Saturday, October 1, 2016

THAVIKIDHU THAYANGUDHU ORU MANADHU - NADHIYAI THEDI VANDH AKADAL - JC SPS

தவிக்குது தயங்குது ஒரு மனது
தவிக்குது தயங்குது ஒரு மனது
தினம் தினம் தூங்காமலே
ஒரு சுகம் காணாமலே
அது தொடர்ந்து எனை படர்ந்து
ஏதோ சொல்கின்றது
மனம் எங்கோ செல்கின்றது
தவிக்குது தயங்குது ஒரு மனது

ஏதோ ஒன்று நெஞ்சிலே
எழுந்ததென்ன உன்னிலே
எங்கோ சென்ற கண்ணிலே
ஏக்கம் என்ன பெண்ணிலே
மலர்ந்திடாத ஆசையே
மலருகின்ற நேரமே
எண்ணிய சுகம் என்னுடன் வரும்
லாலல லலா லாலல லலா
கனியிதழ் சுவைதனில் காதல் நீராடு
தவிக்குது தயங்குது ஒரு மனது

பொங்கும் ஆசை ஆற்றிலே
நனைந்ததெந்தன் உள்ளமே
எங்கும் இன்ப வெள்ளமே
எழுந்து பாய்ந்து செல்லுமே
தோன்றுகின்ற தாகமே
தொடருகின்ற காலமே
பார்ப்பதில் சுகம் பலவித ரகம்
லாலல லலா லாலல லலா
பசிக்கொரு உணவென பாவை நீ வாவா
தவிக்குது தயங்குது ஒரு மனது

கங்கை கொண்ட சோழனின்
கனவில் வந்த தேவியே
மங்கை எந்தன் வாழ்விலே
மன்னன் நீயும் பாதியே
சிலையை போன்ற தோற்றமே
தினமும் என்னை வாட்டுமே
இன்னிசை சுகம் இன்பத்தை தரும்
லாலல லலா லாலல லலா
இரவிலும் பகலிலும் மீட்ட நீ வாவா

தவிக்குது தயங்குது ஒரு மனது
தினம் தினம் தூங்காமலே
ஒரு சுகம் காணாமலே
அது தொடர்ந்து எனை படர்ந்து
ஏதோ சொல்கின்றது
மனம் எங்கோ செல்கின்றது
ஏதோ சொல்கின்றது
மனம் எங்கோ செல்கின்றது

No comments:

Post a Comment