Wednesday, June 18, 2025

ENNAI THEDI KADHAL ENRA VARTHAI ANUPPU - KADHALIKKA NERAMILLAI SERIAL

 


படம் :  காதலிக்க நேரமில்லை தொலைக்காட்சி தொடர் 
பாடல் :  தேன்மொழி தாஸ் 
குரல் :  சங்கீதா ராஜேஸ்வரன் 
இசை :  விஜய் ஆண்டனி 


என்னைத்தேடி காதல் என்ற  வார்த்தை அனுப்பு 
உன்னைத்தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன் 
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன் 
செய்தியனுப்பு . . ஹோ . .

என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும்  
உன்னிடத்தில் கொண்டுவர  தெரியவில்லை 
காதலதை சொல்லுகின்ற வழி தெரிந்தால் 
சொல்லியனுப்பு . . ஹோ . .

பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன் 
மரங்கள்  கூட நடப்பது போல நினைத்துக்கொள்கிறேன் 
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்  
கனவில் மட்டும் காதல் செய்து இரவைக் கொல்கிறேன்..

என்னைத்தேடி காதல் என்ற  வார்த்தை அனுப்பு 
உன்னைத்தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன் 
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன் 
செய்தியனுப்பு . . ஹோ . .

பஜரே ரே மானஸ ஸ்ரீ ரகுவீரம்..
பஜரே ரே மானஸ..

யாரோ உன் காதலில் வாழ்வது யாரோ 
உன் கனவினில் நிறைவது யாரோ 
என் சலனங்கள் தீர்த்திட வாராயோ 
ஏனோ என் இரவுகள் நீள்வது ஏனோ 
ஒரு பகலென சுடுவது ஏனோ 
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ 
காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு 
காதலிக்க அங்கு நேரமில்லையா . .
இலையைப்  போலென் இதயம் தவறி விழுதே.. 

என்னைத்தேடி காதல் என்ற  வார்த்தை அனுப்பு 
உன்னைத்தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன் 
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன் 
செய்தியனுப்பு . . ஹோ . .


பஜரே ரே மானஸ ஸ்ரீ ரகுவீரம்..
பஜரே ரே மானஸ..


காதல் ஒரு இலையுதிர்க்  காலமாய் மாறும் 
என் நினைவுகள் சருகுகள் ஆகும் 
அந்த நேரத்தில் மழையென வாராயோ 
ஏதோ ஒரு பறவையின் வடிவினில் கூட 
ஒரு சாலையில் எதிர்ப்படுவாயா 
உன் காதலை சிறகென தாராயா 
காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு 
காதலிக்க அங்கு நேரமில்லையா . .
நினைக்கும் போதென்  நிழலும் ஏனோ சுடுதே . .

என்னைத்தேடி காதல் என்ற  வார்த்தை அனுப்பு 
உன்னைத்தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன் 
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன் 
செய்தியனுப்பு . . ஹோ . .

என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும்  
உன்னிடத்தில் கொண்டுவர  தெரியவில்லை 
காதலதை சொல்லுகின்ற வழி தெரிந்தால் 
சொல்லியனுப்பு . . ஹோ . .

பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன் 
மரங்கள்  கூட நடப்பது போலே  நினைத்துக்கொள்கிறேன் 
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்  
கனவில் மட்டும் காதல் செய்து இரவைக் கொல்கிறேன்..