Friday, January 16, 2026

MAAPILLAIKKU MAAMAN MANASU - NETRIKANN


படம்: நெற்றிக்கண் 
பாடல்: கண்ணதாசன் 
இசை: இளையராஜா 
குரல்: மலேஷியா வாசுதேவன், பி. சுசீலா 

மாப்பிள்ளைக்கு மாமன் மனசு 
மாமனுக்கோ காமன் மனசு 
புதிய ஒரு ஜோடி பொருத்தம் பல கோடி 
பருவ வயது கடந்த பிறகும் துடிக்கிற 


மாப்பிள்ளைக்கு மாமன் மனசு 
மாமனுக்கோ காமன் மனசு 

நடந்த வரை வயசுக்கு பொருத்தமில்லை  
நடக்கும் கதை மனசுக்கு அமைதி இல்லை 
விதைத்த விதை முளைத்தது மாறவில்லை 
விதைத்து விட்டுத் துடிப்பதில் லாபமில்லை 
தசரதா புரிந்ததா 
ஹரிகதா தெரிந்ததா 
எனக்கும் உனக்கும்  
புரிந்தவரையில் புரியட்டும் 

மாப்பிள்ளைக்கு மாமன் மனசு 
மாமனுக்கோ காமன் மனசு 

கற்றவர்கள் எழுதிய கவிதையிலும் 
மற்றவர்கள் குறைகளைக் காண்பதுண்டு 
குற்றமெனச் சொன்னது சொன்னதுதான் 
நெற்றிக் கண்ணைத்  திறந்தவன் கண்டதுதான் 
சிவனிடம் துணிந்தவன் 
எவனிடம் அஞ்சுவான் 
உலகம் முழுதும் 
அறிந்த கதைக்கு விளக்கமா?

மாப்பிள்ளைக்கு மாமன் மனசு 
மாமனுக்கோ காமன் மனசு 
புதிய ஒரு ஜோடி பொருத்தம் பல கோடி 
பருவ வயது கடந்த பிறகும் துடிக்கிற 

மாப்பிள்ளைக்கு மாமன் மனசு 
மாமனுக்கோ காமன் மனசு 



Sunday, January 11, 2026

PAARADI KANNE KONJAM - VALLAVANUKU VALLAVAN



படம்: வல்லவனுக்கு வல்லவன்

பாடல்: கண்ணதாசன்

குரல்: சீர்காழி கோவிந்தராஜன், சுசீலா, டி.எம்.எஸ்

இசை: வேதா



பாரடி கண்ணே கொஞ்சம் 

பைத்தியமானது நெஞ்சம்

தேடுதடி மலர் மஞ்சம்

சிரிப்புக்கு என்னடி பஞ்சம் (பாரடி)


பைத்தியமே கொஞ்சம் நில்லு

வைத்தியரிடம் போய் சொல்லு

நெருங்காதே இது முள்ளு

தருவதை வாங்கிக் கொள்ளு (பைத்தியமே)


அடடா இது என்ன கண்ணா நீ

அந்தர லோகத்து பெண்ணா ஓ

அடடா இது என்ன கண்ணா நீ

அந்தர லோகத்து பெண்ணா


உடையைப் பார்த்தவுடன் மனசு  பாதி கெட்டு

இடையைப் பார்த்தவுடன் இருந்த மீதி கெட்டு .. மீதி கெட்டு

மனிதனான என்னை மடையனாக்கி விட்டு

மறைத்து மூடி விட்டு முறைத்துப் பார்ப்பதென்ன.. பார்ப்பதென்ன

உதட்டின் மீது ரெண்டு பழத்தை ஆடவிட்டு

உலக இன்பந்தன்னை உருகி ஓடவிட்டு.. ஓடவிட்டு

துடிக்கும் ஏழை நெஞ்சை நெஞ்சை 

அடக்கித் தூங்க விட்டு

நடிப்பதென்ன.. கொஞ்சம் நடந்து வாடி சிட்டு

அடி வாடி என் சிட்டு


அடடா இது என்ன கண்ணா நீ

அந்தர லோகத்து பெண்ணா ஓ

அடடா இது என்ன கண்ணா நீ

அந்தர லோகத்து பெண்ணா

அந்தர லோகத்து பெண்ணா வா வா 

அந்தர லோகத்து பெண்ணா


அழகுக்கு ஏனடி வஞ்சம் அடி

அழகுக்கு ஏனடி வஞ்சம்

அடைந்து விட்டோமடி தஞ்சம்

தேடுதடி மலர் மஞ்சம்

சிரிப்புக்கு என்னடி பஞ்சம் ஹேய் (பாரடி)


ஆசையை பாரடி தங்கம்- இவர்

அழகிலே அ னா சிங்கம் ஹோ ஹோ

அழகிலே அ னா சிங்கம் 


அறுபதாக இவர் அழகு தோன்றுதடி.. தோன்றுதடி

இருபதாக இவர் மனது மாறுதடி.. மாறுதடி

ஒருவராக வர வீரம் இல்லையடி.. இல்லையடி

இருவராக வந்து ஏய்க்கப் பார்க்குதடி.. பார்க்குதடி

ஆண்களாக இவர் தோன்றவில்லையடி.. இல்லையடி

ஆசைக்கேற்றபடி ஆளு இல்லையடி.. ஆளு இல்லையடி

பெண்கள் கையில் தினம் பூசை வாங்குவதை

பெருமையாக கருதும் வீரரடி


ஆசையை பாரடி தங்கம்- இவர்

அழகிலே அ னா சிங்கம் ஹோ ஹோ

ஆசையை பாரடி தங்கம்- இவர்

அழகிலே அ னா சிங்கம் ஹோ ஹோ


மாப்பிள்ளை ராஜா நில்லு

என் வார்த்தைக்கு பதில் சொல்லு

நெருங்காதே இது முள்ளு

தருவதை வாங்கிக்  கொள்ளு (பைத்தியமே) (பாரடி)