இளையராஜா
குரல்: எஸ்.ஜானகி
வெளியான ஆண்டு: 1986

அன்பு மலர்களின் சோலை இது
ஆசை மனம் இட்ட கோலம் இது
அன்பு மலர்களின் சோலை இது
ஆசை மனம் இட்ட கோலம் இது
சொந்தங்களே பந்தங்களே
சொந்தங்களே பந்தங்களே
சொர்க்கம் இதுவென்று
சொல்லி மகிழ்கின்ற
அன்பு மலர்களின் சோலை இது
ஆசை மனம் இட்ட கோலம் இது

கண்ணில் தெரியுது அன்பின் எல்லை
காணும் கனவுக்கு எல்லை இல்லை
மண்ணில் நிலைக்கின்ற காலம் வரை
மங்கலம் பொங்கிட என்ன குறை
கண்மணியே.....சிறு பொன்விளக்கே
முழு நிலவாய் புது மலராய்
முழு நிலவாய் புது மலராய்
உன்னில் இருந்து இவ்வையத்தில் வாழ்வேன்

அன்பு மலர்களின் சோலை இது
ஆசை மனம் இட்ட கோலம் இது
சொந்தங்களே பந்தங்களே
சொர்க்கம் இதுவென்று
சொல்லி மகிழ்கின்ற
அன்பு மலர்களின் சோலை இது
ஆசை மனம் இட்ட கோலம் இது

அந்தியின் சந்திப்பு நித்தம் நித்தம்
அன்பு வழங்கிடும் முத்தம் முத்தம்
இந்தப்  பொழுது எனக்கினிமை
இருந்து மகிழ்வது உன் கடமை
வாழும் வரை வாழ்ந்திருப்பேன்
வாழ்பவரை வாழ்த்திச் செல்வேன்
வாழ்பவரை வாழ்த்திச் செல்வேன்
நெஞ்சம் நிறைவோடு வாழ்த்துகிறேன்

அன்பு மலர்களின் சோலை இது
ஆசை மனம் இட்ட கோலம் இது
சொந்தங்களே பந்தங்களே
சொந்தங்களே பந்தங்களே
சொர்க்கம் இதுவென்று
சொல்லி மகிழ்கின்ற
அன்பு மலர்களின் சோலை இது
ஆசை மனம் இட்ட கோலம் இது
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்


No comments:

Post a Comment