Monday, February 20, 2017

POI VAA MAGALE - KARNAN



படம்: கர்ணன்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
குரல்: சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
பாடல்: கண்ணதாசன்


போய் வா மகளே போய் வா
கண்ணில் புன்னகை சுமந்து
போய் வா போய் வா போய் வா

தாய் வீடென்பதும் தன் வீடே
தந்தையின் நாடும் நம் நாடே
சேயும் சேயும் வரக்கண்டால்
திறவாக் கதவும் திறவாதோ?

போய் வா மகளே போய் வா
கண்ணில் புன்னகை சுமந்து
போய் வா போய் வா போய் வா

ஒரு நாள் கோபம் ஒரு நாளே
அதில் உற்றவர் கோபம் வளராதே
மணநாள் மன்னன் உனைக் கண்டு
மதி மயங்குகிறான் நீ தளராதே

போய் வா மகளே போய் வா
கண்ணில் புன்னகை சுமந்து
போய் வா போய் வா போய் வா

காவலர் சேனை நின்றிருக்கும்
தந்தை கண்களும் உன்னைக் கண்டிருக்கும்
பாவலர் தோழியர் இசை கேட்கும்
அன்புப் பார்வையெல்லாம் உன்னை வரவேற்கும்

போய் வா மகளே போய் வா
கண்ணில் புன்னகை சுமந்து
போய் வா போய் வா போய் வா

No comments:

Post a Comment