Friday, January 16, 2026

MAAPILLAIKKU MAAMAN MANASU - NETRIKANN


படம்: நெற்றிக்கண் 
பாடல்: கண்ணதாசன் 
இசை: இளையராஜா 
குரல்: மலேஷியா வாசுதேவன், பி. சுசீலா 

மாப்பிள்ளைக்கு மாமன் மனசு 
மாமனுக்கோ காமன் மனசு 
புதிய ஒரு ஜோடி பொருத்தம் பல கோடி 
பருவ வயது கடந்த பிறகும் துடிக்கிற 


மாப்பிள்ளைக்கு மாமன் மனசு 
மாமனுக்கோ காமன் மனசு 

நடந்த வரை வயசுக்கு பொருத்தமில்லை  
நடக்கும் கதை மனசுக்கு அமைதி இல்லை 
விதைத்த விதை முளைத்தது மாறவில்லை 
விதைத்து விட்டுத் துடிப்பதில் லாபமில்லை 
தசரதா புரிந்ததா 
ஹரிகதா தெரிந்ததா 
எனக்கும் உனக்கும்  
புரிந்தவரையில் புரியட்டும் 

மாப்பிள்ளைக்கு மாமன் மனசு 
மாமனுக்கோ காமன் மனசு 

கற்றவர்கள் எழுதிய கவிதையிலும் 
மற்றவர்கள் குறைகளைக் காண்பதுண்டு 
குற்றமெனச் சொன்னது சொன்னதுதான் 
நெற்றிக் கண்ணைத்  திறந்தவன் கண்டதுதான் 
சிவனிடம் துணிந்தவன் 
எவனிடம் அஞ்சுவான் 
உலகம் முழுதும் 
அறிந்த கதைக்கு விளக்கமா?

மாப்பிள்ளைக்கு மாமன் மனசு 
மாமனுக்கோ காமன் மனசு 
புதிய ஒரு ஜோடி பொருத்தம் பல கோடி 
பருவ வயது கடந்த பிறகும் துடிக்கிற 

மாப்பிள்ளைக்கு மாமன் மனசு 
மாமனுக்கோ காமன் மனசு 



No comments:

Post a Comment