Friday, February 24, 2017

ORU NADHI - SAMURAI

 
 
படம்: சாமுராய்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
குரல்: நித்யஸ்ரீ, துஷாரா
பாடல்: வைரமுத்து

ஒரு நதி ஒரு பௌர்ணமி
ஓர் ஓடம் என்னிடமுண்டு
ஓடக்காரன் ஓடக்காரன்
அட உங்களில் யாருண்டு

ஒரு காடு சிறு மேடு
சில பூக்கள் என்னிடமுண்டு
பூக்காரன் பூக்காரன்
அட உங்களில் யாருண்டு

ஒரு புதையல் பொற்குவியல்
மலைவாசல் என்னிடமுண்டு
அலிபாபா அலிபாபா
அட உங்களில் யாருண்டு...

ஒரு நதி ஒரு பௌர்ணமி ஓர் ஓடம்..
ஒரு புதையல் பொற்குவியல் மலைவாசல்..

பாராமல் போன பௌர்ணமி எல்லாம்
பறித்துக் கொடுக்கும் ஒருவன்
கேளாமல் போன பாடலை எல்லாம்
திரட்டிக் கொடுக்கும் ஒருவன்

நான்தானா?.... நீயில்லை..
நான்தானா?.... நீயில்லை..

வான்மழையில் நனைந்த வானவில்லை
என் மடியில் கட்டும் ஒருவன்
என் தேகக் கதவு ஜன்னல் எல்லாம்
திறந்து வைக்கும் ஒருவன்

நான்தானா?.... நீயில்லை..

என் தேடல் அது வேறு
அடப்  போடா நீயில்லை..

ஒரு நதி ஒரு பௌர்ணமி
ஓர் ஓடம் என்னிடமுண்டு
ஓடக்காரன் ஓடக்காரன்
அட உங்களில் யாருண்டு

ஒரு காடு சிறு மேடு
சில பூக்கள் என்னிடமுண்டு
பூக்காரன் பூக்காரன்
அட உங்களில் யாருண்டு


தீராமல் போன ஆசைகள் எல்லாம்
தீர்க்கத் தெரிந்த ஒருவன்
போகாத எல்லை போய் வந்தாலும்
புன்னகை செய்யும் ஒருவன்..

புன்னகை செய்யும் ஒருவன்.. ஆ ஆ

தீராமல் போன ஆசைகள் எல்லாம்
தீர்க்கத் தெரிந்த ஒருவன்
போகாத எல்லை போய் வந்தாலும்
புன்னகை செய்யும் ஒருவன்..

நீதானா ?... நானில்லை..
நீதானா ?.. நான் நான்  நானில்லை..

ஒரு கற்பு கன்னிமை கருமம்  எல்லாம் 
கண்டு கொள்ளாத ஒருவன் 
நான் போதும் போதும் என்னும் வரையில் 
புதுமை செய்யும் ஒருவன்..

நீதானா ?... ஐயோ நானில்லை..

நான் தேடும் ஸ்ருங்காரம் 
இங்கு ஏனோ ஏனில்லை ...

ஒரு நதி ஒரு பௌர்ணமி
ஓர் ஓடம் என்னிடமுண்டு
ஓடக்காரன் ஓடக்காரன்
அட உங்களில் யாருண்டு

ஒரு காடு சிறு மேடு
சில பூக்கள் என்னிடமுண்டு
பூக்காரன் பூக்காரன்
அட உங்களில் யாருண்டு

ஒரு புதையல் பொற்குவியல்
மலைவாசல் என்னிடமுண்டு
அலிபாபா அலிபாபா
அட உங்களில் யாருண்டு...

எங்களில் யாருண்டு...

ஹ்ம்ம்...ஹ்ம்ம்

ஒரு நதி ஒரு பௌர்ணமி

ஒரு நதி ஒரு பௌர்ணமி

ஒரு நதி.


















No comments:

Post a Comment