Sunday, October 16, 2016

THOOKAM UN KANGALAI THAZHUVATTUME - AALAYA MANI




படம் : ஆலயமணி
இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
குரல்  : ஜானகி
பாடல் : கண்ணதாசன்

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
அந்தத் தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே


காலையில் நான் ஓர் கனவு கண்டேன்
அதைக் கண்களில் இங்கே  எடுத்து வந்தேன்
எடுத்ததில் ஏதும் குறைந்துவிடாமல்
கொடுத்துவிட்டேன் உந்தன் கண்களிலே… கண்களிலே … கண்களிலே…

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

மனமென்னும் மாளிகை திறந்திருக்க
மையிட்ட கண்கள் சிவந்திருக்க
இரு கரம் நீட்டி திருமுகம் காட்டி
தவழ்ந்துவந்தேன் நான் உன்னிடமே…
தவழ்ந்துவந்தேன் நான் உன்னிடமே


தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
அந்தத் தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்

ஜானகியம்மாவின்  ரெஸ்ட்
=================================

’சமையல்...சமையல்...சமையல்...! 77 ஆண்டுகள் முடிந்த பின்னர், இப்போதுதான் கடந்த ஆறு மாதங்களாக சமையல் கற்றுக் கொள்கிறேன். இதுநாள்வரை நான் சமையலறை பக்கம் சென்றது கூட இல்லை. அதனால் ஓய்வு நேரத்தில் நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் சமையல் கற்றுக் கொண்டிருக்கிறேன். வீட்டுக்கு வரும் ரசிகர்களுடன் பேசி மகிழ்வேன். காலையில் சின்ன வாக்கிங். மாலையில் 5 மணி முதல் 11 மணி வரை டி.வி. சீரியல்கள் பார்ப்பேன். அருமையாக, மகிழ்ச்சியாகச் செல்கிறது வாழ்க்கை.’

என்கிறார் பின்னணிப் பாடகர் எஸ். ஜானகி அவர்கள் ஜன்னல் மாதமிருமுறை இதழ் (அக். 01-14) பேட்டியில். கற்றுக் கொள்வதற்கு வயதும் இல்லை; ஓய்வு கொண்ட பிறகும் வாழ்வில் உற்சாகத்திற்குக் குறையும் இல்லை ஜானகியம்மாவிடம்.

மற்றொரு முக்கிய பகுதி இங்கே...

‘தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே..’ங்கிற பாடல் பாடுவதற்காகத் தயாரான நேரம் ஜலதோஷம் பிடித்துக் கொண்டது. டாக்டரிடம் அழைத்துச் சென்றார் என் கணவர். டாக்டர் கொடுத்த ‘ஆஸ்பிரின்’ எனக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியது. ரெகார்டிங் தியேட்டரின் நுழைந்தபோதே கண்கள் வீங்கி விட்டன. நாக்கு குளறியது. ஆனாலும், ஒரே டேக்கில் பாட்டு ஓகே. அப்படியே என் கணவர் என்னை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அன்று கொஞ்சம் தவறியிருந்தால், இன்று ஜானகி பேசிக் கொண்டிருக்க மாட்டாள்.’

என்று படிக்கும்போதே நமக்கு நெகிழ்கிறது.

முத்தாய்ப்பான நம் கன்னத்தில் ‘சப்பக்’ என அறையும் வரிகள்...

‘குரல் வளத்தை மட்டுமே பார்த்த பலருக்கு, உடல் நலக் குறைவால் நான் பட்ட அவஸ்தைகள் தெரியவே தெரியாது.’

நன்றி: பக்கம் 66, ஜன்னல் (அக். 1-14) இதழ்.

https://www.facebook.com/groups/1018417744856618/permalink/1333840609980995/

No comments:

Post a Comment