Thursday, October 27, 2016

THENNA MARATHTHULA THENDRALADIKKITHU - LAKSHMI - IR PS


FILM: LAKSHMI
SINGER: ILAIYARAAJAA SUSEELA
MUSIC: ILAIYARAAJAA
LYRIVS: AALANGUDI SOMU

தென்ன மரத்துல தென்றலடிக்கிது நந்தவனக்கிளியே
அடியே புன்னவனக்குயிலே
தென்ன மரத்துல தென்றலடிக்கிது நந்தவனக்கிளியே
அடியே புன்னவனக்குயிலே
நான் தெனந்தோறும் ரசிச்சாலும் தெகட்டாது பசிக்காது
சின்னமணிக்குயிலே....அடியே உன்ன நெனைக்கயிலே
தென்ன மரத்துல தென்றலடிக்கிது நந்தவனக்கிளியே
அடியே புன்னவனக்குயிலே

கன்னம் செவக்குது எண்ணம் தவிக்கிது
உன்ன நெனைக்கயிலே இதமா என்ன அணைக்கயிலே
கண்ணு சிமிட்டுது என்ன வெரட்டுது மெல்ல சிரிக்கையிலே
நீதான் என்ன ரசிக்கையிலே
உள்ளம் சிலிர்க்குது மின்னி சொலிக்கிது கட்டிப்புடிக்கயிலே
நெசமா கைய புடிக்கயிலே
இது அணச்சாலும் கொறயாது அழிச்சாலும் மறையாது
சொல்ல தெரிஞ்சிருந்தும் அத நான் சொல்ல முடியலையே

தென்ன மரத்துல தென்றலடிக்கிது நந்தவனக்கிளியே
கிளியே புன்னவனக்குயிலே
நான் தெனந்தோறும் ரசிச்சாலும் தெகட்டாது பசிக்காது
சின்னமணிக்குயிலே....அடியே உன்ன நெனைக்கயிலே
தென்ன மரத்துல தென்றலடிக்கிது நந்தவனக்கிளியே
கிளியே புன்னவனக்குயிலே

பட்டு கழுத்துல முத்து தெரியுது பொண்ணு சிரிக்கையிலே
அழகு கண்ண பறிக்கயிலே
தொட்டு தழுவுன்னு சொல்லி அழைக்கிது இந்த மனசினிலே
ரெண்டும் சின்ன வயசினிலே
விட்டு விலகுன்னு வெட்க்கம் தடுக்குது
போக முடியலையே எனக்கு ஏதும் புரியலையே
நான் பாய் போட்டுப் படுத்தாலும் பாலாக குடிச்சாலும்
தூக்கம் புடிக்கலையே எனக்கு ஏதும் ருசிக்கலையே

தென்ன மரத்துல தென்றலடிக்கிது நந்தவனக்கிளியே
அடியே புன்னவனக்குயிலே

சின்னஞ்சிருசுக கொஞ்சிக்குலவுது அந்திப்பொழுதினிலே
ஊஞ்சல் ஆல விழுதினிலே
கன்னி வயசுல பொண்ணு சிரிக்கிது என்ன சுகம் அதிலே
நெனச்சு ஏங்கி தவிப்பதிலே
இன்ப நெனப்புல வெந்து தவிக்கிது பட்ட பகலினிலே
கொளுத்தும் உச்சி வெயிலினிலே
இது தானாக ஆறாது தழுவாம தீராது
ஒண்ணும் புரியலியே புரிஞ்சும் சொல்ல தெரியலையே

தென்ன மரத்துல தென்றலடிக்கிது நந்தவனக்கிளியே
அடியே புன்னவனக்குயிலே
நான் தெனந்தோறும் ரசிச்சாலும் தெகட்டாது பசிக்காது
சின்னமணிக்குயிலே....அடியே உன்ன நெனைக்கயிலே
தென்ன மரத்துல தென்றலடிக்கிது நந்தவனக்கிளியே
கிளியே புன்னவனக்குயிலே
நான் தெனந்தோறும் ரசிச்சாலும் தெகட்டாது பசிக்காது
சின்னமணிக்குயிலே....கிளியே உன்ன நெனைக்கயிலே
தென்ன மரத்துல தென்றலடிக்கிது நந்தவனக்கிளியே
அடியே புன்னவனக்குயிலே

No comments:

Post a Comment