Friday, July 13, 2018

VASANTHA KALA NADHIGALILE - MOONRU MUDICHU



அந்தம் - முடிவு, ஆதி - ஆரம்பம்.. முடிவிலே ஆரம்பிப்பது அந்தாதி.

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே..

அபிராமி அந்தாதி 13 வது பாடல்.. அடுத்த பாடல் வந்திப்பவர் என்று தொடங்கும்..

வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்
சிந்திப்பவர் நல்திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே

இது போல கண்ணதாசன் சில பாடல்களை எழுதியுள்ளார்.

வசந்த கால நதிகளிலே
வைரமணி நீரலைகள்

நீரலைகள் மீதினிலே
நெஞ்சிரண்டின் நினைவலைகள்..

கேட்டு ரசியுங்கள்..


படம்: மூன்று முடிச்சு
இசை: எம்.எஸ்.வி
குரல்: ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம், எம்.எஸ்.வி
பாடல்: கண்ணதாசன்

வசந்த கால நதிகளிலே
வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே
நெஞ்சிரண்டின் நினைவலைகள்

நினைவலைகள் தொடர்ந்து வந்தால்
நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்கு
காமனவன் மலர்க்கணைகள்

மலர்க்கணைகள் பாய்ந்து விட்டால்
மடியிரண்டும் பஞ்சணைகள்
பஞ்சணையில் பள்ளி கொண்டால்
மனமிரண்டும் தலையணைகள்

வசந்த கால நதிகளிலே
வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே
நெஞ்சிரண்டின் நினைவலைகள்

தலையணையில் முகம் புதைத்து
சரசமிடும் புதுக் கலைகள்
புதுக் கலைகள் பெறுவதற்கு
பூமாலை மணவினைகள்


மணவினைகள் யாருடனோ
மாயவனின் விதிவகைகள்
விதிவகையை முடிவு செய்யும்
வசந்தகால நீரலைகள் 

No comments:

Post a Comment