Thursday, October 27, 2016

ENGEYO YETHO PAATONDRU KETTEN - NADHIYAI THEDI VANDHA KADAL - SPB PS


FILM: NATHIYAI THEDI VANDHA KADAL
SINGERS: SPB PS
MUSIC: IR
LYRICS: KANNADAASAN 




எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்
எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்
அங்கே வா நீயும் ஆனந்தம் காண்போம்
குளிர் மேகங்கள் பனி காலங்கள்
பெற வேண்டும் சுகங்களே
எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்

பூஞ்சோலையில் பூந்தென்றலில் பொன்மேனி நடமாடுது
என் நெஞ்சம் தடுமாறுது
தோளோடு நான் சாய்ந்தாடவா சொல்லாத சுவை கூறவா
சூடான கதை சொல்லவா
பொன்மாலை நேரம் தேனானது பூ மஞ்சள் மேனி ஏன் வாடுது
சொர்கத்தைக் கண்டேனம்மா
எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்

தாயாகினேன் தாலாட்டினேன் கண்ணா என் ராஜாங்கமே
நீதான் என் ஆதாரமே
மணிப்பிள்ளைகள் மான் குட்டிகள் உறவாடும் தெய்வங்களே
ஒளி வீசும் தீபங்களே
வாடாத முல்லை பூ மேனியே தேடாமல் வந்த செல்வங்களே
என் ஜீவன் உன்னோடுதான்

எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்
அங்கே வா நீயும் ஆனந்தம் காண்போம்
குளிர் மேகங்கள் பனி காலங்கள்
பெற வேண்டும் சுகங்களே
எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்

No comments:

Post a Comment